மேலும் அறிய

செங்கல்பட்டில் புதிதாக ஒரு டிடிஎஃப் வாசனா? வீலிங் செய்த இளைஞர் கைது பின்னணி என்ன?

செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் டிடிஎஃப் வாசன் போலவே வீலிங் செய்து அலப்பறை செய்து வந்த இளைஞர் கைது

சமீப காலமாக இளைஞர்கள் சிலர் பைக்குகளில் சாகசம் செய்து அவற்றை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது அதிகரித்துள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால்,  ஆபத்தான முறையில் அவர்கள் செய்கின்ற சாகசம் அவர்களுக்கு மட்டுமில்லாமல்,  சுற்றி இருப்பவர்களுக்கும் அச்சுறுத்தும் வகையில்  அந்த சாகசங்கள் இடம்பெறுகின்றன.  இது குறித்த வீடியோக்கள் வெளியாகும்பொழுது,  சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது அவ்வப்பொழுது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தும் வருகின்றனர்.
செங்கல்பட்டில் புதிதாக ஒரு டிடிஎஃப் வாசனா? வீலிங் செய்த இளைஞர் கைது பின்னணி என்ன?

TTF வாசனின் வீலிங் சாகசத்தை பின்பற்றி இளைஞர்கள் பலரும் இவரை போன்ற எண்ணங்களிலேயே வீலிங் செய்தவாறே வாகனங்களை  இயக்கி வருவதாகவும்  ஒருபுறம் குற்றச்சாட்டுகள் இருந்த வண்ணம் உள்ளன.  அதற்கு ஏற்றார்போல் டிடிஎஃப் வாசன்,  தொடர்ந்து  பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியும் வந்தார்.இதற்கு பல வருடங்களாக விடை இல்லாமல் இருந்துவந்த நிலையில் முதல் முதலாக காஞ்சிபுரத்தில் டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கியது தொடர்பாக வழக்குப்பதிவானது செய்யப்பட்டது.   காஞ்சிபுரத்தில் கைது செய்யப்பட்ட அவர் புழல் சிறையில் இருந்த நிலையில், பிணை கிடைத்து தற்பொழுது வெளியே சுற்றி வருகிறார்.

காஞ்சிபுரம் பாலு செட்டி காவல் நிலையத்தில் தினமும்  கையெழுத்து போட்டு வரும் அவர்,  தன் மீது வைக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் எதிர்த்து பேசியும் வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.  தினமும் காவல் நிலையம் வரும் அவருக்கு, சிறுவர்கள் இளைஞர்கள் பலரும் நேரில் சென்று  தினமும் வரவேற்பு கொடுத்து அட்ரஸாசிட்டியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபுறம் டிடிஎஃப்   வாசன் கதை இப்படி சென்று கொண்டிருந்தால், அவரைப் பின்பற்றினால்  தமக்கும் அதிக அளவு பாலோவர்ஸ் வருவார்கள்,  என்ற  தவறான எண்ணத்தில் பல இளைஞர்கள்  விலையுயர்ந்த பைக்குகளை பயன்படுத்தி,  தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மக்களை அச்சுறுத்தும் வகையில் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


செங்கல்பட்டில் புதிதாக ஒரு டிடிஎஃப் வாசனா? வீலிங் செய்த இளைஞர் கைது பின்னணி என்ன?
அண்மையில் திருச்சியில் தீபாவளி அன்று பட்டாசுகளை இருசக்கர வாகனத்தில் வைத்து வீலிங் செய்தவரே பட்டாசுகளை வெடித்து அட்ராசிட்டி செய்த இளைஞர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தநிலையிலே செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி பகுதியிலே இளைஞர் ஒருவர் வீலிங் சாகசம் நிகழ்த்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கமான duke_gokul என்கிற ஐடி-ல் பதிவேற்றிருக்கிறார்.இந்த வீடியோவானது சமூக வலைதளங்களிலே வேகமாக வைரல் ஆகி பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவர் விதவிதமாக கலர் கலராக சட்டை அணிந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆபத்தான முறையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் வீலிங் தூக்குவதும், இரண்டு கைகளையும் விட்டு வண்டி ஓட்டுவதும் இது போன்ற காட்சிகளை மட்டுமே தனது இன்ஸ்டாகிராம் ஐடியில் வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


