மேலும் அறிய

Exit Polls 2026: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் எக்ஸிட் போல்ஸ்; தூர்தர்ஷன் 1996 கருத்துக்கணிப்பு முதல் இன்று வரை- ஒரு பார்வை!

Exit Polls 2026 Explained: ஜனநாயகத் திருவிழாவின் கடைசிக்கட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்: 1996 முதல் இன்று வரை - ஒரு விரிவான பார்வை

இந்தியத் தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற உடனேயே மக்களின் மனநிலை எப்படி உள்ளது, யாருக்கு மக்கள் மகுடம் சூட்டுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உதவும் ஒரு கருவியாக எக்ஸிட் போல் (Exit Polls) பார்க்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன.

வரலாற்றுப் பின்னணி

முதன்முதலாக 1930-களின் தொடக்கத்தில் அமெரிக்காவில் இந்தப் போக்கு உருவானது. தொடர்ந்து 1967ஆம் ஆண்டில் அமெரிக்க ஆராய்ச்சியாளர் வாரன் மிட்டோஃப்ஸ்கி கெண்டகி மாகாணத்தில் மிகப்பெரிய அளவில் இந்த கருத்துக்கணிப்பை விரிவாக்கினார். நெதர்லாந்திலும் எக்ஸில் போல்கள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து ஊடகங்கள் இதைப் பின்பற்றி கருத்துக் கணிப்புகளைப் பரவலாக்கின.

இந்தியாவில் எக்ஸிட் போல்களின் பயணம் 1996-ம் ஆண்டு தொடங்கியது. அப்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சி முதன்முதலில் நாடு தழுவிய அளவில் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டது. இது இந்தியத் தேர்தல் அரசியலில் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்தது. வாக்காளர்கள் தங்களது வாக்கைச் செலுத்திவிட்டு வெளியே வரும்போது, அவர்கள் யாரிடம் வாக்களித்தார்கள் என்ற அடிப்படையில் இந்தத் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.

எக்ஸிட் போல் செயல்படும் விதம்


தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளை விட, எக்ஸிட் போல்கள் துல்லியமானவை எனக் கருதப்படுகின்றன. ஏனெனில், இவை உண்மையாக வாக்களித்த மக்களிடம் நடத்தப்படுபவை. மாதிரி அளவு, புவியியல் பரவல் மற்றும் பல்வேறு சமூகப் பிரிவினரின் பிரதிநிதித்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் இவை கணிக்கப்படுகின்றன.


Exit Polls 2026: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் எக்ஸிட் போல்ஸ்; தூர்தர்ஷன் 1996 கருத்துக்கணிப்பு முதல் இன்று வரை- ஒரு பார்வை!

கட்டுப்பாடுகள் ஏன்?

1980 வாக்கில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு முன்பாகவே ஓர் ஊடகத்தில் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகின. இதற்குப் பிறகு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன.

தற்போது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, ஒரு தேர்தலின் அனைத்துக் கட்ட வாக்குப் பதிவுகளும் முடிவடைந்த பின்னரே எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட வேண்டும். இது வாக்காளர்களின் மனநிலையைத் திசை திருப்பாமல் இருக்கப் பின்பற்றப்படும் நடைமுறையாகும்.

நம்பகத்தன்மை குறித்த விவாதம்


எக்ஸிட் போல்கள் எப்போதும் துல்லியமாக இருப்பதில்லை என்பது ஒரு தொடர் விவாதமாக உள்ளது. உதாரணத்துக்கு 2004 மக்களவைத் தேர்தலில் பெரும்பாலான எக்ஸிட் போல்கள் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் எனக் கணித்தன. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான் ஆட்சியை அமைத்தது.

என்ன காரணம்?

