மேலும் அறிய

ஓலாவில் வேலை.. ஆசை காட்டி நூதன மோடி! 22 லட்சம் அபேஸ்.. மோசடி கும்பல் சிக்கியது எப்படி

56 பேரிடம் இருந்து மொத்தம் 22 லட்சம் ரூபாய் பறிக்கப்ட்ட நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய இரு வாலிபர்களை பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து நேரடியாக எஸ்.பி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில், OLA கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக கூறி, போலியான பணி ஆணையை வழங்கி, பலரை ஏமாற்றி மோசடி செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 56 பேரிடம் இருந்து மொத்தம் 22 லட்சம் ரூபாய் பறிக்கப்ட்ட நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய இரு வாலிபர்களை பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து நேரடியாக எஸ்.பி அலுவலகத்தில் ஒப்படைத்த சம்பவம் தற்போது மாவட்டத்தில் தீவிர பேசுபொருளாக உள்ளது.

நூதன மோசடி

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகன் மனோ (29) மற்றும் கிருஷ்ணகிரி காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் சதீஷ் (40) ஆகிய இருவரும் இணைந்து, இந்த மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது இவர்கள் இருவரும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு இடங்களுக்கு சென்று, OLA கம்பெனியில் அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கித் தருவதாக பல்வேறு வாக்குறுதிகள் வழங்கினர்.

போலியான பணி ஆணை வழங்கி மோசடி:

,இருவரின் ஆசை வார்த்தையை நம்பி 56 நபர்கள் பணம் செலுத்தி இருக்கின்றனர். பணம் பெற்ற பின்பு, இவர்கள் ஒவ்வொருவருக்கும் போலியாக OLA கம்பெனியின் பெயரில் பணி ஆணைகளை தயாரித்து வழங்கினர். அதை வைத்துக்கொண்டு நம்பிக்கையுடன் அந்த 56 நபர்களும் OLA நிறுவனத்திற்கு நேரில் சென்றனர்.

காத்திருந்த அதிர்ச்சி:

அங்கு சென்றவர்கள், கம்பெனி நிர்வாகத்திடம் வேலை பற்றிக் கேட்டபோது, "இந்த பணி ஆணைகளை எங்கள் நிறுவனம் வழங்கவில்லை, இது போலியானது" என்று கூறியதால், அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் தனக்கு பணி வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்ற இருவரை தொடர்புகொண்டு பேசினர்.

நைசாக பேசி பிடித்து ஒப்படைப்பு

பணத்தை இழந்தவர்கள்  நைசமாக பேசி மனோவும் சதீஷையும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வரவழைத்தனர். பின்னர் இருவரையும் பிடித்து, நேரடியாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, அவர்கள் மீது விரிவாக புகார் மனு அளித்தனர்.

காவல் துறை நடவடிக்கை

இந்த தகவல் கிடைத்த உடனே, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில், திருப்பத்தூர் கந்திலி போலீசார் இந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

சிறையில் அடைப்பு

விசாரணையின் போது, இந்த இருவரும் போலியான பணி ஆணை தயாரித்து, மொத்தம் 22 லட்சம் ரூபாயை ஏமாற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டதால், அவர்களை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம், இருவரையும் காவலில் அடைக்க உத்தரவிட்டது. தற்போது இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் பரபரப்பு நிலை:

56 பேரிடம் OLA கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக கூறி போலியான ஆணை வழங்கி 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த இந்த சம்பவம், திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வேலை தேடி தவிக்கும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

மக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை

இந்த சம்பவத்தையடுத்து, போலி பணி ஆணை வழங்கி ஏமாற்றும் கும்பல்களிடம் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அத்தகைய சந்தேக நபர்களை உடனடியாக காவல்துறையிடம் புகாரளிக்க வேண்டும் என்றும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
காதலித்து கர்ப்பம்
காதலித்து கர்ப்பம் " குழந்தையை தூக்கி போட்டு வா " குழந்தைக்கு நேர்ந்த சோகம்
மனிதர்களை கொல்வது இலக்கல்ல.. .பொருட்சேதமே டார்க்கெட் - சிக்கிய குண்டு மிரட்டல் கடிதம்....
மனிதர்களை கொல்வது இலக்கல்ல.. .பொருட்சேதமே டார்க்கெட் - சிக்கிய குண்டு மிரட்டல் கடிதம்....
வீடு புகுந்த திருடன் தப்பி ஓட்டம்... பேரூரில் நள்ளிரவு பரபரப்பு...
வீடு புகுந்த திருடன் தப்பி ஓட்டம்... பேரூரில் நள்ளிரவு பரபரப்பு...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்
விஜய்க்கு காவல்துறை செக்வீட்டில் இருந்தே பரப்புரை?கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Net Worth: உதயநிதியின் சொத்து மதிப்பு: எவ்வளவு கோடி, எத்தனை கார்கள் தெரியுமா? - முழு சொத்து விவரம் இதோ
உதயநிதியின் சொத்து மதிப்பு: எவ்வளவு கோடி, எத்தனை கார்கள் தெரியுமா? - முழு சொத்து விவரம் இதோ
CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
Ponmudi Case Verdict : பொன்முடி, கெளதமசிகாமணி விடுதலை! செம்மண் வழக்கு: எதிர்பாராத திருப்பம், கண்ணீருடன் வெளியேறிய மகன்!
Ponmudi Case Verdict : பொன்முடி, கெளதமசிகாமணி விடுதலை! செம்மண் வழக்கு: எதிர்பாராத திருப்பம், கண்ணீருடன் வெளியேறிய மகன்!
Thilagabama: தராசுடன் வந்து திலகபாமா வேட்புமனுத் தாக்கல்! பெரம்பூர் தொகுதியில் களைகட்டும் தேர்தல் களம்!
Thilagabama: தராசுடன் வந்து திலகபாமா வேட்புமனுத் தாக்கல்! பெரம்பூர் தொகுதியில் களைகட்டும் தேர்தல் களம்!
சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுங்க- தண்டனை அறிவிப்பு எப்போது?
சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுங்க- தண்டனை அறிவிப்பு எப்போது?
TVK Vijay: விஜய் Vs ஸ்டாலின், விஜய் Vs உதயநிதி; வேட்புமனுத் தாக்கலில் தவெக தலைவரின் தரமான சம்பவம்!
TVK Vijay: விஜய் Vs ஸ்டாலின், விஜய் Vs உதயநிதி; வேட்புமனுத் தாக்கலில் தவெக தலைவரின் தரமான சம்பவம்!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
CM Stalin: இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு; காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது? முதல்வர் ஸ்டாலின் பேச்சு
CM Stalin: இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு; காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது? முதல்வர் ஸ்டாலின் பேச்சு
Embed widget