மேலும் அறிய

மருத்துவமனைக்கு அழைத்து வந்த ப்ளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை; விடுதி மேலாளர் உள்ளிட்ட 2 பேர் கைது!

விழுப்புரத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கட்டட மேஸ்திரியான மணிகண்டனை கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் பெண் ஒருவருக்கு ப்ளஸ் 2 படிக்கும் மகள் உள்ளார். அந்தப் பெண் கட்டட வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வருகிறார். அந்தப் பெண்ணுடன் புதுச்சேரியை சேர்ந்த கட்டட மேஸ்திரியான மணிகண்டன் என்பவர் உடன் வேலை செய்து வந்துள்ளார். மாணவிக்கு சில தினங்களாக உடல்நலம் சரியில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மகளை கட்டட மேஸ்திரியான மணிகண்டனுடன் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Seeman Speech: மாரிதாஸ் விவகாரம்! சங்கி திமுக! கடுப்பான சீமான்

விழுப்புரத்தில் உள்ள மருத்துவ மனையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் மாணவியும் மணிகண்டனும் சினிமாவுக்கு சென்றுள்ளனர். திரையரங்கில் இருந்து திரும்பி வரும் போது மாணவி மயக்கம் வருவதாக கூறியுள்ளார். அருகில் உள்ள விடுதிக்கு சென்று ஓய்வு எடுத்துவிட்டு பிறகு வீட்டுக்கு செல்லலாம் எனக் கூறி மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.


மருத்துவமனைக்கு அழைத்து வந்த ப்ளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை; விடுதி மேலாளர் உள்ளிட்ட 2 பேர் கைது!

 

Anbil Mahesh: மேயராகிறாரா உதயநிதி? பதிலளித்த அன்பில் மகேஷ்

விழுப்புரம் பேருந்து நிலையத்துக்கு எதிரில் இருந்த விடுதிக்கு மாணவியை அழைத்து சென்று அங்கு அறை எடுத்து தங்கியுள்ளனர். மாணவி மயக்க நிலையில் இருந்த போது சிறுமி என்றும் பாராமல் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு சென்ற மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

அதனை தொடர்ந்து அந்தப் பெண் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கட்டட மேஸ்திரியான மணிகண்டனை கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு விடுதியில் அறை ஒதுக்கித் தந்த மேலாளர் தணிகைவேலுவையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

போக்சோ சட்டம் பற்றிய தகவல் :

சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறையை தடுக்கும் மற்றும் பாதுகாக்கும் விதமாக 2012 நவம்பர் 14 அன்று இந்தியாவில் போக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்தது. மேலும், இந்த பிரத்யேக சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது மற்றும் நோக்கத்துடன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவது போன்ற செயல்களுக்கு நீதிமன்றம் குறைந்தபட்சம் மூன்று வருட தண்டை அல்லது அதிகபட்சம் 5 வருடம் வரை தண்டனை கொடுக்கும்.

மேலும், அபராதமும் விதிக்கப்படலாம். பிரிவு 3ன் படி, சிறார்களை வன்கொடுமை செய்தாலோ, வேரோரு நபரை வைத்து செய்ய தூண்டினாலோ, குழந்தையின் உடலின் எந்தப் பகுதியிலும் ஊடுருவலை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டாலோ அது பாலியல் வன்கொடுமை என்று கருதப்படுகிறது. இந்த குற்றத்திற்காக ஒருவருக்கு குறைந்தபட்சம் 7 வருட சிறை தண்டனையும் அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரையிலும் நீதிமன்றம் கொடுக்கும். ஒரு குழந்தைக்கு கார்டியனாக இருப்பவர் அல்லது குழந்தைக்கு பாதுகாப்பு கொடுக்கக்கூடிய இடத்தில் இருப்பவர்களே அக்குழந்தையை வன்கொடுமை செய்தால் பிரிவு 5ன் படி நீதிமன்றம் தண்டனை கொடுக்கும்.

