மேலும் அறிய

TNPSC Results: டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளில் வெளிப்படைத் தன்மை வேண்டாமா?- திமுக அரசிடம் ஓபிஎஸ் கேள்வி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் முடிவுகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திமுக அரசிடம் ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார். 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் முடிவுகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திமுக அரசிடம் ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்துத் தமிழ்நாடு முன்னாள்‌ முதலமைச்சர்‌ ஓ.பன்னீர்செல்வம்‌ இன்று வெளியிட்டுள்ள‌ அறிக்கை:

''தி.மு.க.வின்‌ தேர்தல்‌ அறிக்கை எண்‌ 486-ல்‌, “தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌, ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வெளிப்படையான நேர்மையான தேர்வு முறை நடந்திட அனைத்து நடவடிக்கைகளும்‌ உறுதியாக மேற்கொள்ளப்படும்‌” என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்‌, இந்த வாக்குறுதியைகூட நிறைவேற்ற முடியாத அரசாக தி.மு.க. அரசு விளங்கிக்‌ கொண்டிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றரை லட்சம்‌ காலிப்‌ பணியிடங்கள்‌ நிரப்பப்படும்‌ என்ற வாக்குறுதியினை அளித்து ஆட்சிக்‌ கட்டிலில்‌ அமர்ந்த தி.மு.க., கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில்‌, வாக்குறுதியில்‌ உள்ள பத்து விழுக்காடு காலிப்‌ பணியிடங்களைக்‌ கூட நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும்‌, காலிப்‌ பணியிடங்கள்‌ அதிகரித்துக்‌ கொண்டே இருக்கின்றன என்பதும்‌ அனைவரும்‌ அறிந்த உண்மை.

இந்த நிலையில்‌ சென்ற ஆண்டு குரூப் 2 மற்றும்‌ 2ஏ பதவிகளுக்கான 5,529 இடங்களுக்கான முதல்‌ நிலைத்‌ தேர்வினை தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ நடத்தியது. இந்த தேர்வில்‌ கிட்டத்தட்ட பத்து லட்சம்‌ பேர் பங்கேற்றனர்‌. இந்த முதல்‌ நிலைத்‌ தேர்வு எழுதிய பத்து லட்சம்‌ பேரில்‌, ஒரு பதவிக்கு பத்து பேர்‌ வீதம்‌ 5,529 பதவிகளுக்கு, முன்னிலை மதிப்பெண்‌ பெற்ற கிட்டத்தட்ட 60 ஆயிரம்‌ பேர்கள்‌ பிரதானத்‌ தேர்வு எழுத தகுதி உடையவர்கள்‌ என்று தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ அறிவித்து, அதற்கான முடிவினையும்‌ வெளியிட்டது.

இதன்‌ அடிப்படையில்‌, தேர்வு எழுதியவர்கள்‌ தங்களுடைய தேர்வு முடிவுகளையும்‌, தாங்கள்‌ ஒவ்வொரு பாடத்திலும்‌ எடுத்த மதிப்பெண்களையும்‌ தெரிந்துகொள்ள முற்பட்டபோது, தேர்வு முடிவுகளை மட்டும்‌தான்‌ தெரிந்துகொள்ள முடிந்தது என்றும்‌, தேர்வில்‌ பெற்ற மதிப்பெண்களை தெரிந்துகொள்ள முடியவில்லை என்றும்‌ தேர்வு எழுதியவர்கள்‌ கூறுகின்றனர்‌.

பொதுவாக, மத்திய அரசு பணியிடங்களுக்கான தேர்வினை நடத்தும்‌ பணியாளர்‌ தேர்வு ஆணையம்‌, ரயில்வே தேர்வு வாரியம்‌, வங்கித்‌ தேர்வுகளை நடத்தும்‌ அமைப்புகள்‌ ஆகியவை தேர்வு முடிவுகளை வெளியிடும்போதே, ஒவ்வொருவரும்‌, ஒவ்வொரு பாடத்தில்‌ பெற்ற மதிப்பெண்களையும்‌ வெளியிடுவது வழக்கம்‌. தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ தேர்வுகளுக்கான மதிப்பெண்கள்‌ வெளியிடப்பட்டதை நானும்‌
கேள்விபட்டு இருக்கிறேன்‌. ஆனால்‌, தற்போதைய குரூப்‌ 2, 2ஏ முதல்நிலைத்‌ தேர்வு முடிவுகளில்‌ மதிப்பெண்களின்‌ விவரம்‌ வெளியிடப்படவில்லை.

ஒருவேளை, முதல்‌ நிலைத்‌ தேர்வு என்பதால்‌ மதிப்பெண்‌ பட்டியல்‌ வெளியிடப்படவில்லையா என்று தெரியவில்லை. இதன்‌ காரணமாக, தங்களைவிட குறைவான மதிப்பெண்‌ பெற்றவர்கள்‌ பிரதானத்‌ தேர்விற்கு தேர்ச்சி பெற்றுள்ளார்களா என்பதை கண்டறிய முடியாத சூழ்நிலை ஒவ்வொருவருக்கும்‌ ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல்‌, அடுத்த தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்‌கொள்ள இந்தத்‌ தேர்வின்‌ மதிப்பெண்கள்‌ தங்களுக்கு ஓர்‌ அடிப்படையாக அமையும்‌ என்றும்‌ தேர்வு எழுதியவர்கள்‌ கருதுகிறார்கள்‌. 

மதிப்பெண்களை வெளியிடாதது தேர்வு எழுதியவர்கள்‌ மத்தியில்‌ பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்தத்‌ தேர்வாக இருந்தாலும்‌, அதில்‌ வெளிப்படைத்‌ தன்மை, ஒளிவுமறைவற்ற தன்மை கடைபிடிக்கப்பட வேண்டும்‌ என்பதில்‌ யாருக்கும்‌ மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. குரூப்‌ 2, 2ஏ முதல்நிலைத்‌ தேர்வுக்கான மதிப்பெண்கள்‌ வெளியிடப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு தேர்வு எழுதிய ஒவ்வொருவர்‌ மத்தியிலும்‌ எழுந்துள்ளது. இதனை வெளியிடுவதுதான்‌ பொருத்தமான ஒன்று என்பது அனைவரின்‌ ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இதில்‌ உடனடியாக கவனம்‌ செலுத்தி, குரூப்‌ 2, 2ஏ முதல்நிலைத்‌ தேர்வில்‌ தேர்வு எழுதிய ஒவ்வொருவரும்‌ பெற்ற மதிப்பெண்களை வெளியிடத்‌ தேவையான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்றும்‌, இனி வருங்காலங்களில்‌ எந்தத்‌ தேர்வாக இருந்தாலும்‌ அதன்‌ மதிப்பெண்களை ஒளிவுமறைவின்றி வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌’’.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.‌

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ICAI CA Exam: சிஏ தேர்வுகள் எப்போது? ஆடிட்டர் கனவில் இருப்போருக்கு இதோ முழு அட்டவணை
ICAI CA Exam: சிஏ தேர்வுகள் எப்போது? ஆடிட்டர் கனவில் இருப்போருக்கு இதோ முழு அட்டவணை
தஞ்சாவூரில் இன்று 12 மையங்களில் நீட் தேர்வை 5,165 பேர் எழுதுகின்றனர்
தஞ்சாவூரில் இன்று 12 மையங்களில் நீட் தேர்வை 5,165 பேர் எழுதுகின்றனர்
நீங்கிய தடை; தமிழ்நாட்டில் இனி 6 புது அரசு மருத்துவக் கல்லூரிகள்- அன்புமணி நம்பிக்கை
நீங்கிய தடை; தமிழ்நாட்டில் இனி 6 புது அரசு மருத்துவக் கல்லூரிகள்- அன்புமணி நம்பிக்கை
மதுரை மாவட்டத்தில் உள்ள 14 தேர்வு மையங்களில் நீட் தேர்வு  8,578 தேர்வர்கள் பங்கேற்கின்றனா் !
மதுரை மாவட்டத்தில் உள்ள 14 தேர்வு மையங்களில் நீட் தேர்வு  8,578 தேர்வர்கள் பங்கேற்கின்றனா் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK complains against BJP : வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க பாஜக சதி.! தேர்தல் ஆணையம், டிஜிபியை திடீரென அலர்ட் செய்யும் திமுக
வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க பாஜக சதி.! தேர்தல் ஆணையம், டிஜிபியை திடீரென அலர்ட் செய்யும் திமுக
Agni Natchathiram 2026: கொளுத்தும் வெயில்.. நாளை முதல் அக்னி நட்சத்திரம்- என்ன செய்ய வேண்டும்? கூடாது?
Agni Natchathiram 2026: கொளுத்தும் வெயில்.. நாளை முதல் அக்னி நட்சத்திரம்- என்ன செய்ய வேண்டும்? கூடாது?
Summer Power Cut : கொளுத்தும் வெயில்.! தமிழகத்தில் மின் வெட்டா.? பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை சொன்ன மின் வாரியம்
கொளுத்தும் வெயில்.! தமிழகத்தில் மின் வெட்டா.? பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை சொன்ன மின் வாரியம்
சென்னை விமான நிலையத்தில் சினிமா பாணி பரபரப்பு: ஓடும் விமானத்திலிருந்து குதித்த பயணி!
சென்னை விமான நிலையத்தில் சினிமா பாணி பரபரப்பு: ஓடும் விமானத்திலிருந்து குதித்த பயணி!
NEET UG 2026: நீட் தேர்வு இன்று; மையத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டிய ஆவணங்கள், நேரம், கட்டுப்பாடு, விதிகள்- முழு விவரம்
NEET UG 2026: நீட் தேர்வு இன்று; மையத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டிய ஆவணங்கள், நேரம், கட்டுப்பாடு, விதிகள்- முழு விவரம்
NEW RATION CARD : புதிய ரேஷன் கார்டு வாங்க காத்திருக்கீங்களா.! விண்ணப்பிக்க மீண்டும் சான்ஸ்- எப்போ தெரியுமா.?
புதிய ரேஷன் கார்டு வாங்க காத்திருக்கீங்களா.! விண்ணப்பிக்க மீண்டும் சான்ஸ்- எப்போ தெரியுமா.?
Sundar C: தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவை விட்டு விலகுவேன்.. சுந்தர்.சி அறிவிப்பு!
Sundar C: தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவை விட்டு விலகுவேன்.. சுந்தர்.சி அறிவிப்பு!
TN Assembly Election 2026 :நாளை வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்.? முன்னிலை நிலவரம் எத்தனை மணிக்கு தெரியும்- லேட்டஸ்ட் அப்டேட் இதோ
நாளை வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்.? முன்னிலை நிலவரம் எத்தனை மணிக்கு தெரியும்- லேட்டஸ்ட் அப்டேட் இதோ
Embed widget