மேலும் அறிய

ஓலாவில் வேலை.. ஆசை காட்டி நூதன மோடி! 22 லட்சம் அபேஸ்.. மோசடி கும்பல் சிக்கியது எப்படி

56 பேரிடம் இருந்து மொத்தம் 22 லட்சம் ரூபாய் பறிக்கப்ட்ட நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய இரு வாலிபர்களை பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து நேரடியாக எஸ்.பி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில், OLA கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக கூறி, போலியான பணி ஆணையை வழங்கி, பலரை ஏமாற்றி மோசடி செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 56 பேரிடம் இருந்து மொத்தம் 22 லட்சம் ரூபாய் பறிக்கப்ட்ட நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய இரு வாலிபர்களை பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து நேரடியாக எஸ்.பி அலுவலகத்தில் ஒப்படைத்த சம்பவம் தற்போது மாவட்டத்தில் தீவிர பேசுபொருளாக உள்ளது.

நூதன மோசடி

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகன் மனோ (29) மற்றும் கிருஷ்ணகிரி காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் சதீஷ் (40) ஆகிய இருவரும் இணைந்து, இந்த மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது இவர்கள் இருவரும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு இடங்களுக்கு சென்று, OLA கம்பெனியில் அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கித் தருவதாக பல்வேறு வாக்குறுதிகள் வழங்கினர்.

போலியான பணி ஆணை வழங்கி மோசடி:

,இருவரின் ஆசை வார்த்தையை நம்பி 56 நபர்கள் பணம் செலுத்தி இருக்கின்றனர். பணம் பெற்ற பின்பு, இவர்கள் ஒவ்வொருவருக்கும் போலியாக OLA கம்பெனியின் பெயரில் பணி ஆணைகளை தயாரித்து வழங்கினர். அதை வைத்துக்கொண்டு நம்பிக்கையுடன் அந்த 56 நபர்களும் OLA நிறுவனத்திற்கு நேரில் சென்றனர்.

காத்திருந்த அதிர்ச்சி:

அங்கு சென்றவர்கள், கம்பெனி நிர்வாகத்திடம் வேலை பற்றிக் கேட்டபோது, "இந்த பணி ஆணைகளை எங்கள் நிறுவனம் வழங்கவில்லை, இது போலியானது" என்று கூறியதால், அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் தனக்கு பணி வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்ற இருவரை தொடர்புகொண்டு பேசினர்.

நைசாக பேசி பிடித்து ஒப்படைப்பு

பணத்தை இழந்தவர்கள்  நைசமாக பேசி மனோவும் சதீஷையும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வரவழைத்தனர். பின்னர் இருவரையும் பிடித்து, நேரடியாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, அவர்கள் மீது விரிவாக புகார் மனு அளித்தனர்.

காவல் துறை நடவடிக்கை

இந்த தகவல் கிடைத்த உடனே, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில், திருப்பத்தூர் கந்திலி போலீசார் இந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

சிறையில் அடைப்பு

விசாரணையின் போது, இந்த இருவரும் போலியான பணி ஆணை தயாரித்து, மொத்தம் 22 லட்சம் ரூபாயை ஏமாற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டதால், அவர்களை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம், இருவரையும் காவலில் அடைக்க உத்தரவிட்டது. தற்போது இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் பரபரப்பு நிலை:

56 பேரிடம் OLA கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக கூறி போலியான ஆணை வழங்கி 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த இந்த சம்பவம், திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வேலை தேடி தவிக்கும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

மக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை

இந்த சம்பவத்தையடுத்து, போலி பணி ஆணை வழங்கி ஏமாற்றும் கும்பல்களிடம் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அத்தகைய சந்தேக நபர்களை உடனடியாக காவல்துறையிடம் புகாரளிக்க வேண்டும் என்றும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget