மேலும் அறிய

டெண்ட் அடித்து மருத்துவம் பார்த்த போலி கைது; பக்கவிளைவுகளுடன் பலர் அவதி!

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் போலியாக மருத்துவம் பார்த்த 56 வயது  பெண்ணை போலீசார் கைது செய்த நிலையில், போலி மருத்துவத்தால் பக்கவிளைவு ஏற்பட்ட பலரும் தனியார் மருத்துவமனையில் அனுமதி .

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் போலியாக மருத்துவம் பார்த்த 56 வயது  பெண்மணி கைது,போலியாக மருத்துவம் பார்த்ததால் பக்கவிளைவுகளுடன் நோயாளிகள்  தனியார் மருத்துவமனையில் அனுமதி.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை, பூண்டி, கூக்கால், கிளாவரை, குண்டுபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அரசு மருத்துவமனை மற்றும் ஆராம்ப சுகாதார நிலையம் இல்லாத காரணத்தினால் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள்  கொடைக்கானல், மன்னவனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு  வந்து சிகிச்சை பெற்று திரும்ப வேண்டும். இப்பகுதியில் போதுமாக அடிப்படை வசதிகள் இல்லாத  நிலையில்  மலை கிராமங்களில் மருத்துவம் பார்ப்பதற்கான மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் இல்லாததால் மருத்துவர்களிடம் செவிலியராக பணிபுரிந்த சிலர் அப்பகுதியில் கிராம மக்களை குறி வைத்து வீடு வாடகைக்கு எடுத்து மருத்துவத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்து, மாத்திரைகளை தனியார் மெடிக்கல்களில் வாங்கி போலியாக அரை குறை மருத்துவம்  பார்த்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

டெண்ட் அடித்து மருத்துவம் பார்த்த போலி கைது; பக்கவிளைவுகளுடன் பலர் அவதி!

இதில் பூண்டி பகுதியை சேர்ந்த  சந்திரன்(55) , நாகராஜ்(45) ஆகிய இருவர் காய்ச்சல் மற்றும் அட்டை பூச்சி கடித்தற்கு கடந்த 5 தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் வீட்டில் மருத்துவம் பார்த்து வந்த தேவி என்பவரிடம் மருத்துவம் பார்த்து ஊசி போட்டுள்ளனர். இதில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஊசி போடப்பட்ட இடுப்பு பகுதியில் வீக்கம் ஏற்பட்டு காயமாக  மாறியுள்ளது, இதனையடுத்து இந்த இருவரும் கொடைக்கானல்  தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர் . இதனை அறிந்த கோட்டாட்சியர் காவல் துறைக்கு புகார் அளிக்கவே பூம்பாறை மலை கிராமத்தில் பொதுமக்களுக்கு போலியாக மருத்துவம் பார்த்து கொண்டிருந்த  தேவியின் தோழியான மோகினி(56) என்ற பெண்ணை  கொடைக்கானல் காவல் துறையினர் கைது செய்து அவரது வீட்டில் இருந்த மருத்துவம் பார்ப்பதற்கு  பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்தும் முறையான மருத்துவம் தெரியாமல் மருத்துவம் பார்த்து பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் தொற்று நோயை தெரியாமல் பரப்புவது ,தொற்று நோயை தெரிந்தே பரப்புவது, ஏமாற்றுதல், போலியாக மருத்துவம் பார்ப்பது  உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெண்ட் அடித்து மருத்துவம் பார்த்த போலி கைது; பக்கவிளைவுகளுடன் பலர் அவதி!

மேலும் மலைகிராமங்களில் போலியாக மருத்துவம் பார்த்து வரும் சிலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள்  என காவல் துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவருக்கு  நரம்புகள் பாதிக்கப்பட்டு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டுவருவதாக தனியார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்தார், இதே போன்று போலியாக மருத்துவம் பார்த்ததால் 80 நபர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி கிராம மக்களால் கூறப்படுகிறது.

டெண்ட் அடித்து மருத்துவம் பார்த்த போலி கைது; பக்கவிளைவுகளுடன் பலர் அவதி!

தற்போது கொரோனா வைரஸ்சின் தாக்கம் அதிகமாக பரவி வரும் நிலையில் இது போன்று போலியான மருத்துவர்கள் ஊருக்குள் ஊடுருவி இருப்பதை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கையும் எழுந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget