மேலும் அறிய

திரும்பும் திசையெல்லாம் கொள்ளை... ஆட்டம் காட்டிய கொள்ளையன்; ஸ்கெட்ச் போட்டு தட்டி தூக்கிய போலீஸ்

விழுப்புரம்: திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பலே கொள்ளையர்கள் கைது,

விழுப்புரம்: திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பலே கொள்ளையர்களை கைது செய்து பிரம்மதேசம் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பிரம்மதேச காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லாலம் கூட்டு சாலையில் பிரம்மதேசம் காவல் நிலைய உதவிஆய்வாளர் சுதன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்ரீபதி மற்றும் தலைமை காவலர்கள் சிவசக்தி மைந்தன், வெற்றிவேல் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திண்டிவனம் மார்க்கத்திலிருந்து மரக்காணம் நோக்கி அதி வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற போது இருசக்கர வாகனத்தில் இருந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கையில் வைத்திருந்த இரும்பு ராடை வைத்து மிரட்டி உள்ளனர்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட காவலர்கள் இருவரையும் பிடித்து அவர்களிடம் இருந்த பேக்கை சோதனை செய்தபோது பேக்கில் கை குளோஸ், இரும்பு ராடு, முக கவசம் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளது. சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் சிவகங்கை மாவட்டம் கனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் அழகர்சாமி வயது 35 என்பதும், மற்றொருவர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு இந்திரா நகர் பகுதியை சேர்ந்த மலைராஜன் என்பவரது மகன் செல்வகுமார் வயது 25 என்பதும், இவர்கள் பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மானூர் கிராமத்தில் ஆழ்வார் என்பவரது வீட்டில் கடந்த 23.05.2025 அன்று இரண்டு லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

இவர்கள் பிரம்மதேசம் மட்டுமல்லாமல் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் அடிக்கடி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும், இதில் அழகர்சாமி என்பவர் மீது சிவகங்கை, மதுரை, சென்னை, புதுவை உள்ளிட்ட பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் புதுச்சேரியில் உள்ள பிரபல சாராய வியாபாரி பன்னீர்செல்வம் என்பவரிடம் அடைக்கலம் இருந்து கொண்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் இவர்களுக்கு சிவகங்கை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் மூளையாக செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது, அழகர்சாமி அளித்த தகவலின் பெயரில் புதுச்சேரியில் இருந்த பன்னீர்செல்வத்தையும் போலீசார் கைது செய்துள்ளனர், மேலும் இந்த தொடர் கொள்ளைகளுக்கு மூளையாக செயல்பட்ட சிவகங்கை ரவுடியையும் பிரம்மதேசம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இவர்களிடமிருந்து இரண்டரை பவுன் தங்க நகை 3 ஜோடி வெள்ளி கொலுசு மற்றும் பித்தளை பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது மேலும் கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்திய ஆவணங்கள் இல்லாத இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பல்வேறு கூட்ட சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் என்பதால் திண்டிவனம் உட் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் நேரில் விசாரணை மேற்கொண்டு பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பார்வையிட்டு தமிழக மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் குற்றவாளி குறித்து தகவல்களை அனுப்பி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார், மேலும் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த பிரம்மதேசம் போலீசாரையும் பாராட்டினார்.

தலைப்பு செய்திகள்

" உன் மனைவியை என்னுடன் அனுப்பிடு " வீட்டிற்கே சென்று கணவரிடம் கூச்சலிட்ட நபர்
வீட்டுக்கு வந்த தோழி !! காணாமல் போன 20 பவுன் நகை !! அம்பலமான பின்னணி
வீட்டுக்கு வந்த தோழி !! காணாமல் போன 20 பவுன் நகை !! அம்பலமான பின்னணி
ஏன் படிக்கல ? தாய் திட்டியதால் ஆத்திரம்...தூங்கிய தாயை உரலை போட்டு கொன்ற மகன்
ஏன் படிக்கல ? தாய் திட்டியதால் ஆத்திரம்...தூங்கிய தாயை உரலை போட்டு கொன்ற மகன்
பெண் குழந்தைக்கு நேர்ந்த சோகம் !! 14 மணி நேரத்திலேயே கழுத்தை நெரித்து கொன்ற பாட்டி
பெண் குழந்தைக்கு நேர்ந்த சோகம் !! 14 மணி நேரத்திலேயே கழுத்தை நெரித்து கொன்ற பாட்டி

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: பொதுக்குழுவிற்கு தயாராகும் ADMK..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
பொதுக்குழுவிற்கு தயாராகும் ADMK..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
TN Weather Update: தமிழத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Embed widget