மேலும் அறிய

Mahavishnu Speech: பாவம் செய்தால் மலப்புழு; மந்திரத்தால் நெருப்பு மழை, பறக்கலாம்- அரசுப்பள்ளியில் சர்ச்சையான மகாவிஷ்ணு பேசியது என்ன?

Mahavishnu Speech Controversy: போன ஜென்மத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதைப் பொறுத்து இந்த பிறவி கொடுக்கப்பட்டிருக்கிறது. அரசுப் பள்ளியில் ஆன்மீகம் பேசக்கூடாது என்று யார் சொன்னது?

Mahavishnu Speech in School: சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி என்ற வகையில் மஹா விஷ்ணு என்பவர் பேசியது சர்ச்சையான நிலையில், அவர் என்னதான் பேசினார்? பார்க்கலாம்.

’’பாவத்தையும் சேர்க்காமல் புண்ணியத்தையும் சேர்க்காமல் எப்படி பொருளீட்டுவது என்பது இன்றைய புத்தகங்களில் இல்லை.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு என்ற திருக்குறள் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த ஒரு குறளுக்கு உண்மையான விளக்க உரை தெரிந்திருந்தால் வாழ்க்கையில் நீங்கள் அடைய வேண்டியது எதுவுமே இல்லை. திருவள்ளுவர் உலகின் அனைத்து ரகசியங்களையும் இதில் பூட்டி வைத்துள்ளார்.

நீ செய்யும் செயலுக்கு நீயே பெருமை உணர்வு அடைந்தால், மீண்டும் பிறப்பாய். நீ செய்யும் செயலுக்கு இறைவனை காரணம் கூறும்போது பாவம் புண்ணியம் என்ற இரு வினைகளும் உங்களை சேராது.

அடுத்த பிறவி கொடூரமாக இருக்கும்

எப்படியாவது வாழ்ந்து எப்படியாவது இறந்து விடலாம் என்று நினைக்காதீர்கள். அடுத்த பிறவி கொடூரமாக இருக்கும். இப்போது பலர் கை இல்லாமல், கால் இல்லாமல் பிறக்கிறார்கள். கண் இல்லாமல் பிறக்கிறார்கள். பல நோய்களுடன் பிறக்கிறார்கள். இறைவன் ஏன் எல்லோரையும் ஒரே மாதிரியாக படைக்கவில்லை? ஒருவன் கோடீஸ்வரனாக, இன்னொருவன் ஏழையாக இருக்கிறான். ஒருத்தன் நல்லவனாக இருக்கிறான். ஒருத்தன் கிரிமினலாக இருக்கிறான். ஏன் இந்த மாற்றம்?

ALSO READ | Mahavishnu: காமெடியன் டூ குருஜி; அமைச்சர்களுடன் நெருக்கம்- யார் இந்த பரம்பொருள் மகாவிஷ்ணு?

அரசுப் பள்ளியில் ஆன்மீகம் பேசக்கூடாதா?

போன ஜென்மத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதைப் பொறுத்து இந்த பிறவி கொடுக்கப்பட்டிருக்கிறது. அரசுப் பள்ளியில் ஆன்மீகம் பேசக்கூடாது என்று யார் சொன்னது? அப்படி ஏதாவது சட்டம் இருக்கிறதா? இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறதா? முதன்மை கல்வி அலுவலரை விட நீங்கள் அறிவு பெற்றவரா? பாவம், புண்ணியத்தைப் பற்றி போதிக்காமல் ஒருவனுக்கு வாழ்வியலை எப்படி போதிக்க முடியும்?

பாவ, புண்ணியத்தை பற்றி போதிக்காமல் இருந்தால் ஒருவன் நிறைய பாவங்களைச் செய்வான். பிற உயிர்களுக்கு நீ செய்யும் சேவையே ஆன்மீகம். அதைத்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆசிரியர்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? இவ்வளவு நாள் உங்களால் கற்பிக்க முடியாத கல்வியை, ஞானத்தை நான் போதிக்கிறேன் என்றால் நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும். எப்படி என்னிடம் சண்டைக்கு வரலாம்?

மலத்தில் ஊறும் புழுவாக

நீ அதிகமாக பாவம் செய்தால் மலத்தில் ஊறும் புழுவாக பிறப்பாய் என்று திருமூலர் திருமந்திரத்தில் எழுதுகிறார். திருமூலரை தாண்டி ஞானம் யாருக்காவது இருக்கிறதா? தெளிவு யாருக்காவது இருக்கிறதா? உங்களுக்கு ஏன் இவ்வளவு பிரச்சனை? உண்மை என்றால் என்ன? தர்மம், சத்தியம் என்றால் என்ன? நியாயம், கருணை என்றால் என்ன?

