மேலும் அறிய

ADMK Report : 'மாஜி உளவுத்துறை அதிகாரி கொடுத்த ரிப்போர்ட்' உற்சாகத்தில் எடப்பாடி பழனிசாமி..!

”தொகுதிவாரியாக மாஜி உளவுத்துறை அதிகாரி கொடுத்த ரிப்போர்டை பார்த்தப் பின்னர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்”

சட்டமன்ற தேர்தலில் சரியாக செயல்படாத அதிமுக மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தயாராகி வருவதாகவும், யார், யார் தேர்தலில் செயல்பட்டார்கள் என்ற பட்டியலை, அதிமுக வியூக வகுப்பு நிறுவனம் தயாரித்து எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தலில் சுணக்கம் காட்டிய மா.செ.க்களுக்கு கல்தா

சட்டமன்ற தேர்தல் முடிந்து, இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், அதிமுகவின் முக்கிய நபர்களை அழைத்து சேலத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய மாவட்ட செயலாளர்கள், அணியின் நிர்வாகிகள் குறித்த பட்டியலை அவர்களிடம் பகிர்ந்து, இவர்கள் மீது தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக எடப்பாடி கூறியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வருத்தத்தை பகிர்ந்த எடப்பாடி

குறிப்பாக, திமுகவுடன் செட்டிங் போட்டுக்கொண்டு அதிமுகவின் வெற்றியை பாதிக்கும் வகையில் செயல்பட்ட 5 மாவட்ட செயலாளர்கள் மீது எடப்பாடி பழனிசாமி கடும் கோபத்தில் இருப்பதாகவும், ஆட்சியை மீண்டும் பிடிப்பதற்காக தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே பிரச்சாரத்தை தொடங்கி, பல்வேறு பணிகளில் தான் ஈடுபட்டிருந்த நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் சிலரே இதுபோன்று செயல்பட்டுள்ளது குறித்து அதிமுக நிர்வாகிகளிடம் அவர் வருத்தமாக பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. 

ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி உறுதி

அதே நேரத்தில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் என்று தமிழக உளவுத்துறையில் ஐ.ஜி. பொறுப்பில் பணியாற்றிய எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான அதிகாரி சர்வே ரிப்போர்ட் எடுத்துக் கொடுத்திருப்பதாகவும், தொகுதி வாரியாக யாருக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் கிடைக்கும் என்ற டேட்டாவையும் அவர் எடுத்துக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. உளவுத்துறை மாஜி அதிகாரி எடுத்துக்கொடுத்த சர்வே அடிப்படையில், பல்வேறு தொகுதிகளில் அதிமுகவிற்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற தெம்பில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே பழனி முருகன் கோயிலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தன்னுடைய குடும்பத்தை உற்சாகத்தோடு சென்று தரிசனம் செய்துவிட்டு வரும்படி எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பதாகவும் சேலம் மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கின்றார்கள். மேலும், ஆட்சி அமைந்த பிறகு குடும்பத்தை சேர்ந்தவர்களின் தலையீடு அரசாங்கத்தில் இருக்கக் கூடாது என்பதையும் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் உறுதிபட தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சரவை பட்டியலும் ரெடி

அதனடிப்படையில், அதிமுக ஆட்சி அமைந்தால் யார், யாரை அமைச்சரவையில் சேர்ப்பது என்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய நெருக்கமான சகாக்களுடன் ஆலோசித்திருப்பதாகவும், அதில் தென் மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் ஒருவருக்கு கல்தா கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவிற்கு ஆதரவாக Exit Poll ?

அதே நேரத்தில் இன்று வெளியாகவிருக்கும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் அதிமுகவிற்கு ஆதரவாக இருக்கும் என்றும் உளவுத்துறை மாஜி அதிகாரி தெரிவித்திருப்பதாகவும், அதனடிப்படையில் இன்று வெளியாகும் முடிவுகளை எதிர்பார்த்து அதிமுகவின் முக்கிய தளகர்த்தர்கள் மிகுந்த ஆர்வத்திலும் இருக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
தஞ்சை நகரில் மட்டும் 430 பேர் மீது வழக்குப்பதிவு... போலீசார் அதிரடி: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
தஞ்சை நகரில் மட்டும் 430 பேர் மீது வழக்குப்பதிவு... போலீசார் அதிரடி: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
சமூக நீதித்துறைக்கு கூடுதல் நிதி... பட்ஜெட் குறித்து திருமாவளவன் சொன்னது என்ன?
சமூக நீதித்துறைக்கு கூடுதல் நிதி... பட்ஜெட் குறித்து திருமாவளவன் சொன்னது என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget