![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN 10th Result 2022: விழுப்புரம் மாவட்டம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் தேர்ச்சி விவரம்
விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மொத்த தேர்ச்சி சதவீதம் 90.17.
![TN 10th Result 2022: விழுப்புரம் மாவட்டம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் தேர்ச்சி விவரம் Villupuram district Tamil Nadu 10th Exam Result 2022 Villupuram TN 10th Result 2022: விழுப்புரம் மாவட்டம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் தேர்ச்சி விவரம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/20/99ac73ee5a3dca433c04d959fb841759_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் 6ம் தேதி துவங்கியது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 120 மையங்களில், 25 ஆயிரத்து 565 மாணவர்கள் எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், நடந்த தேர்வில் 24 ஆயிரத்து 652 மாணவர்கள் தேர்வு எழுதினர். மீதமுள்ள 913 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இதேபோன்று, தனித்தேர்வர்கள் 689 பேரில், 626 பேர் தேர்வு எழுதினர். மீதமுள்ள 63 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு கண்காணிப்பு பணியில் 157 பேர் பறக்கும் படை அலுவலர்களாக ஈடுபடுத்தப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தமாக 913 பேர் ஆப்சென்டாகினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 229 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இந்த நிலையில் 7595 மாணவர்கள் 8219 மாணவிகள் என மொத்தம் 15,814 பேர் தேர்வு எழுதினர். இதில் 7595 மாணவர்களில் 6490 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 1103 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். 8219 மாணவிகளில் 7770 மாணவிகள் தேர்ச்சியும், 449 மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவிதம் 90.17 சதவிதம் ஆகும்.
மேலும், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிட்டார். 93.76 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் பொதுத் தேர்வு தொடங்கி மே 28ம் தேதி நிறைவுற்றது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 8 லட்சத்து 37ஆயிரத்து 317 பேர் எழுதியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 140க்கும் மேற்பட்ட மையங்களில் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றது. இந்த பணியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததையொட்டி பனிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முடிவுகளை வெளியிட்டார். www.tnresults.nic.in,www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)