மேலும் அறிய

ஏரிக்கரைக்கு இளம் பெண்ணுடன் சென்றவர்... பெட்ரோல் ஊற்றி எரிப்பு! நடந்தது என்ன?

மீஞ்சூர் அருகே பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததற்காக ஒரு வாலிபரை ஆறு பேர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீஞ்சூர் அடுத்த, நாலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிநாதன், 33. இவர், நேற்று முன்தினம் காலை, உறவினர்களுக்கு போன் செய்து, நாலுார் ஏரிக்கரை அருகே தன்னை, ஆறு பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் ஊாற்றி எரித்து விட்டதாக தகவல் தெரிவித்து உள்ளார்.உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது, கோபிநாதன் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். மீஞ்சூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று, உடலில் தீக்காயங்களுடன் இருந்த கோபிநாதனை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர்.மருத்துவச் சிகிச்சையில் இருந்த கோபி, நேற்று முன்தினம் நள்ளிரவு இறந்தார். இவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் தனது உறவினர் ஒருவரை செல்போனில் தொடர்புகொண்ட கோபிநாதன், ‘‘நாலூர் ஏரிக்கரை அருகே என்னை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அடித்து உதைத்து, பெட்ரோல் ஊற்றி எரிக்கிறார்கள். உடனே வந்து என்னை காப்பாற்று...’’ என்று கதறியுள்ளார். உடனே, அந்த உறவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு, கோபிநாதன் எரிந்த நிலையில் அங்கும் இங்கும் ஓடி கீழே விழுந்தார்.

ஏரிக்கரைக்கு இளம் பெண்ணுடன் சென்றவர்... பெட்ரோல் ஊற்றி எரிப்பு! நடந்தது என்ன?

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி கோபிநாதன் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மீஞ்சூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கோபிநாதன் தன்னை 6 பேர் எரித்து கொலை செய்ததாக கூறியிருப்பதால், அது தொடர்பாக விசாரிக்கின்றனர். இதனிடையே, கோபிநாதன் ஒரு பெண்ணுடன் ஏரிக்கரைக்கு செல்லும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

ஏரிக்கரைக்கு இளம் பெண்ணுடன் சென்றவர்... பெட்ரோல் ஊற்றி எரிப்பு! நடந்தது என்ன?

மேலும், அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், அவர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கும் காட்சியும் பதிவாகியிருந்தது. எனவே, கோபிநாதன் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா, அவருடன் சென்ற பெண் யார் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும், கோபிநாதனுக்கு பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்னையில் யாராவது தீ வைத்து எரித்தார்களா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மீஞ்சூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை
பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை
பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி: இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி : இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
ஜன.1 முதல் புது விதிகள்; ஆதார்- பான் இணைச்சுட்டீங்களா? இத்தனை பிரச்சினை வருமா? உடனே என்ன செய்யணும்?
ஜன.1 முதல் புது விதிகள்; ஆதார்- பான் இணைச்சுட்டீங்களா? இத்தனை பிரச்சினை வருமா? உடனே என்ன செய்யணும்?
Embed widget