மேலும் அறிய

TNEA Students Data Leak: பொறியியல் கலந்தாய்வு; கசிந்த 1 லட்சம் மாணவர்களின் மொபைல் எண்கள்; சைபர் கிரைமில் புகார்!

மாணவர்களின் விவரங்களை சுய நலத்துக்காக சில சமூக விஷமிகள் வெளியே கசிய விட்டுள்ளனர். எங்களின் தரப்பில் இருந்து எந்த விவரங்களும் கசியவில்லை.

பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பித்த 1 லட்சம் மாணவர்களின் மொபைல் எண்கள் கசிந்த நிலையில், கலந்தாய்வை நடத்தும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளிக்க உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், அவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. சிறப்புப் பிரிவு இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், தற்போது முதல் சுற்றுக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் சேர விண்ணப்பித்து உள்ள மாணவர்களின் விவரங்கள் மொபைல் எண்களுடன் வெளியாகி உள்ளன. குறிப்பாக 1 லட்சத்துக்கும் அதிகமானோரின் விவரங்கள் தனியார் கல்லூரிகளுக்கான இடைத் தரகர்களுக்கு விற்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்தத் தகவல்கள், 2 3ஆம் கட்டத் தனியார் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

மொபைல் எண்கள் லீக்

ஆண்டும்தோறும் கலந்தாய்வை நடத்தும் டோட் (DOTE) எனப்படும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம், கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை மதிப்பெண்கள், பெயர் உள்ளிட்ட விவரங்களைத் தனது இணையதளத்தில் வெளியிடும். ஆனால் அதில், மாணவர்களுடைய மொபைல் எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் இடம்பெறாது. ஆனால் தற்போது மாணவர்களுடைய மொபைல் எண்களோடு கூடிய விவரங்கள் வெளியே கசிந்துள்ளன.

இதுகுறித்துக் கலந்தாய்வை நடத்தும் தொழில்நுட்ப கல்வி ஆணையர் கூறும்போது, ’’மாணவர்களின் விவரங்களை சுய நலத்துக்காக சில சமூக விஷமிகள் வெளியே கசிய விட்டுள்ளனர். எங்களின் தரப்பில் இருந்து எந்த விவரங்களும் கசியவில்லை. சைபர் கிரைம் போலீஸிடம் இதுகுறித்து புகார் அளிக்க உள்ளோம். அதே நேரத்தில் ஒரு லட்சம் மாணவர்களின் விவரங்கள் கசிந்துள்ளன. அதில், 88.34 சதவீத தொலைபேசி எண்கள் உண்மையானவை இல்லை.

12 % தொலைபேசி எண்கள் சரியானவை

12 சதவீத எண்கள் மட்டுமே சரியானவை. இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தம் இல்லாத தொலைபேசி அழைப்புகள் வந்தால் மாணவர்கள் அவற்றை ஏற்கக் கூடாது, நிராகரிக்க வேண்டும்" என்று தொழில்நுட்பக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், 1800 4250110 என்ற இலவச உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
Attagasam Re Release: அமர்க்களப்படுத்தும் அட்டகாசம் ரீ ரிலீஸ்.. துள்ளிக்குதிக்கும் அஜித் ரசிகர்கள்!
Embed widget