மேலும் அறிய

மருத்துவமனைக்கு அழைத்து வந்த ப்ளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை; விடுதி மேலாளர் உள்ளிட்ட 2 பேர் கைது!

விழுப்புரத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கட்டட மேஸ்திரியான மணிகண்டனை கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் பெண் ஒருவருக்கு ப்ளஸ் 2 படிக்கும் மகள் உள்ளார். அந்தப் பெண் கட்டட வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வருகிறார். அந்தப் பெண்ணுடன் புதுச்சேரியை சேர்ந்த கட்டட மேஸ்திரியான மணிகண்டன் என்பவர் உடன் வேலை செய்து வந்துள்ளார். மாணவிக்கு சில தினங்களாக உடல்நலம் சரியில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மகளை கட்டட மேஸ்திரியான மணிகண்டனுடன் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Seeman Speech: மாரிதாஸ் விவகாரம்! சங்கி திமுக! கடுப்பான சீமான்

விழுப்புரத்தில் உள்ள மருத்துவ மனையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் மாணவியும் மணிகண்டனும் சினிமாவுக்கு சென்றுள்ளனர். திரையரங்கில் இருந்து திரும்பி வரும் போது மாணவி மயக்கம் வருவதாக கூறியுள்ளார். அருகில் உள்ள விடுதிக்கு சென்று ஓய்வு எடுத்துவிட்டு பிறகு வீட்டுக்கு செல்லலாம் எனக் கூறி மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.


மருத்துவமனைக்கு அழைத்து வந்த ப்ளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை; விடுதி மேலாளர் உள்ளிட்ட 2 பேர் கைது!

 

Anbil Mahesh: மேயராகிறாரா உதயநிதி? பதிலளித்த அன்பில் மகேஷ்

விழுப்புரம் பேருந்து நிலையத்துக்கு எதிரில் இருந்த விடுதிக்கு மாணவியை அழைத்து சென்று அங்கு அறை எடுத்து தங்கியுள்ளனர். மாணவி மயக்க நிலையில் இருந்த போது சிறுமி என்றும் பாராமல் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு சென்ற மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

அதனை தொடர்ந்து அந்தப் பெண் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கட்டட மேஸ்திரியான மணிகண்டனை கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு விடுதியில் அறை ஒதுக்கித் தந்த மேலாளர் தணிகைவேலுவையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

போக்சோ சட்டம் பற்றிய தகவல் :

சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறையை தடுக்கும் மற்றும் பாதுகாக்கும் விதமாக 2012 நவம்பர் 14 அன்று இந்தியாவில் போக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்தது. மேலும், இந்த பிரத்யேக சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது மற்றும் நோக்கத்துடன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவது போன்ற செயல்களுக்கு நீதிமன்றம் குறைந்தபட்சம் மூன்று வருட தண்டை அல்லது அதிகபட்சம் 5 வருடம் வரை தண்டனை கொடுக்கும்.

மேலும், அபராதமும் விதிக்கப்படலாம். பிரிவு 3ன் படி, சிறார்களை வன்கொடுமை செய்தாலோ, வேரோரு நபரை வைத்து செய்ய தூண்டினாலோ, குழந்தையின் உடலின் எந்தப் பகுதியிலும் ஊடுருவலை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டாலோ அது பாலியல் வன்கொடுமை என்று கருதப்படுகிறது. இந்த குற்றத்திற்காக ஒருவருக்கு குறைந்தபட்சம் 7 வருட சிறை தண்டனையும் அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரையிலும் நீதிமன்றம் கொடுக்கும். ஒரு குழந்தைக்கு கார்டியனாக இருப்பவர் அல்லது குழந்தைக்கு பாதுகாப்பு கொடுக்கக்கூடிய இடத்தில் இருப்பவர்களே அக்குழந்தையை வன்கொடுமை செய்தால் பிரிவு 5ன் படி நீதிமன்றம் தண்டனை கொடுக்கும்.

