மேலும் அறிய

“மாணவர்கள் திருந்தணும்.. ஆசிரியர் பிரம்பு பயன்படுத்துவது தப்பே கிடையாது” - கேரள உயர்நீதிமன்றம்!

பள்ளியில் ஒழுக்கத்தை பேணி அவர்களை நல்வழிப்படுத்துவதில் ஆசியர்கள் பங்கு அளப்பறியது. இந்த நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தில் மகனை பிரம்பால் அடித்து காயப்படுத்தியதாக ஆசிரியர் மீது வழக்கு தொடரப்பட்டது.

பள்ளி மாணவர்கள் நல்வழியில் வளரும் பொருட்டு ஆசிரியர்கள் பிரம்பால் அடிப்பதை குற்றமாக கருத முடியாது என கேரள உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது கல்வி உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

ஆசிரியர்கள் - மாணவர்கள் பிணைப்பு

மனிதனை வாழ்க்கையில் நல்வழிப்படுத்துவதில் கல்வி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒழுக்கத்தை பேணி அவர்களை நல்வழிப்படுத்தி எதிர்காலத்தில் சிறந்த நபராக மாற்றுவதில் ஆசியர்கள் பங்கு அளப்பறியது. அதனால் தான் தெய்வத்திற்கு மேலாக ஆசிரியர்கள் பார்க்கப்படுகிறது. இத்தகைய ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த தண்டனை என்ற ஒன்றை வழங்குவது காலம் காலமாக இருந்தாலும் தற்காலத்தில் அது முற்றிலும் குறைந்துள்ளது. 

விதவிதமான தண்டனைகள் வழங்கி மாணவர்களை நல்வழிப்படுத்தும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். ஆனால் சில இடங்களில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் ஆசிரியர் சமூகம் மீது மிகப்பெரிய அளவில் களங்கம் ஏற்பட காரணமாக அமைகிறது. கடந்த காலங்களில் பெற்றோர்கள் தாங்களால் திருத்த முடியாத பிள்ளைகளை ஆசிரியரிடம் நீங்கள் அடித்தாவது திருத்துங்கள் என சொல்லும் வழக்கம் இருந்தது. நாமும் அதனை பார்த்திருக்கலாம். 

ஆனால் இக்கால பெற்றோர்கள் குழந்தைகளை கண்ணின் மணிபோல காத்து யாரும் அடிக்க என்ன, திட்டக்கூட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். குறிப்பாக ஆசிரியர்கள் பிரம்படி உள்ளிட்ட தண்டனைகள் வழங்கக்கூடாது. அனைவர் முன்னிலையிலும் மட்டம் தட்டக்கூடாது என பல கண்டிஷன்களை பள்ளிகளுக்கு வழங்கும் அளவுக்கு காலம் வந்து விட்டது. குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம் என்றால் அவர்களை நல்வழிப்படுத்தும் முறை முற்றிலும் காணாமல் போய் விட்டது. 

கேரளாவில் தொடரப்பட்ட வழக்கு

இப்படியான நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. 36 வயதுடைய சிபின் என்ற நபர் இந்த  வழக்கை தொடுத்திருந்தார். அதில், கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி மதியம் 12.30 மணியளவில் வெங்கனூரில் உள்ள விபிஎஸ் மலங்கரா பள்ளியின் ஆசிரியர் என்னுடைய மகனை பிட்டத்தில் பிரம்பால் அடித்து காயப்படுத்தினார். மூன்று நாட்களுக்குப் பின் விழிஞ்சம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று வலி அதிகமாக இருந்ததால் சிகிச்சை அளித்தேன். தொடர்ந்து காவல்துறையை அணுகி புகாரளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரதீப் குமார், “பள்ளியில் மாணவனை ஒழுக்கப்படுத்த குறைந்தபட்ச உடல் ரீதியான தண்டனையைப் பயன்படுத்துவது சிறார் நீதிச் சட்டம் அல்லது பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் குற்றமாக கருத முடியாது என்று தெரிவித்தார். மேலும் ஆபத்தான ஆயுதங்கள் என்ற பிரிவில் பிரம்பு இடம் பெறவில்லை. மேலும் ஒரு மாணவனை பள்ளிக்கு அனுப்பும்போது, பள்ளி ஒழுக்கத்தைப் பேணுவதற்கும். பள்ளியின் விதிகளின் அடிப்படையில் மாணவனைப் பயிற்றுவிப்பதற்கும் பெற்றோர் ஆசிரியருக்கு மறைமுகமான அதிகாரத்தை வழங்குகிறார்கள். 

பள்ளி மாணவர்களின் நன்னடத்தை கருதி ஆசிரியர்கள் பிரம்பு பயன்படுத்துவதை குற்றமாக கருத முடியாது. ஆசிரியர்களின் அத்தகைய முயற்சி சமூக அக்கறை கொண்டது. மாணவர்களுக்கு காயம் ஏற்படுத்தாமல் தண்டனை வழங்கி நல்வழிப்படுத்தும் ஆசிரியர்களின் முயற்சியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

தலைப்பு செய்திகள்

எம்.டெக், எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகள்: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிவிப்பு!
எம்.டெக், எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகள்: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிவிப்பு!
இன்ஜினியரிங் படிக்க ஆளே இல்லையா? புதுச்சேரியை அதிரவைத்த சென்டாக் லேட்ரல் என்ட்ரி புள்ளிவிவரங்கள்!
இன்ஜினியரிங் படிக்க ஆளே இல்லையா? புதுச்சேரியை அதிரவைத்த சென்டாக் லேட்ரல் என்ட்ரி புள்ளிவிவரங்கள்!
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold and Silver Rate Today: காலையிலேயே ஷாக்.! நேற்று அதிரடியாக குறைந்த தங்கம் இன்று விலை உயர்வு; தற்போதைய விலை என்ன.?
காலையிலேயே ஷாக்.! நேற்று அதிரடியாக குறைந்த தங்கம் இன்று விலை உயர்வு; தற்போதைய விலை என்ன.?
Tamilnadu Roundup: செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸ், தங்கம் விலை உயர்வு - தமிழ்நாட்டில் இதுவரை - 10 மணி செய்திகள்
செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸ், தங்கம் விலை உயர்வு - தமிழ்நாட்டில் இதுவரை - 10 மணி செய்திகள்
Strait of Hormuz India: ஹார்முஸ் பிரச்னை ஓவர்.? இந்தியாவுக்கு முதலில் வருவது கச்சா எண்ணெயா.? LPG-ஆ.? அரசின் திட்டம் இதுதான்
ஹார்முஸ் பிரச்னை ஓவர்.? இந்தியாவுக்கு முதலில் வருவது கச்சா எண்ணெயா.? LPG-ஆ.? அரசின் திட்டம் இதுதான்
US Iran Deal: “ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
“ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
TN Rain: சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்.. தொடரும் அடுத்த சர்ச்சை.. முதல்வர் விஜய் மீது குற்றச்சாட்டு!
தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்.. தொடரும் அடுத்த சர்ச்சை.. முதல்வர் விஜய் மீது குற்றச்சாட்டு!
Udhayanidhi Stalin: தவெக அரசு இதை கண்டிப்பா பண்ணுங்க.. விஜய்க்கு பறந்த வேண்டுகோள்.. உதயநிதி சொல்வது என்ன?
Udhayanidhi Stalin: தவெக அரசு இதை கண்டிப்பா பண்ணுங்க.. விஜய்க்கு பறந்த வேண்டுகோள்.. உதயநிதி சொல்வது என்ன?
Embed widget