Exit Polls 2026: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் எக்ஸிட் போல்ஸ்; தூர்தர்ஷன் 1996 கருத்துக்கணிப்பு முதல் இன்று வரை- ஒரு பார்வை!
Exit Polls 2026 Explained: ஜனநாயகத் திருவிழாவின் கடைசிக்கட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்: 1996 முதல் இன்று வரை - ஒரு விரிவான பார்வை

இந்தியத் தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற உடனேயே மக்களின் மனநிலை எப்படி உள்ளது, யாருக்கு மக்கள் மகுடம் சூட்டுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உதவும் ஒரு கருவியாக எக்ஸிட் போல் (Exit Polls) பார்க்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன.
வரலாற்றுப் பின்னணி
முதன்முதலாக 1930-களின் தொடக்கத்தில் அமெரிக்காவில் இந்தப் போக்கு உருவானது. தொடர்ந்து 1967ஆம் ஆண்டில் அமெரிக்க ஆராய்ச்சியாளர் வாரன் மிட்டோஃப்ஸ்கி கெண்டகி மாகாணத்தில் மிகப்பெரிய அளவில் இந்த கருத்துக்கணிப்பை விரிவாக்கினார். நெதர்லாந்திலும் எக்ஸில் போல்கள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து ஊடகங்கள் இதைப் பின்பற்றி கருத்துக் கணிப்புகளைப் பரவலாக்கின.
இந்தியாவில் எக்ஸிட் போல்களின் பயணம் 1996-ம் ஆண்டு தொடங்கியது. அப்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சி முதன்முதலில் நாடு தழுவிய அளவில் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டது. இது இந்தியத் தேர்தல் அரசியலில் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்தது. வாக்காளர்கள் தங்களது வாக்கைச் செலுத்திவிட்டு வெளியே வரும்போது, அவர்கள் யாரிடம் வாக்களித்தார்கள் என்ற அடிப்படையில் இந்தத் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.
எக்ஸிட் போல் செயல்படும் விதம்
தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளை விட, எக்ஸிட் போல்கள் துல்லியமானவை எனக் கருதப்படுகின்றன. ஏனெனில், இவை உண்மையாக வாக்களித்த மக்களிடம் நடத்தப்படுபவை. மாதிரி அளவு, புவியியல் பரவல் மற்றும் பல்வேறு சமூகப் பிரிவினரின் பிரதிநிதித்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் இவை கணிக்கப்படுகின்றன.

கட்டுப்பாடுகள் ஏன்?
1980 வாக்கில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு முன்பாகவே ஓர் ஊடகத்தில் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகின. இதற்குப் பிறகு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன.
தற்போது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, ஒரு தேர்தலின் அனைத்துக் கட்ட வாக்குப் பதிவுகளும் முடிவடைந்த பின்னரே எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட வேண்டும். இது வாக்காளர்களின் மனநிலையைத் திசை திருப்பாமல் இருக்கப் பின்பற்றப்படும் நடைமுறையாகும்.
நம்பகத்தன்மை குறித்த விவாதம்
எக்ஸிட் போல்கள் எப்போதும் துல்லியமாக இருப்பதில்லை என்பது ஒரு தொடர் விவாதமாக உள்ளது. உதாரணத்துக்கு 2004 மக்களவைத் தேர்தலில் பெரும்பாலான எக்ஸிட் போல்கள் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் எனக் கணித்தன. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான் ஆட்சியை அமைத்தது.
என்ன காரணம்?
வாக்காளர்கள் உண்மையான தகவலை மறைப்பது, போதுமான மாதிரி அளவு இல்லாதது மற்றும் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதில் ஏற்படும் பிழைகள் காரணமாக எக்ஸிட் போல்கள் தோல்வியடைய நேரலாம் என்று கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