உதாரணமாக, குழந்தைகள் காப்பகத்தில் நடக்கும் வன்கொடுமை, காவல் நிலையத்தில் சிறார்களுக்கு நடக்கும் வன்கொடுமை, ராணுவத்தினரால் சிறார்களுக்கு ஏற்படும் வன்கொடுமை, கோரமான முறையில் நடக்கும் வன்கொடுமை, காயம் ஏற்படுத்துவது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் வன்கொடுமை செய்வது போன்ற குற்றங்கள் இந்த பிரிவில் அடங்குகிறது. இதனால் குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 10 வருடம், அதிகபட்சம் ஆயுள்தண்டனை வரையிலும் கொடுக்கலாம்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

கதிகலங்கி நிற்கும் குற்றவாளிகள்.. மயிலாடுதுறை மாவட்டத்தில் அடுத்து  அடுத்து பாயும் குண்டாஸ்... 
கதிகலங்கி நிற்கும் குற்றவாளிகள்.. மயிலாடுதுறை மாவட்டத்தில் அடுத்து  அடுத்து பாயும் குண்டாஸ்... 
காசு கொடுத்தாதான் வேலையா? ஸ்ரீபெரும்புதூர் BDO அலுவலகத்தை சல்லடை போட்டு தேடும் DVAC!
காசு கொடுத்தாதான் வேலையா? ஸ்ரீபெரும்புதூர் BDO அலுவலகத்தை சல்லடை போட்டு தேடும் DVAC!
வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட ரவுடி கைது
வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட ரவுடி கைது
திருச்சிற்றம்பலத்தில் பெட்டிக்கடையில் ரூ.1.70 லட்சத்தை ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்கிய இளைஞர்! போலீசில் சிக்கினார்!
திருச்சிற்றம்பலத்தில் பெட்டிக்கடையில் ரூ.1.70 லட்சத்தை ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்கிய இளைஞர்! போலீசில் சிக்கினார்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் பாவம், 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய் கோரிக்கை
மக்கள் பாவம், 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் - CM விஜய் கோரிக்கை
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: என்ன தகுதி? சம்பளம்? விவரங்கள் உள்ளே!
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: என்ன தகுதி? சம்பளம்? விவரங்கள் உள்ளே!
CM Vijay:கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான ரேசில் வேகமெடுக்கும் CM விஜய், அப்ப கூட்டணி?
கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான ரேசில் வேகமெடுக்கும் CM விஜய், அப்ப கூட்டணி?
மாமல்லபுரம் மக்களே அலர்ட்! ரூ.40 ஷேர் ஆட்டோவுக்கு இனி எண்ட் கார்டு? வெளியானது அதிரடி கோரிக்கை!
மாமல்லபுரம் மக்களே அலர்ட்! ரூ.40 ஷேர் ஆட்டோவுக்கு இனி எண்ட் கார்டு? வெளியானது அதிரடி கோரிக்கை!
Indian Railway: சென்னை டூ மும்பை, ஹவுரா, டெல்லி.. 4 வழித்தடமாக மாற்ற ரயில்வே முடிவு - இனி பயணம் ரொம்ப ஈசி
சென்னை டூ மும்பை, ஹவுரா, டெல்லி.. 4 வழித்தடமாக மாற்ற ரயில்வே முடிவு - இனி பயணம் ரொம்ப ஈசி
Nepal Flood: பலி எண்ணிக்கை 392 ஆக அதிகரிப்பு - 288 இந்தியர்கள் உட்பட 1,468 பேர் எங்கே? நேபாளம் வெள்ள அவலம்
பலி எண்ணிக்கை 392 ஆக அதிகரிப்பு - 288 இந்தியர்கள் உட்பட 1,468 பேர் எங்கே? நேபாளம் வெள்ள அவலம்
Vanni Arasu: சாதிய அடக்குமுறை பற்றி பேசத் தொடங்கிய வன்னியரசு..! கும்பலாக கூச்சலிட்ட திமுக, அதிமுக எம்எல்ஏ-க்கள்! வீடியோவை பாருங்க
Vanni Arasu: சாதிய அடக்குமுறை பற்றி பேசத் தொடங்கிய வன்னியரசு..! கும்பலாக கூச்சலிட்ட திமுக, அதிமுக எம்எல்ஏ-க்கள்! வீடியோவை பாருங்க
China Warning to Nepal: இன்னும் முடியவில்லை.! 3 நாட்களில் நேபாளத்திற்கு பேரழிவு காத்திருக்கிறது.! பீதியை கிளப்பும் சீனா
இன்னும் முடியவில்லை.! 3 நாட்களில் நேபாளத்திற்கு பேரழிவு காத்திருக்கிறது.! பீதியை கிளப்பும் சீனா
Embed widget