மேலும் அறிய

தேனி , திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள் எத்தனை பேர் தெரியுமா?

திண்டுக்கல்லில் 9 ஆயிரத்து 833 மாணவர்கள், 11 ஆயிரத்து 144 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 977 பேர் தேர்வு எழுதினர். தேனியில் 14 ஆயிரத்து 539 மாணவ, மாணவிகள் எழுதினர்.

தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதில் முதல் நாளான நேற்று தமிழ் பாடத்துக்கு தேர்வு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 11 ஆயிரத்து 132 மாணவர்கள், 12 ஆயிரத்து 54 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 186 பேர் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 87 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

தன்பாலின திருமண விவகாரம்: "சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்..”அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றிய உச்சநீதிமன்றம்.!


தேனி , திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள் எத்தனை பேர் தெரியுமா?

இதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு நன்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது. இதில் முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்து பார்ப்பதற்கும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரிபார்ப்பதற்கும் வழங்கப்பட்டது.மாணவ,மாணவிகள் பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதில் 9 ஆயிரத்து 833 மாணவர்கள், 11 ஆயிரத்து 144 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 977 பேர் தேர்வு எழுதினர். ஆனால் 1,299 மாணவர்கள் மற்றும் 910 மாணவிகள் என 2 ஆயிரத்து 209 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Chaithra Navarathri : அடுத்த வாரம் வரும் சைத்ர நவராத்திரி...என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
தேனி , திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள் எத்தனை பேர் தெரியுமா?

அதே போல் தேனி மாவட்டத்தில் 142 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 8,038 மாணவர்கள், 7,514 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 552 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுத அனுமதி பெற்றிருந்தனர். இதற்காக மாவட்டத்தில் 53 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. முதல் நாளான நேற்று தமிழ் பாடத்துக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வை 14 ஆயிரத்து 539 மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு எழுத அனுமதி பெற்றவர்களில் 1,013 பேர் தேர்வு எழுத வரவில்லை. கண் பார்வையற்றவர்கள் மற்றும் தேர்வு எழுத முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினர்.

https://tamil.abplive.com/entertainment/director-lokesh-kanagaraj-birthday-today-special-story-106432
தேனி , திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள் எத்தனை பேர் தெரியுமா?

 

மேலும் தனித்தேர்வர்களுக்கு 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. அங்கு தமிழ் பாடத்தேர்வை எழுத 191 பேர் அனுமதி பெற்றிருந்தனர். அவர்களில் 21 பேர் தேர்வு எழுத வரவில்லை. 170 பேர் தேர்வு எழுதினர். பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் காலை 7.30 மணியில் இருந்தே தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர். அவர்கள் தேர்வு மைய வளாகத்தில் ஆங்காங்கே அமர்ந்து கடைசி கட்ட வாசிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். தாங்கள் படித்த பாடங்களை மீண்டும் புரட்டிப் பார்த்து தேர்வுக்கு தயாராகினர். தேர்வு தொடங்கும் முன்பு தேர்வு நடைமுறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Embed widget