மேலும் அறிய

Anbil Mahesh Poiyamozli: "குழந்தைகள் வீட்டிற்கு வந்ததும் என்ன செய்கிறார்கள் என கவனியுங்கள்" - பெற்றோருக்கு அன்பில் அறிவுரை!

கொரோனாவிற்குப் பிறகு குழந்தைகளின் மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதால் பெற்றோரும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் ஒன்றிணைந்து அவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சேலம் மேட்டூர் அடுத்துள்ள சிந்தாமணியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி வளாகத்திலும் விரிவான ஆய்வு மேற்கொண்டு பயன்பாடு இல்லாத கட்டடங்களை மறு சீரமைப்பு அல்லது அரசு அனுமதியோடு இடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் பேசினார். அப்போது அவர் கூறியது. "பள்ளி மேலாண்மைக்குழு, அரசுப் பள்ளிகளை மறுகட்டமைக்க உருவாக்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்குழு மாற்றியமைக்கப்படுகிறது. 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் தன்னிறைவு பெற்றதாக மாறும் வகையில் பள்ளி மேலாண்மைக்குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவின் மூலம் பள்ளிகளின் அடிப்படைத் தேவைகள் தலைமை ஆசிரியர் வாயிலாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது. குழந்தைகள் வீட்டிற்கு வந்ததும் என்ன செய்கிறார்கள் என கவனித்தாலே போதுமானது.

Anbil Mahesh Poiyamozli:

குழந்தையின் பெற்றோராக இல்லாமல் நண்பராக கலந்துரையாட வேண்டும். அதட்டுதல், கடினமான சொற்களை பெற்றோர் பயன்படுத்தக் கூடாது. குழந்தையிடம் எந்த ஒரு மாற்றம் தெரிந்தாலும் ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். குழந்தைகளின் மன நிலை கொரோனாவிற்கு பின்னர் பெரிய அளவில் மாறிவிட்டது. குழந்தைகளின் மனநிலையில் மாற்றம் தெரிந்தால் உடனடியாக வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியரிடம் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றார். ஆசிரியர்களை உறவினர் போல கருதி பேச வேண்டும். பள்ளிகளுக்கு குறை சொல்ல மட்டுமே வரக்கூடாது. பெற்றோரும் ஆசிரியரும் இணைந்து செயல்பட்டால் மாணவ-மாணவியர் முன்னேற்றம் நிச்சயமாக இருக்கும். குழந்தைகளை எந்தக் காலத்திலும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது. ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறமை இருக்கும். ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவது ஆசிரியர் மற்றும் பெற்றோரின் கடமையாகும். ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றை திணிப்பது கல்வியல்ல. குழந்தைகளின் அறிவை வளர்த்தெடுக்கிற, வார்த்தெடுக்கிற மிகப்பெரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கிறது. குழந்தைகளிடம் இருக்கும் திறமையை ஆசிரியர்கள் கண்டறிந்து சொல்லும்போது பெற்றோர் அதனை ஊக்குவிக்க வேண்டும். பள்ளிக்கூடம் அரசுக்கு சொந்தமானது மட்டுமல்ல. நம் குழந்தைகளின் கல்விக்கூடம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானம் உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது. மாதந்தோறும் கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் பள்ளிகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Anbil Mahesh Poiyamozli:

முன்னாள் மாணவர்களையும் இக்குழுவில் சேர்க்கப்பட்டு வருகிறது. பள்ளியின் வளர்ச்சிக்குத் தேவையான பொறுப்புணர்வோடு, பள்ளி மேலாண்மைக்குழு செயல்பட வேண்டும் என்று மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

இதனையடுத்து பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பயன்பாடு இல்லாத கட்டடங்களை மறுசீரமைப்பு அல்லது அரசின் அனுமதி பெற்று இடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர் உடன் இருந்தார். 

தலைப்பு செய்திகள்

UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
Embed widget