மேலும் அறிய

School Reopen: சுட்டெரிக்கும் சூரியன்; மாணவர்களை பாதுகாக்க பள்ளிகளில் சிறப்பு நடவடிக்கைகள்- எழும் கோரிக்கை!

School Reopen in Tamilnadu: பள்ளிகளில் மாணவர்களை கோடை வெப்பத்தில் இருந்து  பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம்- பாமக.

தமிழகத்தின் பல பகுதிகளில் கடும் வெப்பமும் அனல் காற்றும் தொடர்வதால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக (ராமதாஸ் அணி) செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

 இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

 ’’தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து, நாளை (ஜூன் 4 ஆம் தேதி) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகின்றது, இந்த நடவடிக்கையை வரவேற்கும் அதே நேரத்தில், தற்போதும் தமிழகத்தின் பல பகுதிகளில் கடும் வெப்பமும் அனல் காற்றும் தொடர்வதால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

 கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக மாணவர்களுக்கு நீரிழப்பு, தலைச்சுற்றல், மயக்கம், உடல் சோர்வு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மாணவர்களின் உடல்நிலை மாற்றங்களை உடனடியாகக் கண்டறிந்து தேவையான முதலுதவி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும்.

 போதிய வசதிகள் அவசியம்

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் போதுமான அளவில் சுத்தமான குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மாணவர்கள் அடிக்கடி தண்ணீர் அருந்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். பள்ளி வளாகங்களில் நிழல் வசதிகள் மேம்படுத்தப்படுவதோடு, காலை வழிபாடு மற்றும் உடற்கல்வி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு நடத்தப்பட வேண்டும்.

மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரும் மற்றும் வீடு திரும்பும் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளி வளாகங்களில் முதலுதவி பெட்டிகள், அவசர மருத்துவ உதவி எண்கள் மற்றும் தேவையான சுகாதார வசதிகள் கட்டாயமாக இருக்க வேண்டும்.

மேலும், புதிய கல்வியாண்டு தொடங்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள்  மற்றும் கல்வி உபகரணங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும். எந்த மாணவரும் அடிப்படை கல்வி உபகரணங்கள் இன்றி வகுப்பறையில் அமர வேண்டிய நிலை ஏற்படக்கூடாது.

ஆரோக்கியமான கல்விச் சூழல் அவசியம்

எதிர்காலத் தமிழ்நாட்டை உருவாக்கப் போகும் மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு என்பது அரசின் முதன்மைக் கடமையாகும். எனவே, பள்ளிகள் திறக்கப்படும் முன்பே மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளிக்கல்வித் துறை உறுதி செய்து, மாணவர்கள் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான கல்விச் சூழலில் கல்வி பயில வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக பாமகவைச் சேர்ந்த ஸ்ரீகாந்தி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஏழை குழந்தைகளை ராஜாக்களாக்கிய முன்னாள் மாணவி; உதவி செய்வதிலும் இப்படியொரு மாண்பா? - திருப்பத்தூரில் நெகிழ்ச்சி
ஏழை குழந்தைகளை ராஜாக்களாக்கிய முன்னாள் மாணவி; உதவி செய்வதிலும் இப்படியொரு மாண்பா? - திருப்பத்தூரில் நெகிழ்ச்சி
விழுப்புரம் நீட் தேர்வர்கள் கவனத்திற்கு.. தேர்வு மையங்கள் மற்றும் பெற்றோர் வாகன நிறுத்தங்கள் முழு விவரம் உள்ளே!
விழுப்புரம் நீட் தேர்வர்கள் கவனத்திற்கு.. தேர்வு மையங்கள் மற்றும் பெற்றோர் வாகன நிறுத்தங்கள் முழு விவரம் உள்ளே!
NEET/JEE புத்தகங்கள்..மாணவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம்... அரசு விடுதிகளில் சேர அரிய வாய்ப்பு!
NEET/JEE புத்தகங்கள்..மாணவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம்... அரசு விடுதிகளில் சேர அரிய வாய்ப்பு!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
Embed widget