மேலும் அறிய

Group 4 Vacancies: குரூப் 4 காலி இடங்கள் மீண்டும் உயர்த்தப்படுமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி தொடர்பு மையத்தில் காலி இடங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்படுமா என்று அதிக முறை கேள்வி எழுப்பப்பட்டது

குரூப் 4 காலிப் பணி இடங்களின் எண்ணிக்கை மீண்டும் உயர்த்தப்படுமா என்ற கேள்வி குறித்து, டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி 6,244 குரூப் 4 காலி இடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்விற்கு 20,36,774 விண்ணப்பதாரர்கள்‌ தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்‌. தேர்வை சுமார் 16 லட்சம் பேர் எழுதினர். தொடர்ந்து ஜூன் 18ஆம் தேதி தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியாகின.

அக்டோபர் 28 வெளியான தேர்வு முடிவுகள்

தொடர்ந்து தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டன. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை 92 வேலை நாட்களில் வெளியிட்டு அசத்தியது. 

போதாதற்கு குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையும் 9491 ஆக உயர்த்தப்பட்டது. ஆரம்பத்தில் 6,244 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்ற நிலையில், கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.

9491 ஆக அதிகரிப்பு

இதன் மூலம் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படும் காலி இடங்களின் எண்ணிக்கை, 6,724 ஆக உயர்ந்தது. தேர்வு முடிவு வெளியான நிலையில், அன்றே மீண்டும் காலி இடங்கள் அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம், மொத்த இடங்களின் எண்ணிக்கை 9491 ஆக அதிகரித்தது. மொத்தத்தில் 3,247 இடங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தொடர்பு மையத்தில் காலி இடங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்படுமா என்று அதிக முறை கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி பதிலளித்துள்ளது. இதுபற்றி இன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

’’காலிப்பணியிடங்கள்‌ எண்ணிக்கை உயர்த்தப்படுமா?

அறிவிக்கையில்‌ வெளியிடப்பட்ட காலிப் பணியிடங்களின்‌ எண்ணிக்கை 6244-ல் இருந்து 3247 காலிப்பணியிடங்கள்‌ கூடுதலாக சேர்க்கப்பட்டு தற்போது 9491 ஆக உயர்த்தப்பட்டுள்ளது’’

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இனி குரூப் 4 காலி இடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

மாற்றுத் திறனாளி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படுமா?

அதேபோல அறிவிக்கை தேதிக்கு முன்னர் உரிய படிவத்தில் பெறப்பட்ட மாற்றுத் திறனாளி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்து உள்ளது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்?
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்
"நான் இப்படி செய்வனோ..?" - ஜி.கே.மணி உருக்கம்
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்?
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்
"நான் இப்படி செய்வனோ..?" - ஜி.கே.மணி உருக்கம்
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Crime: முடிக்கு ஆசைப்பட்டு உசுரே போச்சே..! அனுஷ்கா சம்பவம் - பல் டாக்டர் பாக்குற வேலையா இது
Crime: முடிக்கு ஆசைப்பட்டு உசுரே போச்சே..! அனுஷ்கா சம்பவம் - பல் டாக்டர் பாக்குற வேலையா இது
காலையிலேயே கொடூரம்.. அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து! பரிதாபமாக பறிபோன 4 உயிர்கள்
காலையிலேயே கொடூரம்.. அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து! பரிதாபமாக பறிபோன 4 உயிர்கள்
CSK Dhoni: அவசரப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள், கடுப்பான தோனி எடுத்த முடிவு - ருதுராஜ் காலி? ஏலத்தில் ஜடேஜா?
CSK Dhoni: அவசரப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள், கடுப்பான தோனி எடுத்த முடிவு - ருதுராஜ் காலி? ஏலத்தில் ஜடேஜா?
RCB Vs KKR: ஆர்சிபியின் பயங்கர ஃபார்ம் தொடருமா? KKR பிளே-ஆஃப் வாய்ப்பு இன்று உறுதியாகுமா? புள்ளிப்பட்டியல் நிலவரம்
RCB Vs KKR: ஆர்சிபியின் பயங்கர ஃபார்ம் தொடருமா? KKR பிளே-ஆஃப் வாய்ப்பு இன்று உறுதியாகுமா? புள்ளிப்பட்டியல் நிலவரம்
Embed widget