மேலும் அறிய

இலங்கை அகதிகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க முயன்ற 3 பேர் கைது

நியூசிலாந்து நாட்டிற்கு எப்படி செல்ல முன்வந்தனர் என்பது குறித்த பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

வேளாங்கண்ணியில் இருந்து படகுகள் மூலம் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயன்ற இலங்கை அகதிகளை ஒருங்கிணைத்த 3 பேரை நாகை க்யூ பிரிவு போலீசார்  கைது செய்தனர். 

வேளாங்கண்ணியில் இருந்து படகுகள் மூலம் வெளிநாட்டிற்கு (ஆஸ்திரேலியா)  இலங்கை அகதிகள் செல்ல இருப்பதாக நாகை மாவட்ட க்யூ பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. இதையடுத்து டிஎஸ்பி சிவசங்கரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரபூபதி ஆகியோர் கொண்ட போலீசார் வேளாங்கண்ணியில் உள்ள விடுதிகளில் சோதனை நடத்தினர். இதில் வேளாங்கண்ணி மாதா கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான அசிசி பிளாக்  விடுதியில் தங்கிருந்த தூத்துக்குடி மாவட்டம் குளத்துவாய்ப்பட்டி முகாமை சேர்ந்த கேனுஜன்(34), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவர் பள்ளி முகாமை சேர்ந்த ஜெனிபர்ராஜ்(23), தினேஷ்(18), புவனேஸ்வரி(40), செய்யாறு  கீழ்ப்புதுப்பாக்கம் வேல்முருகன் தெருவை சேர்ந்த துஷ்யந்தன்(36), வேளாங்கண்ணி எமிரேட்ஸ் விடுதியில் தங்கி இருந்த வேலூர் வாலாஜாபேட்டை குடிமல்லூர் அகதிகள் முகாமை சேர்ந்த சதீஸ்வரன் (32) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் பறிமுதல் செய்தனர்.


இலங்கை அகதிகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க முயன்ற 3 பேர் கைது

வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தொடர்ந்து நடத்திய விசாரணையில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் பகுதியை செல்வம் என்பவருக்கு சொந்தமான பதிவு செய்யப்படாத விசைப்படகில் தப்பி செல்ல திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தனிப்படை சென்றுள்ளது. இந்நிலையில் விடிய, விடிய க்யூ பிரிவு போலீசார் பல்வேறு முகாம்களில் தங்கியிருந்தவர்களை ஒருங்கிணைப்பு செய்தது யார்? இவர்களுக்கு பணம் கொடுப்பது யார்? நியூசிலாந்து நாட்டிற்கு எப்படி செல்ல முன்வந்தனர் என்பது குறித்த பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இதில் சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அகதிகள் முகாமை சேர்ந்த வரதராஜன்(38), விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துபட்டு முகாமை சேர்ந்த ரவிச்சந்திரன்(41), திருவண்ணாமலை செய்யாறு முகாமை சேர்ந்த அன்பரசன் (29) ஆகிய மூன்று பேரும் பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளவர்களை தங்களது நண்பர்கள் மூலம் தொடர்பு கொண்டு வெளிநாட்டிற்கு (நியூசிலாந்து)  சென்றால் நிறைய சம்பாதிக்கலாம். அது போல் நிறைய பேரை கள்ளத்தோணி மூலமாக அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்தது தெரியவந்தது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!
15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது
15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget