மேலும் அறிய

Anbumani: நீட் தற்கொலைக்கு முடிவே இல்லையா? இதையாவது செய்யுங்க! - அன்புமணி வலியுறுத்தல்

நீட் தற்கொலைக்கு முடிவே இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி, விலக்கு பெறுவதில் தாமதம் கூடாது என்று வலியுறுத்தி உள்ளார். 

நீட் தற்கொலைக்கு முடிவே இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி, விலக்கு பெறுவதில் தாமதம் கூடாது என்று வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்துப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:    

''தமிழ்நாட்டில் எந்தத் துயரம் நடந்து விடக் கூடாது என்று அனைவரும் வேண்டிக் கொண்டிருந்தார்களோ, அந்தத் துயரம் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக நிகழ்ந்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா என்ற மாணவர், மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

மாணவர் முரளி கிருஷ்ணா கடந்த 2021-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். கடந்த ஆண்டே அவர் நீட் தேர்வு எழுதிய போதிலும், அவரால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. அதனால், வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வை எழுதி, மருத்துவம் பயில வேண்டும் என்ற நோக்கத்துடன் தேர்வுக்கு தயாராகி வந்தார். நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், புதன்கிழமை (ஜூலை 6) இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

’நீட் தேர்வு மிகவும் கடினமாக உள்ளது’

நீட் தேர்வுக்கு அஞ்சி தாம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை விளக்கிக் கடிதம் ஒன்றையும் முரளி கிருஷ்ணா எழுதி வைத்துள்ளார். அதில்,‘‘நீட் தேர்வு மிகவும் கடினமாக உள்ளது; மருத்துவப் படிப்பில் சேரும் அளவுக்கு மதிப்பெண் எடுக்க முடியாது என்பதால் தற்கொலை செய்து கொள்கிறேன்’’ என்று முரளி கிருஷ்ணா குறிப்பிட்டிருக்கிறார். 

ஒருபுறம் கிராமப்புற மாணவர்களால் நீட் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தால் ஏற்படும் அழுத்தம், மறுபுறம் தமது பிள்ளைகளை எப்படியாவது மருத்துவராக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர்கள்  கொடுக்கும் அழுத்தம் ஆகிய இரண்டையும் தாங்கிக் கொள்ள முடியாத மாணவர்கள்தான் தேர்வுக்கு முன்பே தற்கொலை செய்து கொள்கின்றனர். நடப்பாண்டில் இந்த அழுத்தத்திற்கு இரையாகிய முதல் மாணவர் முரளி கிருஷ்ணா அல்ல... ஏற்கனவே கடந்த புதன்கிழமை சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவை இனியும் தொடரக்கூடாது.

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு மிகப்பெரிய சமூக அநீதி. அது உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பதில், சமூக நீதியில் அக்கறை கொண்டவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், மாணவர்களின் தற்கொலைக்கு அவர்களிடம் தன்னம்பிக்கையும், விழிப்புணர்வும் இல்லாததும், அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து திணிக்கப்படும் அழுத்தமும்தான் மிக முக்கியக் காரணம் ஆகும். நீட் தேர்வை எழுதுவது மருத்துவம் படிப்பதற்கான முயற்சி ஆகும். முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை; முதல் முயற்சியில் வெற்றி கிடைக்காவிட்டால் உலகமே நம்மை விட்டு விலகிச் சென்று விட்டதாக கருதி தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. அது கோழைத்தனம்.

மருத்துவக் கல்வி என்ற ஒற்றை இலக்கு கூடாது

அதேபோல், மருத்துவப்படிப்பு மட்டுமே வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய உயர்படிப்பு அல்ல. வேலைவாய்ப்பும், சேவை வாய்ப்பும் இன்னும் அதிகமுள்ள ஏராளமான படிப்புகள் உள்ளன. அவற்றை தேடும் முயற்சியில் எந்தப் பெற்றோரும், மாணவர்களும் ஈடுபடுவதில்லை. மாறாக, கண்கள் மறைக்கப்பட்ட குதிரைகளைப் போல மருத்துவக் கல்வி என்ற ஒற்றை இலக்கை மட்டுமே அவர்கள் ஓடுகின்றனர். அந்த இலக்கை எட்ட முடியாவிட்டால், அதை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். மருத்துவக்கல்வி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் மாற்றுப் பாட வாய்ப்புகளை ஆராய வேண்டுமே தவிர, தற்கொலை செய்துகொள்ளக் கூடாது. இதுதான் மாணவர்களுக்கு எனது வேண்டுகோள் ஆகும்.

மற்றொருபுறம் மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டும் நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு  விலக்கு அளிக்கக் கோரும் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு 234 நாள் போராட்டத்திற்குப் பிறகு மே 3-ஆம் தேதிதான் மத்திய அரசுக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது. அதன்பின் 67 நாட்களாகி விட்டன. இதற்கு மேலும் இந்த விஷயத்தில் தமிழக அரசு தாமதம் காட்டக்கூடாது. தமிழக முதலமைச்சர் உடனடியாக டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து நீட்விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அத்தேர்வை எழுதவிருக்கும் மாணவர்கள் மத்தியில் நிலவும் அச்சம், அழுத்தம், மன உளைச்சல் ஆகியவற்றைப் போக்குவற்காக அவர்களுக்கு  தொலைபேசி வழியிலான கவுன்சலிங் வழங்க அரசு நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்துகிறேன்''.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget