மேலும் அறிய

Part Time Teachers: நிறைவேற்றாத வாக்குறுதி; பணிநிரந்தரம் செய்க- பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் அறிவிப்பு

13 ஆண்டாக தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

திமுக சட்டமன்ற தேர்தல்‌ வாக்குறுதி 181-ன்‌ படி பகுதிநேர ஆசிரியர்களின்‌ பணி நிரந்தரக்‌ கோரிக்கையை நிறைவேற்றக்கோரி உண்ணாநிலைப்‌ போராட்டம்‌ என்று பகுதிநேர ஆசிரியர்‌ சங்கங்களின்‌ ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.‌

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம், தமிழக அனைத்து சிறப்பாசிரியர்கள்‌ சங்கம், தமிழக சிறப்பாசிரியர்கள்‌ சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள்‌ சங்கம் ஆகியவை இணைந்து பகுதிநேர ஆசிரியர்‌ சங்கங்களின்‌ ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி உள்ளன. இதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறி உள்ளதாவது:

’’அரசுப் பள்ளிகளில்‌ 15,169 பகுதி நேர ஆசிரியர்கள்‌ முறையான நியமனத்தில்‌ தமிழக மாணவர்களின்‌ பன்முக திறன்களை மேம்படுத்தும்‌ பொருட்டு உடற்கல்வி, கணினி, தையல்‌, இசை, ஓவியம்‌, தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும்‌ வாழ்வியல்‌ திறன்‌ ஆகிய பாடப்பிரிவுகளில்‌ ரூபாய்‌ 12,500/- தொகுப்பூதியத்தில்‌ பணியாற்றி வருகிறோம்‌.

13 கல்வியாண்டுகளாக பணி நிரந்தரப்படுத்த கோரிக்கை

13 கல்வியாண்டுகளாக பணி நிரந்தரப்படுத்த பலமுறை கோரிக்கை மற்றும்‌ போராட்டங்கள்‌ வாயிலாக வலியுறுத்தியும்‌ பணி நிரந்தரப்படுத்தப் படாமல்‌வாழ்வாதாரத்தை இழந்தும்‌ சமுதாயத்தில்‌ மதிப்பிழந்த போதிலும்‌ அரசுப் பள்ளி மாணவர்‌ நலன் கருதி பணியாற்றி வருகிறோம்.

எங்கள்‌ வேதனை அறிந்த கலைஞர் கருணாநிதியைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ‌ஸ்டாலினும் தேர்தல்‌ அறிக்கையில்‌ ( 2016 மற்றும்‌ 2021 ) பகுதி நேர ஆசிரியர்கள்‌ பணி நிரந்தரம்‌ செய்யப்படுவார்கள்‌ என்று அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவார்கள்‌ என்ற நம்பிக்கையுடன்‌ உள்ளோம்‌.

கடந்த காலங்களில்‌ வாழ்வாதார பணிநிரந்தர கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர்‌ மற்றும்‌ கல்வி அமைச்சரின்‌ கவனத்தை பெற கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டம்‌ மற்றும்‌ உண்ணாநிலைப்‌ போராட்டம்‌ நடைபெற்றது. அதனை தொடர்ந்து உயர்‌ அதிகாரிகளுடன்‌ பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும்,‌ நிதித்துறை ஒப்புதல்‌ இல்லை என்பதும்‌ 12,000-க்கும்‌ மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்‌ குடும்ப வாழ்வாதாரம்‌ காக்கும்‌ கோரிக்கை நிறைவேறாமல்‌ உள்ளதும்‌ எங்களுக்கு பெரும்‌ ஏமாற்றத்தையும்‌ வருத்தத்தையும்‌ அளிக்கிறது.

செப். 12 எழும்பூரில் உண்ணாரவிரதப் போராட்டம்

எனவே எங்கள்‌ கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின்‌ தலைநகர்‌ சென்னையில்‌ ராஜ ரத்தினம்‌ மைதானம்‌ அருகில்‌ பகுதி நேர ஆசிரியர்களின்‌ பணி நிரந்தர கோரிக்கையை வழியுறுத்தி செப்டம்பர்‌ 12-09-2024 வியாழக்கிழமை காலை 10 மணி அளவில்‌ 12,200/- பகுதிநேர ஆசிரியர்‌ குடும்பங்களுடன்‌ உண்ணாநிலை போராட்டம்‌ நடத்த உள்ளோம்‌. இதனால் முதல்வர்‌ மற்றும்‌ கல்வி அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்‌’’.

இவ்வாறு பகுதி நேர ஆசிரியர்‌ சங்கங்களின்‌ ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ஜிப்மர் முதுநிலை செவிலியர் நுழைவுத் தேர்வு: 124 இடங்களுக்கு கடும் போட்டி, முடிவுகள் ஆகஸ்டு 10!
ஜிப்மர் முதுநிலை செவிலியர் நுழைவுத் தேர்வு: 124 இடங்களுக்கு கடும் போட்டி, முடிவுகள் ஆகஸ்டு 10!
ஆன்லைனில் ஒரு கிக்... ஹாஸ்டலில் ஒரு சீட்! மயிலாடுதுறை அரசு சமூகநீதி விடுதிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைனில் ஒரு கிக்... ஹாஸ்டலில் ஒரு சீட்! மயிலாடுதுறை அரசு சமூகநீதி விடுதிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
TN Heat Wave : இன்று வெளியே போறீங்களா உஷாரா இருங்க.! வெப்ப அலை வீசப்போகுது- வானிலை மையம் எச்சரிக்கை
இன்று வெளியே போறீங்களா உஷாரா இருங்க.! வெப்ப அலை வீசப்போகுது- வானிலை மையம் எச்சரிக்கை
Rasi Palan Today (15-07-2026): மேஷத்துக்கு செலவு.. கன்னிக்கு கவலை.. உங்க ராசிக்கு இன்று நல்லது நடக்குமா? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (15-07-2026): மேஷத்துக்கு செலவு.. கன்னிக்கு கவலை.. உங்க ராசிக்கு இன்று நல்லது நடக்குமா? - பலன்கள் இதோ!
Embed widget