செங்கல்பட்டில் புதிதாக ஒரு டிடிஎஃப் வாசனா? வீலிங் செய்த இளைஞர் கைது பின்னணி என்ன?
இந்தநிலையில்,  இந்த வீடியோ குறித்த காட்சிகள் வெளியான நிலையில்  செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை தற்போது களத்தில் இறங்கி  சம்பந்தப்பட்ட நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  காவல்துறை நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர்  செங்கல்பட்டு அடுத்துள்ள புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் எனவும், வெங்கடேசன் என்பவரை மகனான கோகுல் என்பதும் தெரிய வந்தது. தற்பொழுது  மகேந்திரா சிட்டி பகுதியில், உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  தற்பொழுது, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்துள்ள மல்ராசபுரம் பகுதியில் ,  வசித்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.இதனை அடுத்து கோகுல் கைது செய்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் ,அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.   கைது செய்த கோகுல் மீது , பொது இடங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில்  செயல்படுவது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோகுலுக்கு இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான லைசன்ஸ் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.  லைசன்ஸ் இல்லாமலே, இளைஞர் கோகுல் இது போன்ற விபரீதங்களில்  ஈடுபட்டதும்  குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
மாமனார் பாலியல் தொல்லை.. கண்டுகொள்ளாத கணவர்.. தீக்குளித்த பெண்ணால் பரிதவிக்கும் பிள்ளைகள்
மாமனார் பாலியல் தொல்லை.. கண்டுகொள்ளாத கணவர்.. தீக்குளித்த பெண்ணால் பரிதவிக்கும் பிள்ளைகள்
Karun Nair: சோலி முடிஞ்சு..! முடிவுக்கு வந்ததா கருண் நாயர் கிரிக்கெட் வாழ்க்கை?
Karun Nair: சோலி முடிஞ்சு..! முடிவுக்கு வந்ததா கருண் நாயர் கிரிக்கெட் வாழ்க்கை?
ஜூலை 24 கடைசி தேதி! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா
ஜூலை 24 கடைசி தேதி! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tanushree Dutta Emotional | சொந்த வீட்டிலேயே டார்ச்சர்.. கதறி அழுத நடிகை! வெளியான பகீர் வீடியோ
TVK Vijay Meets Rahul Gandhi | ராகுலை சந்திக்க திட்டம் தவெக காங்கிரஸ் கூட்டணி? விஜய் போடும் கணக்கு
Ponmudi vs Lakshmanan| CV சண்முகத்துடன் DEAL?லட்சுமணனுக்கு எதிராக ஸ்கெட்ச் ஆட்டத்தை தொடங்கிய பொன்முடி
ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
மாமனார் பாலியல் தொல்லை.. கண்டுகொள்ளாத கணவர்.. தீக்குளித்த பெண்ணால் பரிதவிக்கும் பிள்ளைகள்
மாமனார் பாலியல் தொல்லை.. கண்டுகொள்ளாத கணவர்.. தீக்குளித்த பெண்ணால் பரிதவிக்கும் பிள்ளைகள்
Karun Nair: சோலி முடிஞ்சு..! முடிவுக்கு வந்ததா கருண் நாயர் கிரிக்கெட் வாழ்க்கை?
Karun Nair: சோலி முடிஞ்சு..! முடிவுக்கு வந்ததா கருண் நாயர் கிரிக்கெட் வாழ்க்கை?
ஜூலை 24 கடைசி தேதி! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா
ஜூலை 24 கடைசி தேதி! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா
IND vs ENG 4th Test: இந்தியா முதலில் பேட்டிங்.. கழட்டிவிடப்பட்ட கருண் நாயர்! அணிக்குள் வந்த சிஎஸ்கே புயல்!
IND vs ENG 4th Test: இந்தியா முதலில் பேட்டிங்.. கழட்டிவிடப்பட்ட கருண் நாயர்! அணிக்குள் வந்த சிஎஸ்கே புயல்!
MK Stalin Photo : ’கையில் வென்ஃப்லான் பேண்டேஜ்’ கண் கலங்க வைக்கும் முதல்வரின் மருத்துவமனை புகைப்படம்..!
’கையில் வென்ஃப்லான் பேண்டேஜ்’ கண் கலங்க வைக்கும் முதல்வரின் மருத்துவமனை புகைப்படம்..!
EPS on Vijay: “திமுகவை வீழ்த்த விஜய் அதிமுக உடன் இணைவார்“ - எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை பலிக்குமா.?
“திமுகவை வீழ்த்த விஜய் அதிமுக உடன் இணைவார்“ - எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை பலிக்குமா.?
தேனி இளைஞர்களே! தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 8000+ காலிப் பணியிடங்கள்! இலவசப் பயிற்சி & உதவித்தொகை
தேனி இளைஞர்களே! தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 8000+ காலிப் பணியிடங்கள்! இலவசப் பயிற்சி & உதவித்தொகை
Embed widget