மேலும் அறிய

Crime: மாமியார் தற்கொலை.. 4 வயது மகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பதற்றம்.. என்ன நடந்தது?

முன்னதாக இப்பெண்ணின் மாமியார் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில், தற்போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெங்களூருவின் எச்ஏஎல் பகுதியில் உள்ள குடியிருப்பில் தன் நான்கு வயது மகளைக் கொன்றுவிட்டு பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இப்பெண்ணின் மாமியார் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில், தற்போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று (ஆக.22) அதிகாலை 4.30 மணியளவில் பக்கத்து அறையில் இருந்து ஏதோ சத்தம் கேட்டதை அடுத்து, அவரது கணவர் கதவைத் தட்டியநிலையில், மனைவி காயத்ரியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

அதனைத் தொடர்ந்து கதவை உடைத்து திறந்தபோது காயத்ரியையும், மகள் சம்யுக்தாவையும் கண்டு அதிர்ச்சியடைந்த நரேந்திரன் அவசர அவசரமாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் சம்யுக்தா உயிரிழந்ததாக அறிவித்தனர்.

காயத்ரி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர் குணமடைந்தவுடன் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து அவரது மனநலம் குறித்து உளவியல் நிபுணருடன் ஆலோசிக்க உள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் அக்கவுண்டண்டாக பணிபுரியும் நரேந்திரன், தனது தந்தையை சந்தித்துவிட்டு முன்னதாக தமிழ்நாட்டில் இருந்து திரும்பியதாகவும் மூன்று வாரங்களுக்கு முன்பு தனது தாயார் தற்கொலை செய்து கொண்டதையடுத்து நரேந்திரன் தனது தந்தையை அடிக்கடி பார்த்து வந்ததாகவும், இதற்கும் தற்கொலை முயற்சிக்கும் சம்பந்தம் உள்ளதா என தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இதே போல் பெங்களூரில் அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து தனது நான்கு வயது மகளை தூக்கி எறிந்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற 29 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ​​ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 5 ஆண்டுகளில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழ்நாடும், மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கமும் இருந்து வருகின்றன.

பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி, திருவள்ளூர் மாணவி சரளா ஆகியோர் தற்கொலை சம்பவங்கள் தமிழ்நாட்டையே அதிர வைத்தன. தொடர்ந்து மாமல்லப்புரம், விக்கிரவாண்டி, மேட்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிகளும் பலருக்கும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் படிக்க: Imran Khan on Salman Rushdie: ’இஸ்லாமியர்களின் கோபம் புரிகிறது... ஆனால் நியாயப்படுத்த முடியாது’ - சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து இம்ரான் கான்

Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலைமையைச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!

தலைப்பு செய்திகள்

15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
ஆசை வார்த்தை நம்பி ஆப்ப அடிச்ச காதலி! கடைசியில் கம்பி எண்ணும் கள்ளக்காதல் ஜோடி- நடந்தது என்ன?
ஆசை வார்த்தை நம்பி ஆப்ப அடிச்ச காதலி! கடைசியில் கம்பி எண்ணும் கள்ளக்காதல் ஜோடி- நடந்தது என்ன?
" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
Embed widget