மேலும் அறிய

1 முதல்‌ 8 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு பொது வினாத்தாள்‌: தேசிய கல்விக்‌ கொள்கை அமலா? ஆரம்பப்பள்ளி ஆசிரியர்‌ கூட்டணி கேள்வி

தமிழ்நாடு அரசின்‌ நடவடிக்கைக்கு நேர் எதிரான நடவடிக்கையாக 1 முதல்‌ 8 வகுப்புகளுக்கு மாநில அளவில்‌ ஒரே தேர்வு என்ற நடைமுறை உள்ளது.

2023- 2024ஆம்‌ கல்வியாண்டில்‌ 1 முதல்‌ 8 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம்‌ பருவத்‌ தேர்வில் மாநில‌ அளவில்‌ பொது வினாத்தாளைப்‌ பின்பற்றி தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதை மாற்றி முன்பு போல்‌ பள்ளிகள்‌ அளவில்‌ வினாத்தாள்‌ தயாரித்து தேர்வு நடத்த உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்‌ கூட்டணியின்‌ பொதுச்செயலாளர்‌ ச.மயில்‌ முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்‌. அதன்‌ விவரம்‌ பின்வருமாறு:

’’தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர்‌ மற்றும்‌ மாநில கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி இயக்குநர் ஆகியோரின்‌ உத்தரவில்‌ 2023-2024 ஆம்‌ கல்வியாண்டிற்கு இரண்டாம்‌ பருவத்திற்கான தேர்வுகள்‌ 1 முதல்‌ 3ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கு 15.12.2023 முதல்‌ நடத்திடவும்‌, 4, 5ஆம்‌ வகுப்புகளுக்கான தேர்வுகள்‌ 12.12.2023 முதல்‌ நடத்திடவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, 1 முதல்‌ 5ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கான இரண்டாம்‌ பருவத் தேர்விற்கான வினாத்தாட்கள்‌ https://exam.tnschools.gov.in என்ற இணைய முகவரியில்‌, பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மாநில கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி இயக்குநரின்‌ அறிக்கைப்படி 6 முதல்‌ 8 வகுப்புகளுக்கும்‌ மாநில்‌ அளவில்‌ பொது வினாத்தாளைப்‌ பின்பற்றி தேர்வு நடத்த ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

வினாத்தாட்களை அந்தந்தப்‌ பள்ளிகளின்‌ தலைமை ஆசிரியர்கள்‌ தேர்விற்கு முதல்‌ நாள்‌ பதிவிறக்கம்‌ செய்து, அவற்றை மாணவர்களின்‌ நான்கு வகையான கற்றல்‌ நிலைகளுக்கு ஏற்ப போதிய அளவில்‌ நகலெடுத்து, மிகவும்‌ பாதுகாப்பாக,‌ இரும்பு அலமாரியில்‌ வைத்துக்கொள்ள வேண்டும்‌ எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அளவில்‌ ஒரே தேர்வு

மேற்கண்டவாறான நடைமுறைகள்‌ என்பது 10 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்புப்‌ பொதுத் தோ்வுகளுக்கான நடைமுறை போன்று உள்ளது. “தேசிய கல்விக்‌ கொள்கை - 2020ஐ ஏற்க மாட்டோம்‌” என்பதில்‌ உறுதியான நிலைப்பாட்டை எடுத்து மாநில கல்விக்‌ கொள்கையை உருவாக்க தனியாகக்‌ குழுவை அமைத்துள்ள தமிழ்நாடு அரசின்‌ நடவடிக்கைக்கு நேர் எதிரான நடவடிக்கையாக 1 முதல்‌ 8 வகுப்புகளுக்கு மாநில அளவில்‌ ஒரே தேர்வு என்ற நடைமுறை உள்ளது.

