மேலும் அறிய

கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

கல்வி என்பது ஒரு அடிப்படை உரிமை. அது வணிகமாக மாறக்கூடாது. பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எந்தவித சுரண்டலுக்கும் உள்ளாகாமல் இருப்பதை உறுதி செய்வது தமிழக அரசின் கடமையாகும்- ஸ்ரீகாந்தி ராமதாஸ்.

பள்ளிக் கல்வியில் கட்டண வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய தமிழக அரசும் , தனியார் பள்ளிக் கல்வி இயக்குனரகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட அதிகமாக தொகைகள் வசூலிக்கப்படுவதாக பெற்றோர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

குறிப்பாக, பொருளாதார ரீதியாக பின்தங்கி  RTE (Right to Education) திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களிடம்கூட புத்தகங்கள், நோட்டுகள், சிறப்பு கட்டணம், பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் கூடுதல் தொகைகள் பெறப்படுவதாக கூறப்படுவது மிகுந்த வேதனைக்குரிய ஒன்றாகும்.

கல்வி வணிகமாக மாறக்கூடாது..

கல்வி என்பது ஒரு அடிப்படை உரிமை. அது வணிகமாக மாறக்கூடாது. பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எந்தவித சுரண்டலுக்கும் உள்ளாகாமல் இருப்பதை உறுதி செய்வது தமிழக அரசின் கடமையாகும்.

எனவே, தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிக் கல்வி இயக்குனரகம் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஒவ்வொரு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கும் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரங்களை பொதுவெளியில் தெளிவாக வெளியிட வேண்டும்.

பள்ளி வளாகத்தின் முக்கிய இடங்களில் மற்றும் பள்ளியின் இணையதளங்களில் கல்விக் கட்டண விவரங்களை கட்டாயமாக காட்சிப்படுத்த வேண்டும்.

மறைமுக கட்டணங்கள் வசூல் கூடாது

RTE திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களிடமிருந்து எந்தவித மறைமுக கட்டணங்களும் வசூலிக்கப்படாததை உறுதி செய்ய தனி கண்காணிப்பு அமைப்பு உருவாக்க வேண்டும்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி கூடுதல் தொகைகள் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர்கள் அளிக்கும் புகார்களை விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்க தனியார் பள்ளிக் கல்வி இயக்குனரகத்தில் சிறப்பு புகார் தீர்வு மையம் அமைக்க வேண்டும்.

வெளிப்படைத் தன்மை, பொறுப்புணர்வு

பள்ளிகளின் கட்டண நிர்ணய முறையில் முழுமையான வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வு கொண்ட நடைமுறைகளை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.

மாணவர்களின் கல்வி உரிமையையும், பெற்றோர்களின் பொருளாதார நலனையும் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கல்வி சேவையாக இருக்க வேண்டும்; வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படக்கூடாது என்பதே சமூகத்தின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு’’ என்று ஸ்ரீகாந்தி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Embed widget