![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Annual Exam: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை இறுதித் தேர்வு நிச்சயம் நடத்தப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
TN School Annual Exam: 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு இறுதித் தேர்வுகள் நிச்சயம் நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
![Annual Exam: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை இறுதித் தேர்வு நிச்சயம் நடத்தப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி Tamil Nadu School Class 1 to Class 5 Annual Exam will be conducted- Minister Anbil Mahesh Poyyamozhi Annual Exam: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை இறுதித் தேர்வு நிச்சயம் நடத்தப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/03/5aaa8f5363c09821c79eeb9daa643b9f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு இறுதித் தேர்வுகள் நிச்சயம் நடத்தப்படும் என்றும், இறுதித் தேர்வுகள் இல்லை என்பது பற்றி வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
#BREAKING
— ABP Nadu (@abpnadu) April 3, 2022
1 முதல் 5ஆம் வகுப்பு வரை இறுதித் தேர்வு நிச்சயம் உண்டு ; நடைபெறும்..!
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டம்
இறுதி தேர்வு இல்லை என்று பரவும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்றும் பேட்டி#AnbilMahesh #Exam @Anbil_Mahesh pic.twitter.com/p2ztdk5tSf
முன்னதாக, கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டும் கல்வி ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்தன. இந்த சூழலில், 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (மார்ச் 2) காலை வெளியிட்ட நிலையில், மதியம் முழு தேர்வு அட்டவணை வெளியானது.
பொதுத் தேர்வுகள் மே மாதம் தொடங்கி, அதே மாதத்தில் முடிகின்றன. 10, 11, 12 ஆகிய வகுப்புக்கான 3 பொதுத் தேர்வுகளையும் சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். காலை 10 மணி முதல் மதியம் 1.15 வரை தேர்வுகள் நடைபெறுகின்றன.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் மே 30 வரை பொதுத்தேர்வு நடைபெறும். ஜூன் 17ல் முடிவு வெளியாகின்றன.
பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31ம் தேதி வரை பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. ஜூலை 7ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எப்போதில் இருந்து எப்போது வரை கோடை விடுமுறை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மே 13 வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. அதற்குப் பிறகு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் ஜூன் 13ஆம் தேதி வகுப்புகள் தொடங்குகின்றன.
அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்களும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்புக்கு 12 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)