மேலும் அறிய

TNPSC TRB Exam: கட்டாயமில்லை; டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆஃபர் அளித்த அரசு

டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி தேர்வு, காவலர் தேர்வு என்று அனைத்து வகையான போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ்த்தாள் தேர்வை எழுதுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி தேர்வு, காவலர் தேர்வு என்று அனைத்து வகையான போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ்த்தாள் தேர்வை எழுதுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்துத் தெரிவு முகமைகளால்‌ நடத்தப்படும்‌ போட்டித்‌ தேர்வுகளில்‌ தமிழ்‌ மொழித்‌ தகுதித்‌ தேர்வினை எழுதுவதிலிருந்து மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு விலக்களித்து, ஆணை‌ வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

’’அரசுத்‌ துறைகளில்‌ உள்ள பணியிடங்கள்‌ அனைத்திலும்‌ தமிழக இளைஞர்கள்‌ பெருமளவில்‌ நியமனம்‌ பெற ஏதுவாக, மாநிலத்தின்‌ தெரிவு முகமைகளால்‌ நடத்தப்படும்‌ அனைத்துப்‌ போட்டித்‌ தேர்வுகளிலும்‌ தமிழ்மொழி தகுதித்தாள்‌ கட்டாயமாக்கப்பட்டு ஆணைகள்‌ வெளியிடப்பட்டன. அவ்வரசாணைக்கிணங்க, தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌, போட்டித்‌ தேர்வுகளில்‌ தமிழ்‌ மொழித்‌ தாளினை கட்டாயத்தாளாக இணைத்து, அதற்கேற்ப அறிவிக்கைகளை வெளியிட்டு, தெரிவு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது.

செவித்திறன்‌ குறைபாடு உள்ளவர்களின்‌ பெற்றோர்‌ சங்கத்தின்‌ மனுவில்‌, காது கேளாத மற்றும்‌ வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள்‌, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைக்‌ கற்க சிரமப்படுவார்கள்‌ என்றும்‌, இம்மாணவ மாணவியர்கள்‌ சிலர்‌ முன்பருவப் பள்ளி முதல்‌ பட்டப்படிப்பு வரை முழுமையாக ஆங்கில வழிக்‌ கல்வியில்‌ மட்டுமே கல்வி கற்றிருப்பார்கள்‌ எனத்‌ தெரிவித்து தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படுகின்ற குரூப் 4 பதவிகளுக்கான போட்டித்‌ தேர்வில்‌ இத்தேர்வர்களுக்கு தமிழ்‌ மொழித்‌ தகுதித்‌ தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து, அவர்களுக்கென தனியாக பொது ஆங்கிலத் தாளினை நடத்தக் கோரியுள்ளனர்‌.

மேற்காணும்‌ கோரிக்கை குறித்து மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறையுடன்‌ கலந்தாலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் கட்டாயத் தமிழ்மொழி தகுதித்‌ தேர்வினை எழுதுவதற்கு மாற்றுத்‌ திறனாளிகளுக்கு விலக்களித்து அரசு பின்வருமாறு ஆணையிடுகிறது:

  • தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌, நடத்தப்படும்‌ குரூப்  I,II, II-A ஆகிய இரண்டு நிலைகளைக்‌ கொண்ட தேர்வுகளில்‌, முதன்மை  எழுத்துத்தேர்வில்‌ கட்டாய தமிழ்மொழித்தாளானது, தகுதி தேர்வாக நடத்தப்படுகிறது. இதுபோன்ற தேர்வுகளில்‌ கட்டாயத்‌ தமிழ்மொழி தகுதித்‌ தாளினை எழுதுவதிலிருந்து மாற்றுத்‌ திறனாளிகளுக்கு விலக்களிக்கப்படுகிறது.
  • தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌, நடத்தப்படும்‌  III, IV, VII-B, VIII போன்ற ஒரே நிலை கொண்ட தேர்வுகளில்‌ தமிழ்‌ மொழித்தாளானது, தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்வாக நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளில்‌, பள்ளி/ கல்லூரிகளில் ஆங்கில மொழிப்‌ பாடம்‌ மட்டுமே படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, தமிழ்‌ மொழித்தாள்‌ எழுதுவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. அதற்கு பதில்‌ தரவரிசை மதிப்பீடு செய்வதற்காக, அவர்களுக்கென்று தனியாக பொது ஆங்கிலத்தேர்வு நடத்தப்படும்‌. (இத்தேர்வுகளில்‌ மொழி பெயர்ப்புப்பகுதி இடம்‌ பெறாது).
  • கட்டாய தமிழ்‌ மொழித்‌ தாளிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான விலக்கு, தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ மட்டுமல்லாமல்‌, மாநிலத்தின்‌ மற்ற தெரிவு முகமைகளால்‌ நடத்தப்படும்‌ அனைத்து போட்டித்‌ தேர்வுகளுக்கும்‌ மற்றும்‌ நியமன அலுவலர்களால்‌ தேவைப்படும்‌ நேர்வுகளில்‌ நடத்தப்படும்‌ எழுத்துத்‌ தேர்வுகளுக்கும்‌ பொருந்தும்‌.