தேசிய கல்விக்‌ கொள்கை 2020ல்‌ 3, 5, 8 ஆகிய வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும்‌ என்று கூறப்பட்டுள்ளது. 3, 5, 8 வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு என்பது இளம்‌ சிறார்களின்‌ நெஞ்சங்களில்‌ தேர்வு பயத்தையும்‌, உளவியல்‌ ரீதியாகக்‌ குழந்தைகளின்‌ மனநிலையைப்‌ பாதிப்பதாகவும்‌, குழந்தைகளின்‌ இடைநிற்றலை அதிகரிக்கும்‌ செயலாகவும்‌ அமையும்‌ என்பதால்‌ கல்வியாளர்களும்‌, உளவியல்‌ நிபுணர்களும்‌, ஆசிரியர்களும்‌, பெற்றோர்களும்‌ இதைக்‌ கடுமையாக எதிர்த்து வருகின்றனர்‌.

தேசிய கல்விக்‌ கொள்கை அமலா?

இப்படிப்பட்ட சூழலில்‌ தேசிய கல்விக்‌ கொள்கை - 2020ஐ தமிழ்நாடு அரசு ஏற்காத நிலையில்‌ தமிழ்நாடு அரசின்‌ பள்ளிக்கல்வித்துறை 1 முதல்‌ 8 வகுப்புக்களுக்கு மாநில அளவில்‌ ஒரே தேர்வை நடத்துவது என்பது முரண்பாடாக உள்ளது. மேலும்‌, தேசிய கல்விக்‌ கொள்கை - 2020ன்‌ கூறுகளை தமிழ்நாட்டில்‌ வேகமாக அமல்படுத்துவதாகவும்‌ உள்ளது. 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ குழந்தைகளுக்கு ஏதோ நீட், ஸ்லெட், நெட் போன்ற தேசிய அளவிலான போட்டித்‌ தேர்வுகளை நடத்துவதைப்‌ போல விதிமுறைகளை அறிவிப்பது என்பது எவ்விதத்திலும்‌ பொருத்தமானதாக இல்லை. உலகில்‌ கல்வியில்‌ முன்னேறிய எந்தவொரு நாட்டிலும்‌ 1 முதல்‌ 8 வகுப்புவரை பயிலும்‌ குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு அல்லது மாநில அளவிலான தேர்வு என்ற நடைமுறை இல்லை.

கல்வி என்பது குழந்தைகள்‌ சுதந்திரமாகக்‌ கற்பதையும்‌, சுதந்திரமாகச்‌ சிந்திப்பதையும்‌ உறுதிப்படுத்துவதோடு, குழந்தையை மையமாகக்‌ கொண்டதாகவும்‌ இருக்க வேண்டும்‌. தேர்வை மையப்படுத்தி குழந்தைகளின்‌ கல்வி அமையக்கூடாது என்பதை கல்வியாளர்கள்‌ வலியுறுத்தியுள்ளனர்‌. எனவே, 2023-2024 ஆம்‌ கல்வியாண்டில்‌ இரண்டாம்‌ பருவத்தேர்வில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்புக்கு மாநில அளவில்‌ தேர்வு என்ற நடைமுறையை ரத்‌து செய்திடவும்‌, கடந்த காலங்களில்‌ தமிழ்நாடு முழுவதும்‌ கடைப்பிடிக்கப்பட்டவாறு 1 முதல்‌ 8 வகுப்புக்களுக்கு பள்ளிகள்‌ அளவில்‌ ஆசிரியா்களே வினாத்தாட்களைத்‌ தயாரித்து தேர்வு எழுதும்‌ நடைமுறையை மீண்டும்‌ செயல்படுத்தவும்‌ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.

இவ்வாறு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்‌ கூட்டணி தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Elon Musk Vs Open AI: மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Elon Musk Vs Open AI: மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
"ஒற்றுமையை வலுப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்" பிரதமர் மோடி பேச்சு!
திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!
திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!
இபிஎஸ்க்கு கண்டிஷன்! முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன்! வெளியான காரணம்!
இபிஎஸ்க்கு கண்டிஷன்! முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன்! வெளியான காரணம்!
Chennai Vellore NH: 4 மணி நேரம் வேண்டாம்..! வேலூருக்கு இரண்டரை மணி நேரம் போதும், சென்னை டூ பெங்களூரு 4 வழிச்சாலை  - முழு விவரம்
Chennai Vellore NH: 4 மணி நேரம் வேண்டாம்..! வேலூருக்கு இரண்டரை மணி நேரம் போதும், சென்னை டூ பெங்களூரு 4 வழிச்சாலை - முழு விவரம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.