மேலும் அறிய

Anbil Mahesh Poiyamozli: "குழந்தைகள் வீட்டிற்கு வந்ததும் என்ன செய்கிறார்கள் என கவனியுங்கள்" - பெற்றோருக்கு அன்பில் அறிவுரை!

கொரோனாவிற்குப் பிறகு குழந்தைகளின் மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதால் பெற்றோரும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் ஒன்றிணைந்து அவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சேலம் மேட்டூர் அடுத்துள்ள சிந்தாமணியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி வளாகத்திலும் விரிவான ஆய்வு மேற்கொண்டு பயன்பாடு இல்லாத கட்டடங்களை மறு சீரமைப்பு அல்லது அரசு அனுமதியோடு இடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் பேசினார். அப்போது அவர் கூறியது. "பள்ளி மேலாண்மைக்குழு, அரசுப் பள்ளிகளை மறுகட்டமைக்க உருவாக்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்குழு மாற்றியமைக்கப்படுகிறது. 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் தன்னிறைவு பெற்றதாக மாறும் வகையில் பள்ளி மேலாண்மைக்குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவின் மூலம் பள்ளிகளின் அடிப்படைத் தேவைகள் தலைமை ஆசிரியர் வாயிலாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது. குழந்தைகள் வீட்டிற்கு வந்ததும் என்ன செய்கிறார்கள் என கவனித்தாலே போதுமானது.

Anbil Mahesh Poiyamozli:

குழந்தையின் பெற்றோராக இல்லாமல் நண்பராக கலந்துரையாட வேண்டும். அதட்டுதல், கடினமான சொற்களை பெற்றோர் பயன்படுத்தக் கூடாது. குழந்தையிடம் எந்த ஒரு மாற்றம் தெரிந்தாலும் ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். குழந்தைகளின் மன நிலை கொரோனாவிற்கு பின்னர் பெரிய அளவில் மாறிவிட்டது. குழந்தைகளின் மனநிலையில் மாற்றம் தெரிந்தால் உடனடியாக வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியரிடம் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றார். ஆசிரியர்களை உறவினர் போல கருதி பேச வேண்டும். பள்ளிகளுக்கு குறை சொல்ல மட்டுமே வரக்கூடாது. பெற்றோரும் ஆசிரியரும் இணைந்து செயல்பட்டால் மாணவ-மாணவியர் முன்னேற்றம் நிச்சயமாக இருக்கும். குழந்தைகளை எந்தக் காலத்திலும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது. ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறமை இருக்கும். ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவது ஆசிரியர் மற்றும் பெற்றோரின் கடமையாகும். ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றை திணிப்பது கல்வியல்ல. குழந்தைகளின் அறிவை வளர்த்தெடுக்கிற, வார்த்தெடுக்கிற மிகப்பெரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கிறது. குழந்தைகளிடம் இருக்கும் திறமையை ஆசிரியர்கள் கண்டறிந்து சொல்லும்போது பெற்றோர் அதனை ஊக்குவிக்க வேண்டும். பள்ளிக்கூடம் அரசுக்கு சொந்தமானது மட்டுமல்ல. நம் குழந்தைகளின் கல்விக்கூடம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானம் உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது. மாதந்தோறும் கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் பள்ளிகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Anbil Mahesh Poiyamozli:

முன்னாள் மாணவர்களையும் இக்குழுவில் சேர்க்கப்பட்டு வருகிறது. பள்ளியின் வளர்ச்சிக்குத் தேவையான பொறுப்புணர்வோடு, பள்ளி மேலாண்மைக்குழு செயல்பட வேண்டும் என்று மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

இதனையடுத்து பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பயன்பாடு இல்லாத கட்டடங்களை மறுசீரமைப்பு அல்லது அரசின் அனுமதி பெற்று இடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர் உடன் இருந்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS met Amit Shah: அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
IPL 2026 Auction: மேட்ச் வின்னர்களை கேட்கும் ஐபிஎல் அணிகள், கோடிகளில் புரள வாய்ப்புள்ள வீரர்கள் யார்? டாப் லிஸ்ட்
IPL 2026 Auction: மேட்ச் வின்னர்களை கேட்கும் ஐபிஎல் அணிகள், கோடிகளில் புரள வாய்ப்புள்ள வீரர்கள் யார்? டாப் லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS met Amit Shah: அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
IPL 2026 Auction: மேட்ச் வின்னர்களை கேட்கும் ஐபிஎல் அணிகள், கோடிகளில் புரள வாய்ப்புள்ள வீரர்கள் யார்? டாப் லிஸ்ட்
IPL 2026 Auction: மேட்ச் வின்னர்களை கேட்கும் ஐபிஎல் அணிகள், கோடிகளில் புரள வாய்ப்புள்ள வீரர்கள் யார்? டாப் லிஸ்ட்
Top 10 News Headlines:  811 நோயாளிகளுக்கு ஒரு டாக்டர், விமான நிலையங்கள் மூடல், ரோ-கோ ஷோ? - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: 811 நோயாளிகளுக்கு ஒரு டாக்டர், விமான நிலையங்கள் மூடல், ரோ-கோ ஷோ? - 11 மணி வரை இன்று
வாடகை வீட்டில் குடியேறீங்களா.! மாத வாடகை, அட்வான்ஸ் எவ்வளவு கொடுக்கனும்- வெளியான குஷியான விதிமுறைகள்
வாடகை வீட்டில் குடியேறீங்களா.! மாத வாடகை, அட்வான்ஸ் எவ்வளவு கொடுக்கனும்- வெளியான குஷியான விதிமுறைகள்
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
IND vs SA: இன்று 2வது போட்டி.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மீண்டும் ஜொலிப்பார்களா?
IND vs SA: இன்று 2வது போட்டி.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மீண்டும் ஜொலிப்பார்களா?
Embed widget