TNPSC TRB Exam: கட்டாயமில்லை; டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆஃபர் அளித்த அரசு

  • இவ்விலக்கு 40 சதவிதத்திற்கும்‌ குறைவான குறைபாடுகளைக்‌ கொண்ட மாற்றுத்‌ திறனாளிகளுக்கும்‌ பொருந்தும்‌.
  • இவ்விலக்கினைப் பெற விரும்பும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ உரிய மாற்றுத்திறனாளி சான்றிதழைச் சமர்ப்பித்தல்‌ வேண்டும்‌’’.

இவ்வாறு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

UPSC: ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு நனவாக கடைசி வாய்ப்பு! UPSC தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: உடனே விண்ணப்பிங்க!
UPSC: ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு நனவாக கடைசி வாய்ப்பு! UPSC தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: உடனே விண்ணப்பிங்க!
கூட்டுறவுத் தேர்வு முடிவுகள் தாமதம்: மாணவர்களை வஞ்சிக்கும் திமுக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கூட்டுறவுத் தேர்வு முடிவுகள் தாமதம்: மாணவர்களை வஞ்சிக்கும் திமுக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பொன்னான வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க.. 2026-27ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு!
பொன்னான வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க.. 2026-27ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு!
கல்வியில் சாதித்த தமிழ்நாடு: IIT, வெளிநாட்டு கனவுகளை நனவாக்கிய 2500+ அரசுப்பள்ளி மாணவர்கள்!
கல்வியில் சாதித்த தமிழ்நாடு: IIT, வெளிநாட்டு கனவுகளை நனவாக்கிய 2500+ அரசுப்பள்ளி மாணவர்கள்!
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP NADU Exclusive: ஆலங்குடிக்கு செய்தது என்ன? சாதனைகளை அடுக்கிய அமைச்சர் மெய்யநாதன்- ஏபிபி நாடுக்கு சிறப்பு பேட்டி
ABP NADU Exclusive: ஆலங்குடிக்கு செய்தது என்ன? சாதனைகளை அடுக்கிய அமைச்சர் மெய்யநாதன்- ஏபிபி நாடுக்கு சிறப்பு பேட்டி
ABP Nadu Exclusive: நடைபயணம், மக்கள் சந்திப்பு, இளையராஜா பாடல்கள்.. அமைச்சர் மெய்யநாதனின் காலைப் பொழுது இப்படித்தான்!
ABP Nadu Exclusive: நடைபயணம், மக்கள் சந்திப்பு, இளையராஜா பாடல்கள்.. அமைச்சர் மெய்யநாதனின் காலைப் பொழுது இப்படித்தான்!
ஓ.பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூரில் பரபரப்பு! அதிமுக மீட்பாரா? எதிர்காலம் என்ன? முக்கிய அறிவிப்பு!
ஓ.பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூரில் பரபரப்பு! அதிமுக மீட்பாரா? எதிர்காலம் என்ன? முக்கிய அறிவிப்பு!
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
UPSC: ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு நனவாக கடைசி வாய்ப்பு! UPSC தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: உடனே விண்ணப்பிங்க!
UPSC: ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு நனவாக கடைசி வாய்ப்பு! UPSC தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: உடனே விண்ணப்பிங்க!
சத்தமில்லாமல் முடிந்த மூன்று உயிர்கள்! அதிர்ச்சியில் உறைந்த அக்கம்பக்கத்தினர்.. நடந்தது என்ன?
சத்தமில்லாமல் முடிந்த மூன்று உயிர்கள்! அதிர்ச்சியில் உறைந்த அக்கம்பக்கத்தினர்.. நடந்தது என்ன?
Sani Peyarchi 2026 Date: வரப்போது சனிப்பெயர்ச்சி! எப்போது? எந்த ராசிக்கு போறாரு தெரியுமா?
Sani Peyarchi 2026 Date: வரப்போது சனிப்பெயர்ச்சி! எப்போது? எந்த ராசிக்கு போறாரு தெரியுமா?
கூட்டுறவுத் தேர்வு முடிவுகள் தாமதம்: மாணவர்களை வஞ்சிக்கும் திமுக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கூட்டுறவுத் தேர்வு முடிவுகள் தாமதம்: மாணவர்களை வஞ்சிக்கும் திமுக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Embed widget