மேலும் அறிய

ஆபத்தில் முடிந்த அதிவேகம்; காஞ்சிபுரத்தில் 2 சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி..!

எதிர்பாராத விதமாக வேகமாக வந்த  இரண்டு இருசக்கர வாகனங்களும் ஓரிக்கை மேம்பாலத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை  பாலாற்று மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில், இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். கார், லாரி எலக்ட்ரீசியன் ஆக உள்ள ஆனந்தன், தனது உதவியாளரான தேனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் உடன் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் களக்காட்டூரில் இருந்து ஓரிக்கை பாலாற்றும் மேம்பாலத்தில் அதிவேகமாக வந்து கொண்டிருந்துள்ளார். காஞ்சிபுரத்தில் பணி முடித்துக் கொண்டு களக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த யோக மூர்த்தி என்பவர், பாலாற்று மேம்பாலத்தில் எதிர் திசையில் வேகமாக வந்துள்ளார்.

நேர் மோதி விபத்துக்குள்ளானது
 
எதிர்பாராத விதமாக வேகமாக வந்த  இரண்டு இருசக்கர வாகனங்களும் ஓரிக்கை மேம்பாலத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. விபத்தில் ஆனந்தன் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே  துடிதுடித்து பரிதாபமாக  உயிரிழந்தார். அவருடன் வந்த சதீஷ்குமாரும் மற்றொரு இருசக்க வாகனத்தில் வந்த யோக மூர்த்தியும் படுகாயங்களுடன் துடிதுடித்துக் கொண்டிருந்த நிலையில் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
 
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை - Kanchipuram Government Hospital
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை - Kanchipuram Government Hospital
 
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை
 
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி யோகமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார், சதீஷ்குமார் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விபத்தில் உயிரிழந்த ஆனந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
மேலும் இரண்டு இருசக்கர வாகனங்களையும் மேம்பாலத்தில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவர் ஓட்டிய இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி

சென்னை அடுத்த மதுரவாயல், எம்எம்டிஏ காலனி பகுதியை சேர்ந்தவர் பஷீர் பேகம் (60). இவர் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் பஷீர் பேகம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே பஷீர் பேகம் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த கோயம்பேடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான லோகேஷ் (19) என்பவரது காலிலும் முறிவு ஏற்பட்டது. அவரு க்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: 50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: 50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Kalki 2898 AD‌‌ Review: அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
TANUVAS: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி!
TANUVAS: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி!
L.K.Advani: திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
Embed widget