வாக்காளர்கள் உண்மையான தகவலை மறைப்பது, போதுமான மாதிரி அளவு இல்லாதது மற்றும் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதில் ஏற்படும் பிழைகள் காரணமாக எக்ஸிட் போல்கள் தோல்வியடைய நேரலாம் என்று கூறப்படுகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Minister Anand : ’ஒன்னுமே செய்ய முடியல’ புலம்பும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் – செக் வைத்த செக்கரட்டரி..!
’ஒன்னுமே செய்ய முடியல’ புலம்பும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் – செக் வைத்த செக்கரட்டரி..!
வட கிழக்கு பருவ மழை பாதிப்பை சமாளிக்க CM விஜய்யின் மாஸ் PLAN.! IAS அதிகாரிகள் நியமனம் – யார் எந்த இடத்திற்கு.?
மழை பாதிப்பை சமாளிக்க CM விஜய்யின் மாஸ் PLAN.! IAS அதிகாரிகள் நியமனம் – யார் எந்த இடத்திற்கு.?
ADMK To TVK : தவெகவிற்கு தாவ 5 அதிமுக MLA-க்கள் ரெடி.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்கும் விஜய்- நடப்பது என்ன.?
தவெகவிற்கு தாவ 5 அதிமுக MLA-க்கள் ரெடி.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்கும் விஜய்- நடப்பது என்ன.?
உதயநிதியை விடாமல் குறிவைக்கும் தவெக.! உடனே ஆக்‌ஷன் எடுக்க பறந்த அதிரடி உத்தரவு- ஷாக்கில் திமுக
உதயநிதியை விடாமல் குறிவைக்கும் தவெக.! உடனே ஆக்‌ஷன் எடுக்க பறந்த அதிரடி உத்தரவு- ஷாக்கில் திமுக

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Anand : ’ஒன்னுமே செய்ய முடியல’ புலம்பும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் – செக் வைத்த செக்கரட்டரி..!
’ஒன்னுமே செய்ய முடியல’ புலம்பும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் – செக் வைத்த செக்கரட்டரி..!
வட கிழக்கு பருவ மழை பாதிப்பை சமாளிக்க CM விஜய்யின் மாஸ் PLAN.! IAS அதிகாரிகள் நியமனம் – யார் எந்த இடத்திற்கு.?
மழை பாதிப்பை சமாளிக்க CM விஜய்யின் மாஸ் PLAN.! IAS அதிகாரிகள் நியமனம் – யார் எந்த இடத்திற்கு.?
ADMK To TVK : தவெகவிற்கு தாவ 5 அதிமுக MLA-க்கள் ரெடி.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்கும் விஜய்- நடப்பது என்ன.?
தவெகவிற்கு தாவ 5 அதிமுக MLA-க்கள் ரெடி.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்கும் விஜய்- நடப்பது என்ன.?
உதயநிதியை விடாமல் குறிவைக்கும் தவெக.! உடனே ஆக்‌ஷன் எடுக்க பறந்த அதிரடி உத்தரவு- ஷாக்கில் திமுக
உதயநிதியை விடாமல் குறிவைக்கும் தவெக.! உடனே ஆக்‌ஷன் எடுக்க பறந்த அதிரடி உத்தரவு- ஷாக்கில் திமுக
TVS iQube MillionR எடிஷன் அறிமுகம்! 212 கி.மீ ரேஞ்ச், அதிக இடவசதி, ரூ.60 ஆயிரம் விலையில்- வேறென்ன ஸ்பெஷல்?
TVS iQube MillionR எடிஷன் அறிமுகம்! 212 கி.மீ ரேஞ்ச், அதிக இடவசதி, ரூ.60 ஆயிரம் விலையில்- வேறென்ன ஸ்பெஷல்?
Leema Rose Martin: என் கணவர் தான் கிடைச்சாரா? .. சும்மா சும்மா இழுக்குறீங்க.. திமுக மீது லீமா ரோஸ் டென்ஷன்!
Leema Rose Martin: என் கணவர் தான் கிடைச்சாரா? .. சும்மா சும்மா இழுக்குறீங்க.. திமுக மீது லீமா ரோஸ் டென்ஷன்!
ரொம்ப கம்மி வட்டியில் மகளிருக்கு கடன்.! ரூ.500 கோடியை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
ரொம்ப கம்மி வட்டியில் மகளிருக்கு கடன்.! ரூ.500 கோடியை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
Tenkasi: சைடிஷ் வாங்க லேட் ஆனதால் ஆத்திரம்.. இளைஞர் வெட்டிக்கொலை.. 3 சிறுவர்கள் கைது!
Tenkasi: சைடிஷ் வாங்க லேட் ஆனதால் ஆத்திரம்.. இளைஞர் வெட்டிக்கொலை.. 3 சிறுவர்கள் கைது!
Embed widget