மேலும் அறிய

காவல் ஆய்வாளர் நியமனத்தில் பின்பற்றப்படாத இட ஒதுக்கீடு; பொதுப்பிரிவில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை நீக்கக் கோரிக்கை!

சென்னை உயர்நீதிமன்றம், உதவி ஆய்வாளர் தேர்வில் 69% இட ஒதுக்கீட்டை சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் செயல்படுத்திய விதம் தவறு என்றும் தீர்ப்பளித்திருக்கிறது.

காவல் சார் ஆய்வாளர் நியமனத்தில் குழப்பம் தொடர்வதாகவும் 69% இட ஒதுக்கீட்டை செயல்படுத்த தெளிவான கொள்கையை வகுக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

‘’தமிழ்நாடு காவல்துறைக்கு 621 சார் ஆய்வாளர்களை நியமிப்பதற்காக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தயாரித்து வெளியிட்ட பட்டியல் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் தீர்ப்பளித்திருக்கிறது. 69% இட ஒதுக்கீட்டு விதிகள் சரியாக பின்பற்றப்படாததுதான் இதற்கு காரணம். தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து 36 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த புரிதல் கூட தமிழக தேர்வாணையங்களுக்கு இல்லாதது கண்டிக்கத்தக்கது.

இடஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை

தமிழ்நாடு காவல்துறைக்கு 621 சார் ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில்   நடத்தப்பட்ட தேர்வில் இடஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இடஒதுக்கீட்டை பின்பற்றுவதில் நிகழ்ந்த குளறுபடிகளை சரி செய்யும்படி ஆணையிட்டது.

அதன்படி பழைய பட்டியலில் இருந்து 41 பேரை நீக்கி விட்டு, புதிதாக 41 பேர் சேர்க்கப்பட்டதாகக் கூறி கடந்த ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி புதிய பட்டியல் ஒன்றை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதையும் ரத்து செய்திருக்கும் சென்னை உயர்நீதிமன்றம், உதவி ஆய்வாளர் தேர்வில் 69% இட ஒதுக்கீட்டை சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் செயல்படுத்திய விதம் தவறு என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. ஜம்மு & காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பால் வசந்தகுமாரின் கண்காணிப்பில் புதிய பட்டியலைத் தயாரிக்கவும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

69% இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி பணியாளர்களைத் தேர்வு செய்யும் போது, முதலில் பொதுப்போட்டிப் பிரிவுக்கான 31% இடங்கள் தகுதி அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும். அதில் சாதி பார்க்கப்படக்கூடாது. அதன்பின், பின்னடைவுப் பணியிடங்கள் ஏதேனும் இருந்தால், அவை உரிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைக் கொண்டு நிரப்பபட வேண்டும்.

சமூகநீதியின் அடிப்படை

அதன் பிறகுதான் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடங்கள் உரிய வகுப்பினரைக் கொண்டு நிரப்பட வேண்டும். பொதுப்போட்டிப் பிரிவிலோ, பின்னடைவுப் பணியிடங்களிலோ, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது பட்டியனலினத்தவர் நியமிக்கப்பட்டிருந்தால், அவர்களை இட ஒதுக்கீட்டில் பயனடைந்தவர்களாக கருதக்கூடாது என்பதுதான் சமூகநீதியின் அடிப்படை ஆகும்.

ஆனால், இந்த விதியைக் கூட பின்பற்றாமல் காவல்துறை தலைமை இயக்குனர் நிலையிலான அதிகாரியை தலைவராகக் கொண்ட தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், பொதுப்பிரிவிலும், பின்னடைவுப் பணியிடங்களிலும் நியமிக்கப்பட்டவர்களை இட ஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்களாக கணக்கிட்டு இருப்பதுதான் சிக்கலுக்குக் காரணம் ஆகும்.

அதனால், இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த 50&க்கும் மேற்பட்டோருக்கு கிடைக்க வேண்டிய காவல் சார் ஆய்வாளர் பணி பறிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த சிக்கல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் நிலையில் இதில் தமிழக அரசு எந்தத் தலையீடும் செய்யாமல், நடந்தவை அனைத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. இதுவே பெரிய சமூக அநீதியாகும்.

எந்த பயனுமில்லை

தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர் தேர்வில் இட ஒதுக்கீட்டு விதிகள் மீறப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2020ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளுக்கு முதுநிலை ஆசிரியர்களை நியமிப்பதிலும் இதே போன்ற விதிமீறல்கள் நடந்தன. அதனால், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 83 பேரும், பட்டியலினத்தைச் சேர்ந்த 16 பேரும் ஆசிரியர்களாகும் வாய்ப்பை இழந்தனர். இதை தொடக்கத்திலேயே பாட்டாளி மக்கள் கட்சி சுட்டிக்காட்டியது. ஆசிரியர் தேர்வு வாரியத்திலும் முறையீடு செய்தது. ஆனால், எந்த பயனுமில்லை.  

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அமர்வும், இரட்டை நீதிபதிகள் அமர்வும் ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரித்த பட்டியல் செல்லாது என்று தீர்ப்பளித்ததுடன், புதிய பட்டியல் தயாரிக்கவும் ஆணையிட்டன. ஆனாலும், அதை ஏற்கான ஆசிரியர் தேர்வு வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அந்த வழக்கில் 05.03.2021ஆம் நாள் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஆசிரியர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்ததுடன், புதிய தேர்ச்சிப் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று ஆணையிட்டிருந்தது.

சகித்துக்கொள்ள முடியாது

வி.கே.சோபனா வழக்கு என்ற அழைக்கப்படும் அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை பின்பற்றி காவல் சார் ஆய்வாளர்களை தேர்வு செய்யும்படிதான் சென்னை உயர்நீதிமன்றம் இப்போது ஆணையிட்டுள்ளது. இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் தேர்வாணையங்களும், தேர்வு வாரியங்களும் மிகவும் அலட்சியமாக செயல்படுவதையும், விதிகளை மீறுவதையும் சகித்துக் கொள்ள முடியாது. இத்தகைய விதிமீறல்கள் நடைபெறும்போது, தமிழக அரசு தலையிட்டு அதை சரி செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யத் தவறியதன் மூலம் தமிழ்நாடு அரசு சமூகநீதியைக் காக்கும் கடமையிலிருந்து தவறி விட்டது.

இட ஒதுக்கீட்டு விதிகளை தேர்வாணையங்களே மீறும் நிகழ்வுகள் அதிகரித்துள்ள நிலையில், கடந்த காலங்களில் இட ஒதுக்கீட்டு விதிகள் முறையாக பின்பற்றப்பட்டனவா? என்ற ஐயம் எழுகிறது. அதைப் போக்கும் வகையில் கடந்த காலங்களில் 69% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் 69% இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வழங்க வேண்டும். தேர்வுப் பட்டியலைத் தயார் செய்யும் பணியை கண்காணிக்க உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை அரசு நியமிக்க வேண்டும்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Embed widget