மேலும் அறிய

லத்தியால் தாக்கிய போலீசார்: சுருண்டு விழுந்து இறந்த பெட்டிக்கடைக்காரர்; விழுப்புரத்தில் நடந்தது என்ன?

அருகில் இருந்த வேறு ஒரு காவலர் அவரது கையில் இருந்த லத்தியால் ஓங்கி மார்புப்பகுதியில் குத்தினார், அப்போது எனது கணவர் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகேயுள்ள கடகால் கிராமத்தில் அரசு மதுபான கடையின்  அருகிலேயே பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த   உலகநாதன் (வயது 60) என்பவர் ஸ்நாக்ஸ் கடை நடத்தி வருகிறார்.

சமாதானம் செய்ய வந்தவர் மீது தாக்குதல்... கடுப்பாகி நாட்டு குண்டு வீசினார்!


லத்தியால் தாக்கிய போலீசார்: சுருண்டு விழுந்து இறந்த பெட்டிக்கடைக்காரர்; விழுப்புரத்தில் நடந்தது என்ன?

 

மதுபான கடை அருகே கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் அவரது கடை பகுதிக்கு சென்ற பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் மற்றும் அரகண்டநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா ஆகியோர் உலகநாதனை, மதுபான கடையிலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் தான் கடை வைக்க வேண்டும் எனவும், மதுக்கடைக்கு அருகிலேயே வைக்கக் கூடாது என கூறியுள்ளனர்.

தான் இந்த பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக கடை வைத்திருப்பதாகவும், தற்போது ஏன் கேட்கிறீர்கள் என  உலகநாதன் கேட்டதாக கூறப்படுகிறது. போலீஸ் கூறியும் கடையை அப்புறப்படுத்தாததால் ஆத்திரமடைந்த காவலர் ஒருவர், உலகநாதனை தாக்கியதாக கூறப்படுகிறது. 


லத்தியால் தாக்கிய போலீசார்: சுருண்டு விழுந்து இறந்த பெட்டிக்கடைக்காரர்; விழுப்புரத்தில் நடந்தது என்ன?

மார்பில் காயம் அடைந்த நிலையில் உலகநாதன் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து உலகநாதனை மீட்ட, அப்பகுதியினர் அவ்வழியாக வந்த ஆட்டோவில் திருக்கோவிலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் உலகநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உலகநாதனை தாக்கிய போலீசாரை கண்டித்து அவரது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 


லத்தியால் தாக்கிய போலீசார்: சுருண்டு விழுந்து இறந்த பெட்டிக்கடைக்காரர்; விழுப்புரத்தில் நடந்தது என்ன?

 

இந்நிலையில் தன் கணவரை போலீசார் அடித்துக் கொன்றதாக அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். அவரது புகார் மனுவில் இருப்பதாவது:

மதியம் 12 மணி அளவில் எங்களது இடத்தில் வைத்துள்ள பெட்டி கடையில் சுண்டல், போண்டா, வாட்டர் பாட்டில் விற்று எனது கணவர் உலகநாதன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். மேற்படி வியாபாரத்தில் சுமார் 3 மணி அளவில் ஜீப்பில் வந்த அரகண்டநல்லூர் காவலர்கள் 4 பேர் எங்களது கடையில் ஜீப்பை நிறுத்தி வியாபாரம் செய்ய வேண்டாம் என கூறினார்கள். அப்போது வியாபாரம் நடந்து கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த காவலர்கள் கடையில் இருந்த பொருட்களை சூறையாடினார்கள். மேலும் என்னை அடிக்க அவர்களது கையில் இருந்த லத்தியை ஓங்கினார். அப்போது எனது அருகில் இருந்த எனது கணவர் காவலர்களை பார்த்து எனது மனைவியை அடிக்க வேண்டாம் என தடுக்க முற்பட்ட போது எனது கணவரை அருகில் இருந்த வேறு ஒரு காவலர் அவரது கையில் இருந்த லத்தியால் ஓங்கி மார்புப்பகுதியில் குத்தினார், அப்போது எனது கணவர் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்து நான் அப்போது கூச்சலிட்டதால் அருகில் இருந்த எனது மகள் கிருஷ்ணவேணி எனது மகன் ராமு மருமகள் மகாலட்சுமி ஆகியோர் ஓடிவந்து எனது கணவருக்கு தண்ணீர் கொடுத்தனர். அவருக்கு தண்ணீர் இறங்கவில்லை உடனடியாக அவ்வழியாக வந்த ஆட்டோவை பயன்படுத்தி திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம் எனது கணவரை பரிசோதித்த மருத்துவர்கள் கணவரை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். மேலும் இது குறித்து விசாரணை செய்து கணவரின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி புகாரில் கேட்டிருந்தார்.

