மேலும் அறிய

Crime: முதல் கணவரின் பென்ஷன் தொகை பெற தடையாக இருந்த 2வது கணவர் - கொலை செய்ய முயன்ற மனைவி

சீர்காழி அருகே முதல் கணவரின் பென்ஷன் தொகையை பெற இரண்டாவது கணவர் தடையாக இருந்ததால் அவரை உறவினர்களுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழி அடுத்த மேலச்சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் 47 வயதான மில்லர். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரின் முதல் மனைவி இவரை விட்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றதால், கடந்த 2021 ஆண்டு கணவனை இழந்த மயிலாடுதுறை மாவட்டம் குத்தலாம் தாலுக்கா சேண்டிருப்பு கிராமத்தைச் சேர்ந்த 38 வயதான அம்பிகா என்பவரை 2 வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவருக்கும் கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.  


Crime: முதல் கணவரின் பென்ஷன் தொகை பெற தடையாக இருந்த 2வது கணவர் -  கொலை செய்ய முயன்ற மனைவி

இந்நிலையில் அம்பிகாவின் 2வது கணவர் ஜெயகண்ணன் தலைமை ஆசிரியராக பணியாற்றி உயிரிழந்ததால் அவரது செட்டில்மெண்ட் மற்றும் பென்ஷன் தொகை அம்பிகா பெயருக்கு வந்துள்ளது. இது குறித்து கேட்ட மில்லர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு செட்டில்மெண்ட் தொகை மற்றும் பென்ஷன் தொகையை வாங்குவது சட்டத்திற்கு புறம்பானது என எச்சரித்துள்ளார். இதனால் மில்லர் - அம்பிகா இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது. 


Crime: முதல் கணவரின் பென்ஷன் தொகை பெற தடையாக இருந்த 2வது கணவர் -  கொலை செய்ய முயன்ற மனைவி

தொடர் தகராறு காரணமாக மில்லர் மற்றும் அம்பிகா தரப்பில் வைத்தீஸ்வரன் கோயில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வைத்தீஸ்வரன் கோயில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்திய நிலையில் மில்லரை பிரிந்து சென்ற அம்பிகா உறவினர்களுடன் சேர்ந்து மேலச்சாலை மில்லர் வீட்டிற்கு வந்து வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து சூறையாடி, மில்லரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அவரின் 70 வயதான தாயார் சகுந்தலா  என்பவரையும் கடுமையாக தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளனர். 


Crime: முதல் கணவரின் பென்ஷன் தொகை பெற தடையாக இருந்த 2வது கணவர் -  கொலை செய்ய முயன்ற மனைவி

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து படுகாயம் அடைந்த மில்லர் மற்றும் அவரது தாயார் சகுந்தலா இருவரையும்  மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன்கோயில் காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தப்பி ஓடி அம்பிகா மற்றும் அவரது உறவினர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  முதல் கணவரின் செட்டில்மெண்ட் தொகை மற்றும் பென்ஷன் தொகைக்கு ஆசைப்பட்டு 2 வது கணவரை  மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சீர்காழி அருகே 4 வகுப்பு சிறுவனை மிரட்டி ஒரினசேர்க்கையில் ஈடுபடுத்திய பள்ளி மாணவர்கள் மூன்று பேர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 4 -ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுவனை, அதே கிராமத்தை சேர்ந்த பிளஸ் டூ, ஒன்பதாம் வகுப்பு பயிலும் இரண்டு சிறுவர்கள் மற்றும் 10 -ம் வகுப்பு படித்து தேர்வில் தோல்வியடைந்த ஒரு சிறுவன் என மூன்று பேர் சேர்ந்து, அருகிலுள்ள செங்கல் காளவாய் அமைந்துள்ள காட்டு பகுதிக்கு  அழைத்துச் சென்று மிரட்டி கட்டாயப்படுத்தி ஒரினசேர்க்கையில் ஈடுபடுத்தி  உள்ளனர். தொடர்ந்து அந்த சிறுவனுக்கு 3 பேரும் தொந்தரவு கொடுத்த நிலையில் தினமும் அச்செயல் தொடர்ந்துள்ளது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த தகவலின் பேரில் சீர்காழி அனைத்து மகளிர் போலீசார் போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மூன்று சிறுவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா?  கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா? கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Breaking News LIVE 28th Sep 2024: இஸ்ரேல் தாக்குதல் - லெபனானில் மேலும் 300 பேர் பலி
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா?  கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா? கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி
ENG Vs AUS ODI: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - 126 ரன்களுக்கு ஆல்-அவுட், அபார வெற்றி
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Kanchipuram Traffic Diversion: காஞ்சிபுரம் வாகன ஓட்டிகளே உஷார்... திடீர் போக்குவரத்து மாற்றம்.. முழு தகவல் இங்கே ..
Kanchipuram Traffic Diversion: காஞ்சிபுரம் வாகன ஓட்டிகளே உஷார்... திடீர் போக்குவரத்து மாற்றம்.. முழு தகவல் இங்கே ..
Embed widget