மேலும் அறிய

Common Syllabus: அனைத்து கல்லூரிகளுக்கும் பொது பாடத்திட்டம்; உரிமை பறிப்பா? மாற்றப்படுமா? அமைச்சர் பொன்முடி விளக்கம்

புதிய மாதிரி பாடத்திட்டத்தை 2023-24 கல்வியாண்டு முதல்‌ நடைமுறைப்படுத்துவது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர்‌ பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். 

புதிய மாதிரி பாடத்திட்டத்தை 2023-24 கல்வியாண்டு முதல்‌ நடைமுறைப்படுத்துவது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர்‌ பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’‌’ மாணவர்களின்‌ நலனை மேம்படுத்தவே

உயர்கல்வித்துறை அமைச்சர் 26-08-2021 அன்று சட்டமன்றத்தில்‌ அறிவித்தபடி, பாடத்திட்ட மறுசீரமைப்புப்‌ பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த, மாதிரி பாடத்திட்டம்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ தன்னாட்சிக்‌ கல்லூரிகளின்‌ தன்னாட்‌ சி உரிமைக்கு பாதிப்பில்லாத வகையில்‌ உருவாக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ தன்னாட்சி கல்லூரிகளின்‌ உரிமையை தமிழ்‌ நாடு அரசு மதித்து அங்கீகரிக்கிறது. மாதிரி பாடத்திட்டம்‌
மறுசீரமைக்கப்படுவதன்‌ முக்கிய நோக்கம்‌ மாணவர்களின்‌ நலனை மேம்படுத்துவதாகும்‌. 

பாடப்பிரிவுகளுக்கு இடையே 75% இணைத்தன்மை இல்லாத காரணத்தால்‌ பணி ஆணைப்‌ பெற்றும்‌ பணியில்‌ சேர முடியாமல்‌ சிரமப்படும்‌ மாணவர்களுக்கு உதவிடும்‌ வகையிலும்‌, உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே இடமாறுதல்‌ கோரும்‌ மாணவர்களுக்கு பயன்படும்‌ வகையிலும்‌ இந்த, மாதிரி பாடத்திட்டம்‌ மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 2018 - 2019க்குப்‌ பின்‌, சில உயர்கல்வி நிறுவனங்களில்‌ பாடத்திட்டம்‌ மறுசீரமைக்கப்படவில்லை. இதை ஈடுசெய்யும்‌ வகையில்‌ இந்த, மாதிரிப்‌ பாடத்திட்டம்‌ (2023-2024) மிகத்‌ தரமாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

870 பாடத்திட்டக்குழு கூட்டங்கள்

உயர்கல்வித்துறை அமைச்சர்‌ அறிவிப்பிற்கிணங்க 30-9-2021, 11-11-2021 ஆகிய தேதிகளில்‌ தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை வழங்கிய அறிவுறுத்தலின்படியும்‌, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற சட்டம்‌ 1992 பிரிவு 10 (2) (4) விதியின்படியும்‌, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்‌ கடந்த ஓராண்டாக மேற்கொண்ட முயற்சியால்‌ ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம்‌, 10 கலை அறிவியல்‌ பல்கலைக்கழகங்கள்‌, தன்னாட்சி கல்லூரிகள்‌ மற்றும்‌ இதர கல்லூரிகளிலிருந்தும்‌ 922 பேராசிரியர்களைப்‌ பாடத்திட்டக்குழு உறுப்பினர்களாகக்‌ கொண்டு 870 பாடத்திட்டக்குழு கூட்டங்கள்‌ நடத்தப்பட்ட, தொழில்‌ துறையினரின்‌ ஆலோசனைகள்‌ பெறப்பட்டு மிகத்தரமான முறையில்‌ 301 மாதிரி பாடங்கள்‌ (166 இளநிலை பாடங்கள்‌, 135 முதுநிலை பாடங்கள்‌) மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின்‌ "நான்‌ முதல்வன்‌" மற்றும்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ திட்டங்களில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு, தொழில்‌ முனைவு மற்றும்‌ திறன்மேம்பாட்டு அம்சங்கள்‌ மாணவர்களுக்கு மிகவும்‌ பயன்படும்‌ வகையில்‌ மாதிரிப் பாடத்திட்டத்தில்‌ சேர்க்கப்பட்டுள்ளன.

தொழில்‌ துறை வல்லுநர்களுடன்‌ கலந்து ஆலோசித்து வளர்ந்து வரும்‌ தொழில்‌ துறை தேவைகளுக்கு ஏற்ப B.Sc. Artificial Intelligence, B.Sc. Internet of things,B.Sc. Computer Science, Artificial Intelligence and Machine Learning, B.Sc. Computer Science with Block Chain Technology, B.Sc. Computer Science with Augmented Reality and Virtual Reality போன்ற பல புதிய மாதிரிப்‌ பாடத்‌ திட்டங்கள்‌ வகுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்‌ தயாரித்த மாதிரி பாடத்திட்டங்களைப்‌ பல்கலைக்கழக பாடத்திட்டக் குழுக்களின்‌ ஒப்புதலுடன்‌ நடைமுறைப்படுத்துமாறு தன்னாட்சி கல்லூரிகள்‌ உள்ளிட்ட அனைத்து இணைவு பெற்ற கல்லூரிகளுக்கும்‌ பல்கலைக்கழகங்கள்‌ அனுப்பிவைத்தன. இதன்‌ அடிப்படையில்‌, 90 சதவீத உயர்கல்வி நிறுவனங்கள்‌ மாதிரிப்‌ பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன.

இளநிலை பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டத்தில்‌ கீழ்க்காணும்‌ ஐந்து பிரிவுகள்‌ இடம்‌ பெற்றுள்ளன.

பகுதி 1 மொழி

பகுதி 2 ஆங்கிலம்‌

பகுதி  3 முக்கியப்‌ பாடங்கள்‌ மற்றும்‌ விருப்பப்பாடங்கள்‌

பகுதி 4 திறன்‌ மேம்பாட்டுப்‌ பாடங்கள்‌

பகுதி / மதிப்புக்‌ கூட்டுக்கல்வி.

முக்கியப் பாடங்களில் மட்டுமே பொது பாடத்திட்டம்

இப்பாடத்‌ திட்டத்தில்‌ உள்ள பகுதி 1, பகுதி 2, பகுதி 3ல்‌ உள்ள விருப்பப்‌ பாடங்கள்‌ (Elective papers), பகுதி 4, 5-ல்‌ உள்ள பாடங்களில்‌ பல்கலைக்கழகங்கள்‌, தன்னாட்சி கல்லூரிகள்‌ தங்கள்‌ தேவைக்கேற்ப தாங்கள்‌ விரும்பும்‌ பாடங்களைப்‌ பாடத்திட்டமாக வைத்துக்கொள்ளலாம்‌. பாடங்களுக்கிடையே இணைத்தன்மை இருப்பதற்காக இப்பாடத்திட்டத்தில்‌ பகுதி 3-இல்‌ உள்ள முக்கிய பாடங்கள்‌ (core papers) 75 சதவீதம்‌ மட்டும்‌ ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்‌ என்ற கருத்து பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ தன்னாட்‌சிக் கல்லூரிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ தன்னாட்சிக்‌ கல்லூரிகளின்‌ தன்னாட்சி உரிமைக்கு எதிரான கருத்து இந்த, மாதிரி பாடத்திட்டத்தில்‌ இல்லை. பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ தன்னாட்சிக்‌ கல்லூரிகளின்‌ தன்னாட்சி உரிமையை மதிக்கும்‌ நோக்கத்தில்‌ மாதிரி பாடத்திட்டம்‌ அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்‌ நலன்‌ கருதி அமைக்கப்பட்ட இம்மாதிரி திட்டம்‌ கீழ்காணும்‌ உரிமைகளை பாதுகாக்கிறது :-

* பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ தன்னாட்சி கல்லூரிகளின்‌ தன்னாட்‌ சி உரிமைக்கு எந்த பாதிப்பும்‌ ஏற்படாது.

* ஆசிரியர்களின்‌ பணிநிலையில்‌ எந்தப்‌ பாதிப்பும்‌ ஏற்படாது. ஆசிரியர்களின்‌ பணிப்‌ பாதுகாப்பு மற்றும்‌ பணிச்சுமை போன்றவற்றில்‌ ஆசிரியர்களுக்கு உதவும்‌ வகையில்‌ மாதிரி பாடத்திட்டம்‌ வடிவமைக்கப்பட்டுள்ளது.

* முக்கியப்‌ பாடங்களையும்‌  (core papers), விருப்பப்‌ பாடங்களையும்‌ (Elective Papers) செய்முறை பயிற்சிகளையும்‌ பருவங்களுக்கிடையே மாற்றிக்‌ கொள்ளலாம்‌.

* பல்கலைக்கழகங்களும்‌, தன்னாட்சிக்‌ கல்லூரிகளும்‌ தங்கள்‌ விருப்பத்திற்கு ஏற்ப மதிப்பீடுகளில்‌ மாற்றங்கள்‌ செய்துகொள்ள உரிமை உண்டு. அவர்களின்‌ தன்னாட்சி உரிமைக்கு எவ்விதத்திலும்‌ பாதிப்பு ஏற்படாது.

ஆண்டு இறுதியில்‌ ஆலோசனை

இந்த கல்வி ஆண்டு முதல்‌ (2023-2024) நடைமுறைப்‌ படுத்தப்பட்டுள்ள பாடத்திட்டத்தில்‌ எதேனும்‌ நடைமுறை சிக்கல்கள்‌ இருப்பின்‌, ஆண்டு இறுதியில்‌ கல்வியாளர்களுடன்‌ கலந்து ஆலோசித்து சரி செய்யப்படும்‌.

மாதிரி பாடத்திட்டம்‌ தொடர்பாக, அனைத்து தன்னாட்சிக்‌ கல்லூரி முதல்வர்களுடன்‌ 02.08.2023 அன்று உயர்கல்வித்‌ துறை அமைச்சர்‌‌ தலைமையில்‌ ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடத்தப்படும்‌. தன்னாட்சிக் கல்லூரிகளின்‌ தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பு இல்லாமல்‌ அவர்களின்‌ கருத்துக்கள்‌ கேட்டு தீர்வு காணப்படும்‌.

மாணவர்களின்‌ நலனை கருத்தில்‌ கொண்டு தமிழ்நாடு அரசால்‌ அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மாதிரி பாடத்திட்டம்‌ தன்னாட் சிக்கு பாதகமில்லாமல்‌ உருவாக்கப்பட்டு, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன்‌ நடத்தப்பட்ட இரு கூட்டங்களில்‌ விவாதிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகிறது’’.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பொது பாடத்திட்டம்  இந்த கல்வியாண்டிலேயே அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி  அறிவித்தார். புதிய பாடங்களுக்கான பாடத்திட்டம் அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்த நிலையில், பல்வேறு கல்லூரி பேராசிரியர் சங்கங்களும் கல்வியாளர்களும் பொது பாடத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Embed widget