மாணவர்களே.. உங்களுக்கு மெய்ஞானத்தை உள்ளுக்குள் இருக்கும் ஞானகுருவே போதிக்க முடியும். நிம்மதியாக வாழ வேண்டும், கர்ம வினைகளை கடந்து வாழ வேண்டும், வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்றால் வாழ்வியல் கல்வி முக்கியம்.

வெறும் புத்தகப் படிப்பு மட்டும் போதாது, மத்தக படிப்பையும் படிக்க வேண்டும் என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். மத்தக படிப்புக்கான நுழைவு வாயில் என்று ஒன்று இருக்கிறது அதை எப்படி தெரிந்து கொள்வது? பேச வருபவனை எல்லாம் அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி அனுப்பி விடுகிறார்கள். யார் உங்களுக்கு மெய்ஞானத்தை போதிக்க முடியும்?

பேச தயங்கியதால்தான் என் நாடு நாசமாய் போனது

இதை பேச தயங்கியதால்தான் இவ்வளவு பிரச்சனை. இதை பேச தயங்கியதால்தான் என் நாடு நாசமாய் போனது. வீணாய்ப் போனது. இந்தியா முழுவதும் மூன்று லட்சத்து 23 ஆயிரம் குருகுலங்கள் இருந்தன அவை அனைத்தும் அழிக்கப்பட்டன.

ஒரு மந்திரத்தை படித்தால் நெருப்பு மழை பொழியும். ஒரு மந்திரத்தை படித்தால் உடல் நோய் குணமாகும். இங்கிருந்து அங்கே பறந்து செல்ல முடியும். அத்தனையும் ரகசியங்களையும் பனை ஓலையில் முன்னோர்கள் எழுதி வைத்து விட்டுச் சென்றனர். ஆங்கிலேயர்களின் சதி வேலை காரணமாக நம் மக்களின் ஞானம் மண்ணோடு மண்ணாக புதைந்தது.

இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் நாளந்தா பல்கலைக்கழகம் என்பார்கள். ஆனால் நாளந்தாதான் முதல் பல்கலைக்கழகமா? நம் நாட்டில் இருந்த ஏராளமான ஞானிகள் பற்றி தெரியுமா?

சத்தியத்தை பற்றி மட்டுமே பேசுவேன்

நான் சத்தியத்தை பற்றி மட்டுமே பேசுவேன். ஆசிரியர்களுக்கும் ஞானக்கல்வி தேவைப்படுகிறது மனிதனை முன்னிறுத்துவதை நிறுத்திவிட்டு மனிதனை கடந்த சக்தியை எப்போது ஒருவன் முன்னிறுத்துகிறானோ, அப்போதுதான் பணிவு, தன்னடக்கம் ஆகியவை வரும். வாழ்க்கையில் நிம்மதி வேண்டும் என்றால், பாவம் என்ன புண்ணியம் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள். அதைத் தெரிந்துகொள்ளவில்லை எனில் மீண்டும் மீண்டும் கஷ்டத்தை அனுபவித்துதான் ஆக வேண்டும்’’.

இவ்வாறு மஹா விஷ்ணு தெரிவித்து இருந்தார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
Railway Board Approval: 4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
Railway Board Approval: 4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
Aadi Krithigai 2025 Date: ஆடிக்கிருத்திகை நாளையா? ஆகஸ்ட் 16ம் தேதியா? பக்தர்களே விரதம் இருக்க சரியான நாள் இதுதான்!
Aadi Krithigai 2025 Date: ஆடிக்கிருத்திகை நாளையா? ஆகஸ்ட் 16ம் தேதியா? பக்தர்களே விரதம் இருக்க சரியான நாள் இதுதான்!
New 8 EV Cars Launch: ஒரு முறை சார்ஜ் செய்தாலே 500 கி.மீட்டர் பறக்கலாம்.. இந்தியாவில் அறிமுகமாகும் 8 மின்சார கார்கள் லிஸ்ட்!
New 8 EV Cars Launch: ஒரு முறை சார்ஜ் செய்தாலே 500 கி.மீட்டர் பறக்கலாம்.. இந்தியாவில் அறிமுகமாகும் 8 மின்சார கார்கள் லிஸ்ட்!
ரிதன்யாவை பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன்.. அய்யோ சாமி கல்யாணமே வேண்டாம்.. நடிகை பிரியங்கா வேதனை
ரிதன்யாவை பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன்.. அய்யோ சாமி கல்யாணமே வேண்டாம்.. நடிகை பிரியங்கா வேதனை
Asia Cup: ”நாங்க வரமாட்டோம் போங்கயா” ஓவரா ஆடும் பாகிஸ்தான், ஆசிய கோப்பைக்கு குட்பாய் சொல்லும் பிசிசிஐ
Asia Cup: ”நாங்க வரமாட்டோம் போங்கயா” ஓவரா ஆடும் பாகிஸ்தான், ஆசிய கோப்பைக்கு குட்பாய் சொல்லும் பிசிசிஐ
Embed widget