TN 10th Result 2026: இன்று வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - அரசு இணையதளத்தில் அறிவது எப்படி? நேரடி லிங்க்
Tamil Nadu 10th Result 2026 Declared: தமிழ்நாடு அரசின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அறிவதற்கான, அதிகாரப்பூர்வ இணையதளத்தின் நேரடி இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Tamil Nadu 10th Result 2026 Declared: தமிழ்நாடு அரசின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, வாட்ஸ்-அப் வாயிலாக அறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்:
தமிழ்நாடு அரசு சார்பில் 2025-26 நிதியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த,மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 9 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக 8 லட்சத்து 82 ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளி மாணவர்கள், 25 ஆயிரத்திற்கும் அதிகமான தனித்தேர்வர்கள் மற்றும் 395 சிறைவாசிகள் உள்ளிட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர். அந்த விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்ட நிலையில், தேர்வின் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன.
எங்கு? எப்போது? தேர்வு முடிவுகள் வெளியாகும்?
அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 20ம் தேதி (இன்று) புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனால், சென்னை கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பிறகு வெளியாகும் முதல் பொதுத்தேர்தல் முடிவுகள் இதுவாகும்.
அரசு தளங்கள் - நேரடி லிங்க்
காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டதும், www.tnresults.nic.in , www.dge.tn.gov.in , results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மாணவர்களுக்கான மற்ற வாய்ப்புகள் என்ன?
மேற்குறிப்பிடப்பட்ட வாய்ப்புகள் மட்டுமின்றி, பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணிற்கும், தனித் தேர்வர்கள் தாங்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வாயிலாகவும் தேர்வு முடிவுகள் தெரிவிக்கப்பட உள்ளன.
உடனடி மறுதேர்வுகள்
தேர்ச்சி பெற்றவர்கள் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் மதிப்பெண் பட்டியல் தற்காலிகமானது. பள்ளிகள் மூலம் வழங்கப்படும் அசல் சான்றிதழ்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். தேர்ச்சி பெற தவறிய அல்லது மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள், பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். துணை தேர்வுகளுக்கான தேதிகளும் இன்றே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தேர்வில் தேர்ச்சி பெறும் வாய்ப்பை இழந்த நபர்கள், உடனடியாக துணை தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று, தாமதமின்றி 11ம் வகுப்பில் இணைய வழிவகுக்கிறது. இதுதொடர்பான விரிவான தகவல்களை பள்ளி ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் பெறலாம்.
ட்ரெண்டிங் செய்திகள்






















