மேலும் அறிய

ஓலாவில் வேலை.. ஆசை காட்டி நூதன மோடி! 22 லட்சம் அபேஸ்.. மோசடி கும்பல் சிக்கியது எப்படி

56 பேரிடம் இருந்து மொத்தம் 22 லட்சம் ரூபாய் பறிக்கப்ட்ட நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய இரு வாலிபர்களை பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து நேரடியாக எஸ்.பி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில், OLA கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக கூறி, போலியான பணி ஆணையை வழங்கி, பலரை ஏமாற்றி மோசடி செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 56 பேரிடம் இருந்து மொத்தம் 22 லட்சம் ரூபாய் பறிக்கப்ட்ட நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய இரு வாலிபர்களை பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து நேரடியாக எஸ்.பி அலுவலகத்தில் ஒப்படைத்த சம்பவம் தற்போது மாவட்டத்தில் தீவிர பேசுபொருளாக உள்ளது.

நூதன மோசடி

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகன் மனோ (29) மற்றும் கிருஷ்ணகிரி காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் சதீஷ் (40) ஆகிய இருவரும் இணைந்து, இந்த மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது இவர்கள் இருவரும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு இடங்களுக்கு சென்று, OLA கம்பெனியில் அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கித் தருவதாக பல்வேறு வாக்குறுதிகள் வழங்கினர்.

போலியான பணி ஆணை வழங்கி மோசடி:

,இருவரின் ஆசை வார்த்தையை நம்பி 56 நபர்கள் பணம் செலுத்தி இருக்கின்றனர். பணம் பெற்ற பின்பு, இவர்கள் ஒவ்வொருவருக்கும் போலியாக OLA கம்பெனியின் பெயரில் பணி ஆணைகளை தயாரித்து வழங்கினர். அதை வைத்துக்கொண்டு நம்பிக்கையுடன் அந்த 56 நபர்களும் OLA நிறுவனத்திற்கு நேரில் சென்றனர்.

காத்திருந்த அதிர்ச்சி:

அங்கு சென்றவர்கள், கம்பெனி நிர்வாகத்திடம் வேலை பற்றிக் கேட்டபோது, "இந்த பணி ஆணைகளை எங்கள் நிறுவனம் வழங்கவில்லை, இது போலியானது" என்று கூறியதால், அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் தனக்கு பணி வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்ற இருவரை தொடர்புகொண்டு பேசினர்.

நைசாக பேசி பிடித்து ஒப்படைப்பு

பணத்தை இழந்தவர்கள்  நைசமாக பேசி மனோவும் சதீஷையும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வரவழைத்தனர். பின்னர் இருவரையும் பிடித்து, நேரடியாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, அவர்கள் மீது விரிவாக புகார் மனு அளித்தனர்.

காவல் துறை நடவடிக்கை

இந்த தகவல் கிடைத்த உடனே, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில், திருப்பத்தூர் கந்திலி போலீசார் இந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

சிறையில் அடைப்பு

விசாரணையின் போது, இந்த இருவரும் போலியான பணி ஆணை தயாரித்து, மொத்தம் 22 லட்சம் ரூபாயை ஏமாற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டதால், அவர்களை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம், இருவரையும் காவலில் அடைக்க உத்தரவிட்டது. தற்போது இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் பரபரப்பு நிலை:

56 பேரிடம் OLA கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக கூறி போலியான ஆணை வழங்கி 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த இந்த சம்பவம், திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வேலை தேடி தவிக்கும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

மக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை

இந்த சம்பவத்தையடுத்து, போலி பணி ஆணை வழங்கி ஏமாற்றும் கும்பல்களிடம் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அத்தகைய சந்தேக நபர்களை உடனடியாக காவல்துறையிடம் புகாரளிக்க வேண்டும் என்றும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
நடத்தையில் சந்தேகம் ; பாத்ரூமில் கணவனை தள்ளி விட்டு கத்தியால் குத்தி தீர்த்துக் கட்டிய மனைவி
நடத்தையில் சந்தேகம் ; பாத்ரூமில் கணவனை தள்ளி விட்டு கத்தியால் குத்தி தீர்த்துக் கட்டிய மனைவி
பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி - வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்
பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி - வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்
யார் இந்த 'கோல்டு கோகிலா'? மறைமலைநகரையே உலுக்கிய போதை சாம்ராஜ்யம்... போலீசாரின் ஸ்கெட்ச்!
யார் இந்த 'கோல்டு கோகிலா'? மறைமலைநகரையே உலுக்கிய போதை சாம்ராஜ்யம்... போலீசாரின் ஸ்கெட்ச்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
Embed widget