மேலும் அறிய

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசத் திருக்குறள் முற்றோதல் பயிற்சி: தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில்

பள்ளிக்‌ கல்வித்துறை மற்றும்‌ உலகத்‌ திருக்குறள்‌ முற்றோதல்‌ இயக்கம்‌ சார்பில் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள்‌ நூல்கள்‌ வழங்கும் முற்றோதல்‌ பயிற்சி தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

பள்ளிக்‌ கல்வித்துறை மற்றும்‌ உலகத்‌ திருக்குறள்‌ முற்றோதல்‌ இயக்கம்‌ சார்பில் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள்‌ நூல்கள்‌ வழங்கும் முற்றோதல்‌ பயிற்சி தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஷ்‌ பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

உலகப்‌ பொதுமறையாம்‌ திருக்குறளை முற்றிலும்‌ மனப்பாடம்‌ செய்யும்‌ வழக்கம்‌ தமிழர்களிடையே பல்லாண்டு காலமாக இருந்து வந்திருக்கிறது. சமுதாயத்தில்‌ அறம்‌ வளர்க்க திருக்குறளைப்‌ போன்ற ஓர்‌ ஒப்புயர்வற்ற நூல்‌ இல்லை. இதை மனதில்‌ கொண்டு தமிழக அரசு, பள்ளி மாணவர்கள்‌ 1330 திருக்குறளையும்‌ மனப்பாடம்‌ செய்வதை ஊக்குவிக்கும்‌ விதமாக பரிசளித்து வருகறது. 

புதிய அரசு பொறுப்பேற்றவுடன்‌ ஆண்டுதோறும்‌ 70 மாணவர்கள்‌ என்ற உச்ச வரம்பை முற்றிலும்‌ நீக்கி, பரிசுத்‌ தொகையையும்‌ உயர்த்துவதாக அறிவித்தது. அந்த அறிவிப்பின்‌ நீட்சியாக திருக்குறளை மனனம்‌ செய்யும்‌ மாணவர்களை அதிக அளவில்‌ உருவாக்கி, அறம்‌ சார்ந்த சமுகாயத்தை கட்டமைக்க வேண்டும்‌ என்ற எண்ணத்தில்‌, வலைத்தமிழ்‌, வள்ளுவர்‌ குரல்‌ குடும்பம்‌, சர்வீஸ்‌ டூ சொசைட்டி என்ற மூன்று அமைப்புகளும்‌ சேர்ந்து உலகத்‌ இருக்குறள்‌ முற்றோதல்‌ இயக்கத்தைத்‌ தொடங்கியது.

"உலகத்‌ திருக்குறள்‌ முற்றோதல்‌ இயக்கம்‌" என்ற தன்னார்வ அமைப்பு மூலம்‌ திருக்குறளை உலகெங்கும்‌ உள்ள மாணவர்களுக்கு தொழில்நுட்ப உதவியுடன்‌ எளிமையாக கொண்டுசெல்லவும்‌, 1330 திருக்குறளையும்‌ முற்றோதல்‌ செய்து ஒப்பிக்கும்‌ மாணவர்களுக்கு தமிழக அரசினால்‌ வழங்கப்படும்‌ ரூபாய்‌ 10,000 மற்றும்‌ அரசின்‌ சான்றிதழை பெறுவதற்கு ஏதுவாகவும்‌, ஆர்வமுள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சியளிக்க திருக்குறள்‌ முற்றோதல்‌ மற்றும்‌ திருக்குறள்‌ கவனகம்‌ சார்ந்த பயிற்சியில்‌ அனுபவம்‌ உள்ள, திருக்குறள் ‌முற்றோதல்‌ முடித்த பயிற்தியாளர்களை அடையாளம்‌ கண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.


அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசத் திருக்குறள் முற்றோதல் பயிற்சி: தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில்

இம்முயற்சியில்‌ "உலகத்‌ தமிழ்‌ வளர்ச்சி மன்றம்‌" என்ற அமைப்பு தமிழ்நாட்டின்‌ ஒவ்வொரு மாவட்டத்துற்கும்‌ 2000 திருக்குறள்‌ நூல்கள்‌ வீதம்‌ சென்னையையும்‌ சேர்த்து ஆண்டுக்கு 80,000 திருக்குறள்‌ நூல்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விலையில்லாமல்‌ வழங்க முன்வந்துள்ளது. திருக்குறள்‌ முனுசாமியார்‌ உரையுடன்‌ கூடிய இந்நூலை உலகத்‌ தமிழ்‌ வளர்ச்சி மன்ற வழிகாட்டுதலுடன்‌ வானதி பதிப்பகம்‌ அச்சிட்டு உலகத்‌ திருக்குறள்‌ முற்றோதல்‌ இயக்கத்திடம்‌ வழங்குகிறது. முற்றோதல்‌ முடித்த மாணவர்கள்‌ திருக்குறள்‌ பொருள்‌ உணர்ந்து வாழ்வில்‌ கடைபிடிக்க வழிவகை செய்தலும்‌ இத்திட்டத்தில்‌ அடங்கும்‌.

இதையடுத்து, திருக்குறள்‌ நூல்களை இவ்வாண்டு, முதல்‌ மாவட்டமாக சென்னைக்கு வழங்கி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஷ்‌ பொய்யாமொழி தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்‌. முடிவில் சர்வீஸ்‌ டூ சொசைட்டி அமைப்பின் நிறுவனர் ரவி சொக்கலிங்கம் நன்றியுரை ஆற்றினார்.

கூடுதல் விவரங்களுக்கு: https://thirukkural.valaitamil.com

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

"இனிமேலும் தற்காலிகமா?" – முதல்வர் விஜய்யின் தேர்தல் வாக்குறுதியை நம்பிப் தவிக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்!
500 கி.மீ. ரேஞ்ச்! ஹோண்டா 0 சீரிஸ் எலக்ட்ரிக் காரின் பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு!
500 கி.மீ. ரேஞ்ச்! ஹோண்டா 0 சீரிஸ் எலக்ட்ரிக் காரின் பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு!
CBSE: மாணவர்கள் வயிற்றில் பாலை வார்த்த சிபிஎஸ்இ; மும்மொழிக் கொள்கை, பொதுத்தேர்வில் புதிய மாற்றம்
CBSE: மாணவர்கள் வயிற்றில் பாலை வார்த்த சிபிஎஸ்இ; மும்மொழிக் கொள்கை, பொதுத்தேர்வில் புதிய மாற்றம்
TNTRB: மாபெரும் முறைகேடு; டிஆர்பி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளையே ரத்து செய்யக் கோரிக்கை!
TNTRB: மாபெரும் முறைகேடு; டிஆர்பி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளையே ரத்து செய்யக் கோரிக்கை!

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” - அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு
”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” - அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு
Ramadoss vs Arul : இணைந்த அப்பா- மகன்.! ராமதாஸை நம்பியதால் பல கோடியை இழந்துட்டோம்- கதறும் பாமக அருள்
இணைந்த அப்பா- மகன்.! ராமதாஸை நம்பியதால் பல கோடியை இழந்துட்டோம்- கதறும் பாமக அருள்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Financial Changes: ஆதார் தொடங்கி பாஸ்போர்ட் வரை - ஜுலை 1 முதல் எகிறப்போகும் செலவுகள் - மாற்றங்கள் என்ன?
ஆதார் தொடங்கி பாஸ்போர்ட் வரை - ஜுலை 1 முதல் எகிறப்போகும் செலவுகள் - மாற்றங்கள் என்ன?
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
VAIKO MDMK : அய்யோ.. நான் அப்படி சொல்லவே இல்லை.. ஒரே நாளில் பல்டி அடித்த வைகோ - நடந்தது என்ன.?
அய்யோ.. நான் அப்படி சொல்லவே இல்லை.. ஒரே நாளில் பல்டி அடித்த வைகோ - நடந்தது என்ன.?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
Embed widget