போலீசார் தாக்கியதில் பெட்டிக்கடைக்காரர் இறந்த சம்பவம், மீண்டும் ஒரு சாத்தன்குளம் சம்பவத்தை நினைவூட்டுகிறது. 

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கத்தினால் குத்துவேன்! - பெண்ணின் வாயை பொத்தி வாலிபர்கள் அட்டூழியம் - திருப்பத்தூரில் நடந்த பகீர் சம்பவம்
கத்தினால் குத்துவேன்! - பெண்ணின் வாயை பொத்தி வாலிபர்கள் அட்டூழியம் - திருப்பத்தூரில் நடந்த பகீர் சம்பவம்
ஊருக்கு நாலு பேர் இருந்துட்டு எங்களையே மிரட்டுறீங்களா? காங்கிரஸாருக்கு எதிராக திரண்ட திமுகவினர்! சீர்காழியில் பரபரப்பு‌...
ஊருக்கு நாலு பேர் இருந்துட்டு எங்களையே மிரட்டுறீங்களா? காங்கிரஸாருக்கு எதிராக திரண்ட திமுகவினர்! சீர்காழியில் பரபரப்பு‌...
Watch Video: பட்டப்பகலில்.. திட்டமிட்டு காரால் அடித்து தூக்கப்பட்ட வக்கீல் படுகொலை - நெஞ்சை உலுக்கும் வீடியோ
பட்டப்பகலில்.. திட்டமிட்டு காரால் அடித்து தூக்கப்பட்ட வக்கீல் படுகொலை - நெஞ்சை உலுக்கும் வீடியோ
அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளை செய்த அக்கிரமம்! எலி மருந்து குடித்த தங்கை! பரபரப்பு வாக்குமூலம்
அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளை செய்த அக்கிரமம்! எலி மருந்து குடித்த தங்கை! பரபரப்பு வாக்குமூலம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
IPL 2026: எலிமினேட்டருக்கு செல்லுமா ராஜஸ்தான்? முட்டுக்கட்டை போடுமா மும்பை?
IPL 2026: எலிமினேட்டருக்கு செல்லுமா ராஜஸ்தான்? முட்டுக்கட்டை போடுமா மும்பை?
Minister Keerthana : வாய்கிழியே பேசிட்டு இப்போ இப்படி சிரிக்கிறீங்களே.! அமைச்சர் கீர்த்தனாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்
வாய்கிழியே பேசிட்டு இப்போ இப்படி சிரிக்கிறீங்களே.! அமைச்சர் கீர்த்தனாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்
DMK ADMK ED: லாக்கான கழகங்கள்..! 22 மாஜி அமைச்சர்களை குறிவைத்த ED,சொத்து டூ ஊழல் - லிஸ்டில் யார் யார் தெரியுமா?
லாக்கான கழகங்கள்..! 22 மாஜி அமைச்சர்களை குறிவைத்த ED,சொத்து டூ ஊழல் - லிஸ்டில் யார் யார் தெரியுமா?
DMK Cong: ”மாட்டிக்கிட்ட பங்கு” மாஸ்க் போட்டுட்டு நாடகமா போடுறீங்க- திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்
”மாட்டிக்கிட்ட பங்கு” மாஸ்க் போட்டுட்டு நாடகமா போடுறீங்க- திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்
Embed widget