மேலும் அறிய

கல்லூரி சேரப்போறீங்களா? முன்னாள் படைவீரர் குழந்தைகளே மிஸ் பண்ணிடாதீங்க.. ஆட்சியர் கொடுத்த சூப்பர் அப்டேட்!

முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு கல்லூரியில் சேர்க்கையில் சலுகை பெற தேவையான சார்ந்தோர் சான்று பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், 2026–27 கல்வியாண்டில் முதலாம் ஆண்டு கல்லூரி படிப்புகளில் சேர்வதற்கான சார்ந்தோர் சான்றிதழ் பெற மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

முன்னாள் படைவீரர்களின் குடும்பங்களை கல்வி வாயிலாக முன்னேற்றும் நோக்கில், அரசு சார்பில் பல்வேறு கல்விச் சலுகைகள் மற்றும் முன்னுரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படும் “சார்ந்தோர் சான்று” (Dependent Certificate) தற்போது கல்லூரிகளில் சேர உள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்காக வழங்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர வாய்ப்பு பெறுகின்றனர்.

இணையதளத்தில் விண்ணப்பப் படிவம்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர் சான்று பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை அதிகாரப்பூர்வ இணையதளமான Ex-Servicemen Welfare Portal exwel.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்த பின்னர் தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சமர்ப்பிக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்

சார்ந்தோர் சான்று பெற விண்ணப்பிக்கும் போது, கீழ்க்கண்ட ஆவணங்களை இணைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

* முன்னாள் படைவீரரின் ஓய்வூதிய ஆணை (Pension Order) நகல்

* படைவிலகல் சான்றிதழில் மாணவர் அல்லது மாணவியின் பெயர் இடம்பெறாத நிலையில், அதற்கான குடும்ப உறுப்பினர் சான்று அல்லது தொடர்புடைய ஆவணம்

* மாணவர் / மாணவியின் ஆதார் அட்டை நகல்

* பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல்

* விண்ணப்பப் படிவம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட நகல்

இந்த ஆவணங்களுடன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நேரில் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு வருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நேரில் வர இயலாதவர்களுக்கு மாற்று வசதி

தொலைதூர பகுதிகளில் வசிப்பவர்கள் அல்லது நேரில் வர இயலாத முன்னாள் படைவீரர்களுக்காக மின்னஞ்சல் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு exwelnag@tn.gov.in அனுப்பி விண்ணப்பிக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதன் மூலம், முதியோர் மற்றும் உடல்நலக் குறைபாடு காரணமாக அலுவலகத்திற்கு நேரில் வர முடியாத முன்னாள் படைவீரர்களும் எளிதில் சான்றிதழ் பெறும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்வி வாய்ப்பை பயன்படுத்த வேண்டுகோள்

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் உயர்கல்வியில் முன்னேற அரசு பல்வேறு சலுகைகள் வழங்கி வருவதாகவும், அந்த வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, கல்லூரி சேர்க்கை காலம் தொடங்கியுள்ள நிலையில், மாணவர்கள் காலதாமதமின்றி விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புக்கு உதவி எண்

மேலும் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். அல்லது, (04365-299765) என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் படைவீரர்களின் குடும்ப நலனில் அரசு தொடர்ந்து அக்கறை செலுத்தி வரும் நிலையில், இந்தச் சார்ந்தோர் சான்று வழங்கும் நடவடிக்கை மாணவர்களின் உயர்கல்வி பயணத்திற்கு பெரிதும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
நாட்டைக் காத்தவர்களுக்கு ஒரு நற்செய்தி: நாகையில் MBBS, BDS படிக்க சிறப்புச் சான்றிதழ் வழங்கல்!
நாட்டைக் காத்தவர்களுக்கு ஒரு நற்செய்தி: நாகையில் MBBS, BDS படிக்க சிறப்புச் சான்றிதழ் வழங்கல்!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
Embed widget