மேலும் அறிய

கல்லூரிகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றிக்கொள்ளலாம்: அரசு அறிவிப்பால் அதிர்ந்துநிற்கும் கல்வியாளர்கள்

தேசிய கல்விக் கொள்கையின்படியே தமிழ்நாடு அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் இதனால், சமூக நீதி பாதிக்கப்படும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.

அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றிக் கொள்ளலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின்படியே தமிழ்நாடு அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் இதனால், சமூக நீதி பாதிக்கப்படும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.

தேசிய கல்விக் கொள்கையின் அம்சமா இது?

தேசிய கல்விக் கொள்கையின்படி, பல்கலைக்கழக மானியக்குழு (நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்) விதி 2023-ஐ, அண்மையில் மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டது. இதன்படி, கல்வி நிறுவனங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற விண்ணப்பிக்கலாம். ஆனால் அதற்கு விண்ணப்பிக்க தொடர்ச்சியாக மூன்று பருவங்களுக்கு நாக் “ஏ” தரத்துடன் (NAAC) 3.01 சிஜிபிஏ பெற்றிருக்கவேண்டும் அல்லது  என்ஐஆர்ஃஎப்-என் சிறப்புப் பிரிவில் தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு முதல் 50 இடங்களுக்குள் இடம்பெற்றிருக்க வேண்டும் அல்லது என்ஐஆர்ஃஎப்-என் ஒட்டுமொத்த தரவரிசையில் தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு முதல் 100 இடங்களுக்குள் வந்திருக்க வேண்டும்.

என்ஏஏசி “ஏ” தரத்தைவிட, குறைந்த மதிப்பை பெற்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அல்லது என்ஐஆர்ஃஎப்-என் தரவரிசையில் 100 இடங்களுக்கு மேல் இடம்பெற்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், யுஜிசி நிபுணர் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்படும். குறைகளை நிவர்த்தி செய்யாதபட்சத்தில் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியைத் திரும்ப பெற யுஜிசி பரிந்துரைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.


கல்லூரிகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றிக்கொள்ளலாம்: அரசு அறிவிப்பால் அதிர்ந்துநிற்கும் கல்வியாளர்கள்

இதற்கிடையே மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி, தமிழக உயர் கல்வித்துறையும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

தடையில்லாச் சான்றிதழை வழங்க வேண்டும்

இதுகுறித்து உயர் கல்வித்துறைச் செயலர் கார்த்திக், துறையின் கீழ் இயங்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். அதில், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற விரும்பும் தனியார் கல்லூரிகளுக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் தடையில்லாச் சான்றிதழை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நவம்பர் மாதம் வெளியான அறிவிப்புக்குத் தற்போது வரை சுமார் 30 கல்லூரிகள் உயர் கல்வித்துறைக்கு விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


கல்லூரிகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றிக்கொள்ளலாம்: அரசு அறிவிப்பால் அதிர்ந்துநிற்கும் கல்வியாளர்கள்

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கியது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத பேராசிரியர் கூறும்போது, ’’பொதுவாக அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு, அவற்றின் கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்கும் அரசு நிதி வழங்கி இருக்கும். இந்த நிலையில், அவற்றுக்கு பல்கலை. அந்தஸ்து வழங்கப்படும்போது அவை அரசின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டிய அவசியம் இருக்காது. தனியார் கல்லூரிகளின் நிலை குறித்துச் சொல்லவே வேண்டாம். இதனால், அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு, கல்வி நிலையங்களில் பின்பற்றப்படாது. கல்விக் கட்டணம் குறைவாக நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதால், கட்டணம் உயரும். சமூக நீதி கேள்விக்கு உள்ளாகும்.

சட்டபேரவையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதித்து எடுக்க வேண்டிய முடிவு இது. ஆனால் தற்போது ஊடகங்களுக்குக் கூடத் தெரிவிக்காமல், தன்னிச்சையாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்’’ என்று தெரிவித்தார்.

கல்வியின் தரம் உயரும்

எனினும் இந்த முன்னெடுப்பால் கல்வியின் தரம் உயரும். ஆனால் அரசு குழு அமைத்து, பல்கலைக்கழகங்களாக மாறும் கல்லூரிகளின் நடவடிக்கையைக் கண்காணிக்க வேண்டும் என்கிறார் மூத்த கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி. இதுகுறித்து அவர் ஏபிபி நாடுவிடம் பேசினார்.

’’தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகள் மாநிலத்தில் அண்ணா பல்கலைக்கழகம், மத்தியில் ஏஐசிடிஇ ஆகிய இரண்டு அமைப்புகளின்கீழ் செயல்பட வேண்டியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் சொல்லும் பாடத்திட்டத்தையே பின்பற்ற வேண்டியுள்ளது. இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது.  

நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டால், யுஜிசி கட்டுப்பாட்டில் செயல்பட்டால் போதும். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தேவைப்படும்போது துணைத் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம்.  தொழில்துறை எதிர்பார்க்கும் வகையில், எந்த பாடத்திட்டத்தை வேண்டுமானாலும் பின்பற்றிக் கொள்ளலாம். இதனால் மாநிலத்தில் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் சுமார் 40 கல்லூரிகள், பல்கலைக்கழகமாக மாறக் காத்திருக்கின்றன.


கல்லூரிகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றிக்கொள்ளலாம்: அரசு அறிவிப்பால் அதிர்ந்துநிற்கும் கல்வியாளர்கள்

என்ன ஆகும்?

இதனால் கல்லூரிகளுக்குள் போட்டி உருவாகும். மாணவர்களுக்கு சிறப்பான கல்வியையும் வேலை உத்தரவாதத்தையும் அளிப்பதற்காக தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பாடத்திட்டம் மேம்படுத்தப்படும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்தும் செயல்பட வேண்டிய நிலை உருவாகும். அதனால் கல்வித் தரம் உயரும். 

அதே நேரத்தில் இட ஒதுக்கீடு கட்டாயம் பாதிக்கப்படும். மாணவர் சேர்க்கை வெளிப்படையாக நடத்தப்படாது. இதனால் கல்லூரிக் கட்டணம் உயரும். 

என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இடங்கள் அளிக்கப்படுகின்றன. நிர்வாக ஒதுக்கீட்டில் வெளிமாநில மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது.

கல்லூரிகளுக்கு நிகர்நிலை பல்கலை. அந்தஸ்து வழங்கினால் தமிழ்நாட்டு மாணவர்கள் பாதிக்கப்படலாம். இதனால் குறைந்தபட்சம் 30 சதவீதமாவது இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும்.  எனினும் இதைக் கண்காணிக்க அரசு குழுவை நியமிக்க வேண்டும்’’ என்று ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.

கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கும் முடிவு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும். அதையும் தாண்டி பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும் கல்வி நிலையங்கள், ஆண்டாண்டு காலமாகப் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டையும் கட்டண சலுகையையும் பின்பற்றுவது உறுதிசெய்யப்பட வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தங்களுக்கு வழங்கப்படும் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடாது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Vijay Meet Students: கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
Rohit Sharma: ஐசிசி தொடர்களில் 3 போட்டிகளில் தான் தோல்வி - ஆனால் 3 கோப்பைகளை இழந்த ரோகித் சர்மா..!
Rohit Sharma: ஐசிசி தொடர்களில் 3 போட்டிகளில் தான் தோல்வி - ஆனால் 3 கோப்பைகளை இழந்த ரோகித் சர்மா..!
Embed widget