மேலும் அறிய

தற்கொலை முயற்சியில் 2 குழந்தைகள் பலி: தவறி விழுந்ததாக கூறும் தந்தை; குழம்பும் போலீஸ்!

குடும்பத் தகராறில் குழந்தைகளுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்த நிலையில், குழந்தைகள் கிணற்றில் தவறி விழுந்ததாக கணவர் கூறுவதால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி அருள்ராஜ் (33) இவருக்கும் கொங்கரம்பட்டு கிராமத்தை சேர்ந்த புஷ்பலதா( 28) என்பவருக்கும்  கடந்த 4ஆண்டுக்கு முன்பு திருமணமாகி சர்வேஸ்(2) சஞ்சனா(1) என இரு குழந்தைகள் உள்ளனர். 

மேலும் நேற்று இரவு அருள்ராஜ் மற்றும் புஷ்பலதா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த புஷ்பலதா தன்னுடைய 2 குழந்தைகளுடன் , இன்று காலையில் தன்னுடைய சொந்த நிலத்தில் உள்ள  கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 


தற்கொலை முயற்சியில் 2 குழந்தைகள் பலி: தவறி விழுந்ததாக கூறும் தந்தை; குழம்பும் போலீஸ்!

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து உயிருக்கு போராடிய புஷ்பலதாவை காப்பாற்றியுள்ளனர். ஆனால் 2 குழந்தைகள் காப்பாற்ற முடியாததால், நீரில் மூழ்கி  பரிதாபமாக சம்பவ இடத்திலேயே குழந்தைகள் பலியாகினர்.  2 குழந்தைகளின் சடலத்தை சுமார் 2மணி நேரம் போராடி, அப்பகுதி மக்கள் மீட்டனர். 

அதன் பின்னர் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த வந்த ஆம்பூலன்ஸ் வாகனத்தில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த புஷ்பலதாவை வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையெடுத்து கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 குழந்தைகளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதாகவும், அதில் 2 குழந்தைகள் இறந்து விட்டதாகவும் கிராம பொதுமக்கள் போலீஸ் விசாரணையில் தெரிவித்தனர். ஆனால், கணவரோ... எங்களுடைய சொந்த நிலத்தில் உள்ள தரை கிணற்றில் மனைவி விவசாயம் செய்து கொண்டிருந்ததாகவும் அப்போது குழந்தைகள் தவறி கிணற்றில் விழுந்ததாகவும், குழந்தைகளை காப்பாற்ற தன் மனைவி கிணற்றில் குதித்ததாகவும் தெரிவித்தார். 

கணவரின் வாக்குமூலமும், பொதுமக்களின் வாக்குமூலமும் வேறு விதமாக இருப்பதால், என்ன மாதிரியான வழக்கு பதிவு செய்வது என்கிற குழப்பத்தில் போலீசார் விழித்து வருகின்றனர். சிகிச்சையில் இருக்கும் தாய் விழித்தால் மட்டுமே குழந்தைகள் இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியும் என்பதால், அதை வரை இந்த வழக்கை சந்தேகத்திற்கு உரிய மரணம் என்கிற வகையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். 

 


தற்கொலை முயற்சியில் 2 குழந்தைகள் பலி: தவறி விழுந்ததாக கூறும் தந்தை; குழம்பும் போலீஸ்!

 

இதனிடையே புஷ்பலதாவிடம் நடத்திய விசாரணையில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இவ்வழக்கை கொலை வழக்காக மாற்ற போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப தகராறில் அப்பாவி பிஞ்சு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, உண்மையில் புஷ்பலதா தற்கொலைக்கு முயன்றாரா... அல்லது கணவரே கொலை செய்ய முயற்சித்து ஏதாவது திட்டம் திட்டீனாரா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ship Building Yard Project : “கிடப்பில் கிடக்கும் கப்பல் கட்டும் திட்டம்” கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு..?
Ship Building Yard Project : “கிடப்பில் கிடக்கும் கப்பல் கட்டும் திட்டம்” கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு..?
Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! என்ன நடக்கிறது சென்னையில்?
Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! என்ன நடக்கிறது சென்னையில்?
திருச்சியில்  680 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - உணவு வழங்கல் அதிகாரிகள் நடவடிக்கை
திருச்சியில் 680 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - உணவு வழங்கல் அதிகாரிகள் நடவடிக்கை
Manish Kashyap: பாஜகவில் இணைந்த சர்ச்சை யூடியூபர்.. தமிழ்நாட்டுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டாரா?
தமிழ்நாட்டுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம்.. சர்ச்சை யூடியூபர்.. பாஜகவில் இணைந்ததால் அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vadakan Teaser  : ”பூரா வடக்கனுகளையும் துரத்தனும்”பற்ற வைத்த பாஸ்கர் சக்தி VADAKKAN டீசர் சர்ச்சைIPL 2024 | ”CSK ஜெயிக்கும்..தோல்வியிலிருந்து மீளும்” இந்திய அணி நிரஞ்சனா நம்பிக்கைRathnam movie Hari | காலில் விழாத குறைதான் Please.. ரத்னம் பார்க்க வாங்க சிங்கம் ஹரிக்கு என்ன ஆச்சுRahul Gandhi Slams Modi | ”பயத்தில் நடுங்கும் மோடிக லங்கும் பாஜக” ராகுல் அதிரடி பதிலடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ship Building Yard Project : “கிடப்பில் கிடக்கும் கப்பல் கட்டும் திட்டம்” கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு..?
Ship Building Yard Project : “கிடப்பில் கிடக்கும் கப்பல் கட்டும் திட்டம்” கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு..?
Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! என்ன நடக்கிறது சென்னையில்?
Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! என்ன நடக்கிறது சென்னையில்?
திருச்சியில்  680 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - உணவு வழங்கல் அதிகாரிகள் நடவடிக்கை
திருச்சியில் 680 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - உணவு வழங்கல் அதிகாரிகள் நடவடிக்கை
Manish Kashyap: பாஜகவில் இணைந்த சர்ச்சை யூடியூபர்.. தமிழ்நாட்டுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டாரா?
தமிழ்நாட்டுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம்.. சர்ச்சை யூடியூபர்.. பாஜகவில் இணைந்ததால் அதிர்ச்சி
ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நடத்துனர்; திருச்சியில் அதிர்ச்சி
ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நடத்துனர்; திருச்சியில் அதிர்ச்சி
Breaking Tamil LIVE: பாட்னா தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு
Breaking Tamil LIVE: பாட்னா தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு
Election Commission: வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
Amaran: மேஜர் முகுந்த் வரதராஜனின் 10ஆம் ஆண்டு நினைவு தினம்: சிவகார்த்திகேயனின் அமரன் பட இயக்குநர் அஞ்சலி!
Amaran: மேஜர் முகுந்த் வரதராஜனின் 10ஆம் ஆண்டு நினைவு தினம்: சிவகார்த்திகேயனின் அமரன் பட இயக்குநர் அஞ்சலி!
Embed widget