மேலும் அறிய

நாட்டிலேயே தலைசிறந்தது தமிழகத்தின் கல்விமுறை: ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி

நம் கல்வி முறைதான் மாணவர்களைச் சிந்திக்க வைக்கிறது. தமிழ்நாட்டின் கல்வி முறையைக் குறை சொல்பவர்களை ஆசிரியர்களே மன்னிக்க மாட்டார்கள்.

நாட்டிலேயே தலைசிறந்த கல்விமுறை தமிழ்நாட்டு கல்வி முறை. நம் கல்வி முறைதான் மாணவர்களைச் சிந்திக்க வைக்கிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தன்னிகரற்ற வகையில், தனித்துவமாகச் செயல்பட்டும் வரும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் இந்தப் பெயர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்று மாற்றப்பட்டது. சென்னை வண்டலூரில் ஆசிரியர் தின நிகழ்வும் விருது விழாவும் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு, விருதுகளை வழங்கி வருகிறார்.  

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ’’தமிழகத்தில் உள்ள கல்வி முறையை சிலர் குறை சொல்வதை என்னால் ஏற்க முடியாது. நாட்டிலேயே தலைசிறந்த கல்விமுறை தமிழ்நாட்டு கல்வி முறை. நம் கல்வி முறைதான் மாணவர்களைச் சிந்திக்க வைக்கிறது.

ஆசிரியர்களே மன்னிக்க மாட்டார்கள்

தமிழ்நாட்டின் கல்வி முறையைக் குறை சொல்பவர்களை ஆசிரியர்களே மன்னிக்க மாட்டார்கள். முன்னணி மருத்துவர்கள் விஞ்ஞானிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அரசுப் பள்ளிகளில் படித்த பலர் இஸ்ரோ விஞ்ஞானிகளாகப் பணியாற்றி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

மாநில பாடத்திட்டத்தின் தரம்

முன்னதாக, சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைபள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது என்றும் பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் பேசிய போது அவர்களின் அறிவுத்திறன் குறைவாக இருந்ததை அறிந்து கொண்டதாகவும் தெரிவித்து இருந்தார்.

அதேபோல, ’’அரசுப் பள்ளிகளில் படிக்கும் 75 சதவீத மாணவர்களுக்கு எண்களை படிக்கத் தெரியவில்லை. 40 சதவீத மாணவர்களால் எழுத்துகளை படிக்க முடியவில்லை. இது மிகவும் ஆபத்தான நிலை. கற்கும் திறன் குறைந்தபோதும் பட்டங்கள் வழங்கப்படுகின்றன’’ என்றும் ஆளுநர் தெரிவித்து இருந்தார். இது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இதற்குத் தன்னுடன் ஆய்வுக்கு வருமாறும், தமிழக பாடத் திட்டம் குறித்து குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து இருந்தார்,

இந்த நிலையில் ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வீட்டைப் பெறும்போதுதான் சுயமரியாதை உயர்கிறது" எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
"நம்பர் 1 பயங்கரவாதி" ராகுல் காந்தி குறித்து மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Phone Call |’’தைரியமா இருங்க’’PHONE-ல் பேசிய முதல்வர்! உத்தரகாண்ட் நிலச்சரிவுDMK VS PMK | ’’உனக்கு யாரு அதிகாரம் கொடுத்தா?’’கடுப்பாகி கத்திய பாமக MLA! திமுக vs பாமகManimegalai Priyanka Fight | மூக்கை நுழைத்த பிரியங்கா? GOOD BYE சொன்ன மணிமேகலை” நீ அவ்ளோ பெரிய ஆளா”Cuddalore News | ”டேய் பஸ்ஸ நிறுத்துடா”போதை ஆசாமி ரகளைசாலையில் அடித்த லூட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வீட்டைப் பெறும்போதுதான் சுயமரியாதை உயர்கிறது" எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
"நம்பர் 1 பயங்கரவாதி" ராகுல் காந்தி குறித்து மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Dhanush : ரெட் கார்ட் நீங்கியதும் சைலண்டாக அடுத்த படப்பிடிப்பை தொடங்கிய தனுஷ்...
Dhanush : ரெட் கார்ட் நீங்கியதும் சைலண்டாக அடுத்த படப்பிடிப்பை தொடங்கிய தனுஷ்...
Thalapathy Vijay: ஷாருக்கானை ஓரம் கட்டிய தளபதி விஜய் - இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் - எவ்வளவு தெரியுமா?
Thalapathy Vijay: ஷாருக்கானை ஓரம் கட்டிய தளபதி விஜய் - இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் - எவ்வளவு தெரியுமா?
Job Fair: அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: எங்கே? எப்போது? யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
Job Fair: அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: எங்கே? எப்போது? யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
Vidamuyarchi : விடாமுயற்சி வேண்டாம்...குட் பேட் அக்லி போதும்... பொறுமை இழந்த அஜித் ரசிகர்கள்
Vidamuyarchi : விடாமுயற்சி வேண்டாம்...குட் பேட் அக்லி போதும்... பொறுமை இழந்த அஜித் ரசிகர்கள்
Embed widget