உதாரணமாக, குழந்தைகள் காப்பகத்தில் நடக்கும் வன்கொடுமை, காவல் நிலையத்தில் சிறார்களுக்கு நடக்கும் வன்கொடுமை, ராணுவத்தினரால் சிறார்களுக்கு ஏற்படும் வன்கொடுமை, கோரமான முறையில் நடக்கும் வன்கொடுமை, காயம் ஏற்படுத்துவது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் வன்கொடுமை செய்வது போன்ற குற்றங்கள் இந்த பிரிவில் அடங்குகிறது. இதனால் குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 10 வருடம், அதிகபட்சம் ஆயுள்தண்டனை வரையிலும் கொடுக்கலாம்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

செங்கல்பட்டு: பாமக பேனர் விவகாரம் - பரபரப்பு திருப்பம்! காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
செங்கல்பட்டு: பாமக பேனர் விவகாரம் - பரபரப்பு திருப்பம்! காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
அடுக்குமாடி குடியிருப்பில் அடிக்கடி உல்லாசம் !! நிர்வாணமாக புகைப்படம் எடுத்த இளைஞர் !!
அடுக்குமாடி குடியிருப்பில் அடிக்கடி உல்லாசம் !! நிர்வாணமாக புகைப்படம் எடுத்த இளைஞர் !!
மதுரை காமராசர் பல்கலை ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! அதிர்ச்சியில் அதிகாரிகள், நடந்தது என்ன?
மதுரை காமராசர் பல்கலை ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! அதிர்ச்சியில் அதிகாரிகள், நடந்தது என்ன?
கிளிக்’ செய்தால் லாட்டரி..? கோவையில் ரூ.2.46 லட்சத்துடன் ஆன்லைன் லாட்டரி விற்பனையாளர்கள் கைது
கிளிக்’ செய்தால் லாட்டரி..? கோவையில் ரூ.2.46 லட்சத்துடன் ஆன்லைன் லாட்டரி விற்பனையாளர்கள் கைது
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS Join Dmk : மெகா ட்விஸ்ட்.! கை விட்ட பாஜக, அதிமுக... வேறு வழியில்லாமல் திமுகவில் தஞ்சம் அடையும் ஓபிஎஸ்.?
மெகா ட்விஸ்ட்.! கை விட்ட பாஜக, அதிமுக... வேறு வழியில்லாமல் திமுகவில் தஞ்சம் அடையும் ஓபிஎஸ்.?
Nainar Nagendran: தேர்தல் வெற்றிக்குப் பின் ஆட்சியில் பங்கு.. அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்க ரெடியான பாஜக!
Nainar Nagendran: தேர்தல் வெற்றிக்குப் பின் ஆட்சியில் பங்கு.. அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்க ரெடியான பாஜக!
ஷாருக்கான், மிருணாள் , கங்கனா என படையெடுக்கும் திரை நட்சத்திரங்கள் - மும்பையில் நடக்கும் சங்கமம்
ஷாருக்கான், மிருணாள் , கங்கனா என படையெடுக்கும் திரை நட்சத்திரங்கள் - மும்பையில் நடக்கும் சங்கமம்
தவெகவில் மரியாதை இல்லையா? .. எஸ்.பி.வேலுமணி கருத்துக்கு செங்கோட்டையன் பதிலடி!
தவெகவில் மரியாதை இல்லையா? .. எஸ்.பி.வேலுமணி கருத்துக்கு செங்கோட்டையன் பதிலடி!
PAK AFG Clash: பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தானுக்கு என்ன பிரச்னை? துரந்த் லைனால் வெடிக்கும் போர்? 2,611KM சிக்கல்
PAK AFG Clash: பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தானுக்கு என்ன பிரச்னை? துரந்த் லைனால் வெடிக்கும் போர்? 2,611KM சிக்கல்
PAK AFG Clash: போரை அறிவித்த பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் பதிலடி - குவியும் பிணங்கள், எல்லையில் நடப்பது என்ன?
PAK AFG Clash: போரை அறிவித்த பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் பதிலடி - குவியும் பிணங்கள், எல்லையில் நடப்பது என்ன?
IND Vs WI: ”உன் வாழ்க்கை உன் கையில்” ஜெயிச்சா போதும் - மே.தீவுகளை சமாளிக்குமா இந்தியா? அரையிறுதி வாய்ப்பு
IND Vs WI: ”உன் வாழ்க்கை உன் கையில்” ஜெயிச்சா போதும் - மே.தீவுகளை சமாளிக்குமா இந்தியா? அரையிறுதி வாய்ப்பு
Ind vs Zim: கதம் கதம்... சேப்பாக்கில் ஜிம்பாப்வேயை ஊதி தள்ளிய இந்தியா! வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நாக் அவுட்டுக்கு ரெடி
Ind vs Zim: கதம் கதம்... சேப்பாக்கில் ஜிம்பாப்வேயை ஊதி தள்ளிய இந்தியா! வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நாக் அவுட்டுக்கு ரெடி
Embed widget