மேலும் அறிய

விழுப்புரத்தில் 7 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் வேளாண் கல்லூரி கோரிக்கை! மாணவர்களின் ஏக்கம் தீருமா?

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லூரி ஏற்படுத்த கோரி 2018-இல் கோப்புகள் அனுப்பப்பட்டும் இன்னமும் அறிவிப்பு இல்லை.

விழுப்புரம்: விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லூரி ஏற்படுத்த கோரிக்கை வைத்து 7 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ள கோப்புகளால் மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லூரி

விழுப்புரம் மாவட்டம் விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லூரி அமைப்பதற்கான கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாக நிலவியிருந்தாலும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமை பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

2018ஆம் ஆண்டு, மாவட்ட நிர்வாகம், விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லூரி அமைப்பதற்கான கோப்புகளை தயார் செய்து, விவசாயத்தின் நிலை, மண் வளம், பாசன வசதி, பருவநிலை மற்றும் மாணவர்களின் தேவைகளை பட்டியலிட்டு அரசிற்கு அனுப்பியது. எனினும், இக்கோப்புகள் 7 ஆண்டுகளாக அரசின் கவனத்திற்கு வந்தும், எவ்விதமான அறிவிப்பும் வெளியிடப்படாமல் கிடப்பில் உள்ளன.

விவசாயத்தை மூலதனமாகக் கொண்ட இம்மாவட்டத்தில், மொத்த மக்கள்தொகையில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வீடூர் அணை மற்றும் சாத்தனூர் அணையின் நீர்வழிப் பாசன வசதி, தென்பெண்ணை ஆற்றின் நீர்நிலை ஆகியவை இந்த மாவட்டத்தை வேளாண் வளர்ச்சிக்கு ஏற்ற சூழலாக மாற்றியுள்ளன.

முந்திரி, நெல், கரும்பு, வாழை, பயறு வகைகள், சிறுதானியங்கள், கருணைக்கிழங்கு உள்ளிட்ட ஏராளமான பயிர்கள் இங்கு பரந்த அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதனுடன், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் தோட்டக்கலை பயிர்களும் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. இத்தகைய விவசாய வளங்களை கொண்டுள்ள மாவட்டத்தில், வேளாண் கல்வி கற்றுத் தேசத்தின் விவசாயத் துறையை வளர்க்கும் இளம் தலைமுறைக்கு ஒரு கல்வி அடித்தளமாகக் கலந்துகொள்ளும் வகையில் அரசு வேளாண் கல்லூரி அவசியமாகப்படுகிறது.

தற்போது, வேளாண் படிப்புகளுக்காக விழுப்புரம் மாணவர்கள், கோயம்புத்தூர், சேலம், திருச்சி, சென்னை போன்ற நகரங்களுக்கு பயணம் செய்யும் நிலை உருவாகியுள்ளது. இது அவர்களது பொருளாதாரத்திற்கும் கல்விச் சலுகைகளிற்கும் பெரும் சவாலாக இருக்கிறது.

முன்னதாகவே, விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, அரசு சட்டக்கல்லூரி, அரசு ஆசிரியர் பயிற்சி நிலையம், அரசு பி.எட் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இத்தனை கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும், விவசாய அடிப்படையிலான ஒரு முக்கியமான கல்வி நிலையமான வேளாண் கல்லூரி இங்கு இல்லை என்பது பெரும் பாழ்ப்பாடாகக் கருதப்படுகிறது.

மாநில அரசின் ஆண்டுத் திட்டங்களில், மானிய கோரிக்கைகளில், கடந்த 2018ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், விழுப்புரம் வேளாண் கல்லூரிக்கான அறிவிப்பு வெளியாகும் என மக்கள் எதிர்பார்த்ததுடன், அரசின் அறிவிப்புகளையும் நோக்கியனர். ஆனால், இதுவரை அதற்கான எதுவும் நடைமுறைப்படவில்லை என்பது மிகவும் வருத்தகரமானது.

அதையடுத்து, தற்போது, மாவட்ட மக்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் அனைத்தும் ஒருமனதாகக் குரல் கொடுத்து, அரசு வேளாண் கல்லூரி விரைவில் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மாநில அரசு, விவசாய வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், இக்கோரிக்கையை நியாயமானதாக ஏற்று, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget