மேலும் அறிய

AISHE report: வெளியான உயர்கல்வி ஆய்வறிக்கை: இந்தியாவிலேயே உ.பி.யில்தான் அதிகக் கல்லூரிகள்- தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?

AISHE report 2021 22: மத்தியக் கல்வித் துறை சார்பில் 2021- 22ஆம் ஆண்டுக்கான உயர் கல்வி அகில இந்திய ஆய்வறிக்கை (All India Survey on Higher Education - AISHE) வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசத்தில்தான் அதிக அளவிலான கல்லூரிகள் அமைந்துள்ளன. இந்தப் பட்டியலில் தமிழ்நாடு 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

மத்தியக் கல்வித் துறை சார்பில் 2021- 22ஆம் ஆண்டுக்கான உயர் கல்வி அகில இந்திய ஆய்வறிக்கை (All India Survey on Higher Education - AISHE) வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்காக 42,825 கல்லூரிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 60 சதவீதம் பொதுவானவை. 8.7 சதவீதக் கல்லூரிகள் கல்வி, ஆசிரியர் கல்வி சார்ந்தவை. 6.1 சதவீதக் கல்லூரிகள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தவை. 4.3 சதவீதம் நர்சிங் கல்லூரிகளாகவும் 3.5 சதவீதம் மருத்துவக் கல்லூரிகளாகவும் இருக்கின்றன.

இந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளதாவது:

’’உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 8,375 கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு 8,114 கல்லூரிகளாக இருந்தது. இங்கு ஒவ்வொரு லட்சம் மாணவ - மாணவிகளுக்கும் தலா 30 கல்லூரிகள் அமைந்துள்ளன. 

ஒவ்வொரு லட்சம் மாணவ - மாணவிகளுக்கும் 66 கல்லூரிகள்

தொடர்ந்து இரண்டாவதாக மகாராஷ்டிராவில் 4,692 கல்லூரிகள் உள்ளன. அதேபோல கர்நாடகாவில், 4,430 கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஒவ்வொரு லட்சம் மாணவ - மாணவிகளுக்கும் 66 கல்லூரிகள் அமைந்துள்ளன.  

ராஜஸ்தானில், 3,934 கல்லூரிகள் அமைந்துள்ளன. இந்தப் பட்டியலில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது.  இங்கு, உயர் கல்வியைக் கற்பிக்க 2,829 கல்லூரிகள் உள்ளன. மத்தியப் பிரதேசத்தில், 2,702 கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் 3 இடங்களுக்குப் பிறகான பட்டியலில் ராஜஸ்தான், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், குஜராத், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களும் இணைந்துள்ளன. இந்த மாநிலங்கள் ஒவ்வொன்றும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு குறைந்தது 30 அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளைக் கொண்டுள்ளன.

அசத்தும் கர்நாடகா

கர்நாடக மாநிலத்தில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு 66 கல்லூரிகள் அமைந்துள்ளன. அதைத் தொடர்ந்து தெலுங்கானா (52), ஆந்திரப் பிரதேசம் (49), இமாச்சலப் பிரதேசம் (47), புதுச்சேரி (53), கேரளா (46) என்ற வீதத்தில் உயர் கல்விக்கான கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மாவட்டங்களைப் பொறுத்தவரை, பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிக அளவிலான கல்லூரிகள் இருக்கின்றன. இங்கு மட்டும் 1, 106 கல்லூரிகள் அமைந்துள்ளன. தொடர்ந்து ஜெய்ப்பூர் (703), ஹைதராபாத் (491), புனே (475), பிரயாக்ராஜ் (398), ரங்காரெட்டி (349), போபால் (344), காஜிபூர் (333), சிகார் (330) மற்றும் நாக்பூர் (326) என்ற அளவில் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மாணவர் சேர்க்கை எப்படி?

2020- 21-ல் 4.14 கோடியாக இருந்த உயர் கல்வி மாணவர்கள் சேர்க்கை, 2021- 22ஆம் ஆண்டில், 4.33 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2014- 15ஆம் கல்வி ஆண்டில், 3.42 கோடியாக இருந்தது. அதேபோல கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2014- 15ஆம் ஆண்டில், 1.57 கோடியாக இருந்த மாணவிகளின் எண்ணிக்கை, 2021- 22ஆம் கல்வி ஆண்டில், 2.07 கோடியாக அதிகரித்துள்ளது. 

2014- 15ஆம் கல்வி ஆண்டில் இருந்து, புதிதாக 341 பல்கலைக்கழகங்கள்/ கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல, பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் 2021- 22ஆம் ஆண்டில், 6.94 லட்சம் பேராக அதிகரித்துள்ளது’’.

இவ்வாறு உயர் கல்வி அகில இந்திய ஆய்வறிக்கை (All India Survey on Higher Education - AISHE) தெரிவித்துள்ளது.

 2021- 22ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை முழுமையாகவும் விரிவாகவும் காண: https://aishe.gov.in/aishe/viewDocument.action;jsessionid=6253EBC7F0BF32541F8AD001956F1094?documentId=353 என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget