மேலும் அறிய

விழுப்புரம்: நண்பனை கடத்தி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்; பதறிய தாய் - முழு பின்னணி என்ன..?

விழுப்புரத்தில் மாணவரை கடத்தி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரது நண்பர்கள் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம் சாலாமேடு சிங்கப்பூர் நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இந்த தம்பதிக்கு சூர்யகுமார் (வயது 19) என்ற மகன் உள்ளார். இவர், ஆன்லைன் மூலம் பட்டப்படிப்பு படித்து வருகிறார். கிருஷ்ணவேணி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். சூர்யகுமாரும், திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த ஏழுமலை மகன் நந்தகுமார்(21), சூர்யா, மாரி, பெரியபாலா, முரளி ஆகியோரும் நண்பர்கள் ஆவர். இந்த நிலையில் சூர்யகுமாரின் வீட்டிற்கு நேற்று இரவு அவரது நண்பர்கள் வந்தனர். அவர்கள், டீ குடிப்பதற்காக சூர்யகுமாரை வெளியே அழைத்துச்சென்றனர். ஜானகிபுரத்தில் தயார் நிலையில் இருந்த காரில் சூர்யகுமாரை ஏற்றி, கரடிப்பாக்கத்திற்கு கடத்தி சென்றனர். பின்னர் சூர்யகுமாரிடம் 5 பேரும், உன் அம்மாவிடம் அதிக பணம் இருக்கிறது. எனவே ரூ.10 லட்சம் வாங்கித்தருமாறு கேட்டு மிரட்டினர். இதை சற்றும் எதிர்பாராத சூர்யகுமார், பணம் வாங்கித்தர முடியாது என்று கூறினார்.

விழுப்புரம்: நண்பனை கடத்தி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்; பதறிய தாய் - முழு பின்னணி என்ன..?

ரூ.10 லட்சம் கேட்டு தாக்குதல் :

இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து உருட்டு கட்டை, இரும்பு கம்பியால் தாக்கினர். வலிதாங்க முடியாமல் தவித்த சூர்யகுமார், தனது தாய் கிருஷ்ணவேணியை செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.10 லட்சத்தை உடனடியாக எடுத்து வருமாறு கதறியபடி கூறினார். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் கிருஷ்ணவேணி திகைத்தார். இது பற்றி அவர், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சூர்யகுமாரை மீட்கவும், அவரை கடத்திய 5 பேரை கைது செய்யவும் போலீசார் திட்டம் வகுத்தனர்.


விழுப்புரம்: நண்பனை கடத்தி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்; பதறிய தாய் - முழு பின்னணி என்ன..?

நள்ளிரவில் தனியாக வரவைத்து கடத்தல் :

இதனிடையே கிருஷ்ணவேணியை செல்போனில் தொடர்பு கொண்ட சூர்யகுமாரின் நண்பர்கள், விழுப்புரம் புறவழிச்சாலையில் எல்லீஸ்சத்திரத்துக்கு நள்ளிரவில் பணத்துடன் தனியாக வரவேண்டும் என்றும், போலீசுக்கு தெரிவிக்க கூடாது என்றும் கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தனர். இதையடுத்து போலீசாரின் ஆலோசனைபடி கிருஷ்ணவேணி, பணப்பையுடன் எல்லீஸ்சத்திரத்திற்கு சென்றார். அப்போது காரில் வந்த சூர்யகுமாரின் நண்பர்கள், பணத்தை கேட்டனர். அந்த சமயத்தில் அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார், தங்களது ஜீப்பில் விரைந்தனர்.

போலீசாரின் ஜீப்பை கண்டதும் அவர்கள், சூர்யகுமாரை கீழே தள்ளிவிட்டு காரில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். உடனே போலீசார், அவர்களை துரத்திச்சென்றும் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து சூர்யகுமாரை மீட்ட போலீசார், அவரை சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, சூர்யகுமார் கொடுத்த புகாரின் பேரில் நந்தகுமார், சூர்யா, மாரி, பெரியபாலா, முரளி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் நந்தகுமார் கைது செய்யப்பட்டார். மற்ற 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
Embed widget