மேலும் அறிய

497, 494, 492! - மயிலாடுதுறையில் சாதனைக் கொடி நாட்டிய காவலர் வீட்டுப் பிள்ளைகள். முழு விவரம் உள்ளே! 

10-ஆம் வகுப்பு தேர்வில் 490-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுச் சாதனை படைத்த காவலர்களின் குழந்தைகளை, மயிலாடுதுறை எஸ்பி ஸ்டாலின் நேரில் அழைத்துச் சிறப்புப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

தமிழக அரசின் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 490-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுச் சாதனை படைத்த மயிலாடுதுறை மாவட்ட காவலர்களின் பிள்ளைகளை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. ஸ்டாலின் அவர்கள் நேரில் அழைத்துச் சிறப்புப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

மயிலாடுதுறை: தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்பட்ட 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 20, 2026 அன்று வெளியிடப்பட்டன. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினரின் குழந்தைகள் மிகச்சிறந்த மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை மாணவர்களை கௌரவிக்கும் விதமாக, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகள், இந்தப் பொதுத்தேர்வில் 500-க்கு 490 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று வியக்கத்தக்க சாதனையை நிகழ்த்தியுள்ளனர். அவர்களை நேரில் அழைத்துப் பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ஸ்டாலின், மாணவர்களுக்கு ஊக்கப்பரிசுகளை வழங்கினார்.

சாதனை படைத்த மாணவர்களின் விவரங்கள்

* ஜகசுவேதா: குத்தாலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் கரிகாலனின் மகள். இவர் 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று, மயிலாடுதுறை மாவட்ட அளவில் காவலர்களின் பிள்ளைகளுக்கிடையே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

* ஸ்ரீஹரிணி: பூம்புகார் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் பழனிசாமியின் மகள். இவர் 500-க்கு 494 மதிப்பெண்கள் பெற்று, தான் பயிலும் பள்ளியில் முதலிடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளார்.

* லோகேஷ்வரன்: புதுப்பட்டிணம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆனந்தனின் மகன். இவர் 500-க்கு 492 மதிப்பெண்கள் பெற்று, தனது பள்ளியில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை பட்டியலில் இடம்பிடித்தார்.

எதிர்கால கல்வி குறித்த ஆலோசனைகள்

வெறும் பாராட்டுகளுடன் நிற்காமல், மாணவர்கள் தங்களின் அடுத்தகட்ட உயர்கல்வியை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறித்தும் எஸ்பி அவர்கள் விரிவான ஆலோசனைகளை வழங்கினார். மாணவர்களின் விருப்பமான பாடப்பிரிவுகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து கேட்டறிந்த அவர், திட்டமிட்ட கல்வியே வெற்றியைத் தரும் என்று அறிவுறுத்தினார்.

"கடினமான பணிச்சூழலிலும் தங்களது பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்தி, அவர்களை இத்தகைய உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்த காவலர்களாகிய பெற்றோர்களின் பங்கு போற்றத்தக்கது எனவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

பெற்றோர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

காவல்துறையில் பணிபுரிபவர்களுக்குப் பணிச்சுமை என்பது சவாலான ஒன்று. அத்தகைய இக்கட்டான சூழல்களுக்கு மத்தியிலும், நேரத்தை ஒதுக்கித் தங்களது பிள்ளைகளை அதிக மதிப்பெண்கள் பெற வழிநடத்திய பெற்றோர்களான காவலர்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மனதார பாராட்டினார். இந்தச் சிறப்பான அங்கீகாரம், மற்ற காவலர்களின் பிள்ளைகளுக்கும் கல்வியில் சிறந்து விளங்க ஒரு பெரும் ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இந்த செயல் பல உயர் அதிகாரிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாகவும், இது போன்ற நிகழ்வுகள் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் என்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைக்குமா? டெட் தேர்வுதேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆக குறைக்க வலியுறுத்தல்!
ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைக்குமா? டெட் தேர்வுதேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆக குறைக்க வலியுறுத்தல்!
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை.யில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை.யில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
Central Govt:
"உயர்கல்விக்கு ஆபத்து" ஒட்டுமொத்தமாக கைப்பற்ற மத்திய அரசு தீவிரம்- விசிக எம்.பி. எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EV Velu Case: மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
Minister Nirmal Kumar: “குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி“ - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
“குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி“ - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
விடிய விடிய அரசாணை... மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!
கன்னியாகுமரி அணுக்கனிம சுரங்கம்: விடிய விடிய அரசாணை... மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!
TATA Sierra EV: லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அறிமுகமான டாடா சியரா இவி.. விலை எவ்வளவு?
லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அறிமுகமான டாடா சியரா இவி.. விலை எவ்வளவு?
M. R. Vijayabhaskar : அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
Gold Silver Rate June 30th: காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
OnePlus N6: அடேங்கப்பா.! 8000 mAh பேட்டரி; DSLR போன்ற கேமரா; அடிச்சுத் தூக்கும் ஒன்பிளஸ் N6; விலையும் கம்மிதான்.?
அடேங்கப்பா.! 8000 mAh பேட்டரி; DSLR போன்ற கேமரா; அடிச்சுத் தூக்கும் ஒன்பிளஸ் N6; விலையும் கம்மிதான்.?
Embed widget