மேலும் அறிய

Tiruvannamalai ATM Theft: திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை; தீரன் பட பாணியில் கொள்ளைக் குழு தலைவன் கைது

திருவண்ணாமலையில் ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் தலைவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஏ.டி.எம். கொள்ளை

மேற்கண்ட இடங்களில் இருந்த 4 ஏ.டி.எம். மையங்களில் ரூபாய் 72 லட்சத்து 79 ஆயிரத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. 4 மாவட்ட எஸ்.பி.க்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

மேலும், இவர்கள் அனைவரையும் பிடிக்க 9 தனிப்படைகளை போலீசார் அமைத்தனர். வேலூர் சரக காவல் துணைத்தலைவர் முத்துச்சாமி தலைமையில் அமைக்கப்பட்ட இந்த தனிப்படைகள் சம்பவ இடங்களில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகள், முக்கிய வழித்தடங்களில் சென்ற வாகனங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தனிப்படைகள் அமைப்பு:

போலீசாரின் விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் பகுதியில் தங்கியிருந்து கொள்ளையடிக்க திட்டமிட்ட இடங்களை நோட்டமிட்டதும் தெரியவந்தது.

உயரதிகாரிகளின் உத்தரவின்பேரில் திருவள்ளூர் எஸ்.பி. செபாஸ்கல்யாண் தலைமையிலான போலீசார் ஆந்திராவிற்கும், வேலூர் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் தலைமையிலான தனிப்படை குஜராத்திற்கும், திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை ஹரியானாவிற்கும், திருப்பத்தூர் எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கர்நாடகாவிற்கும் விரைந்தனர்.

கொள்ளை கும்பல் தலைவன் கைது:

முதற்கட்டமாக இந்த கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளை ஹரியானாவில் போலீசார் கைது செய்தனர். கொள்ளை கும்பல் தலைவனான முகமது ஆரிப், வயது 35, மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அவனது கூட்டாளியான முகமது ஆசாத், வயது 37, ஆகிய இருவரையம் ஹரியானாவில் வைத்து தமிழக போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து ஏ.டி.எம். மையங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூபாய் 3 லட்சம் பணத்தையும், கொள்ளைக்காக இவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களில் கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பல் தலைவனான முகமது ஆரீப் ஹரியானாவில் உள்ள நூ மாவட்டத்தில் உள்ள சோனாரி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், மற்றொரு குற்றவாளியான ஆசாத் ஹரியானாவின் புன்ஹானா மாவட்டத்தில் உள்ள மைமாகேரா கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

கொள்ளை சம்பவத்தில் இவர்களுக்கு உடந்தையாக இருந்த மற்ற குற்றவாளிகளை பிடிக்கும் பணியையும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட இந்த குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்து டெல்லியில் இருந்து திருவண்ணாமலைக்கு அழைத்து வருகின்றனர்.

தமிழ்நாடு போலீசாருக்கு பெரும் தலைவலியை தந்த இந்த ஏடிஎம் மைய கொள்ளை கும்பல் தலைவனை கைது செய்திருப்பதால் மற்ற குற்றவாளிகளும் விரைவில் பிடிபடுவார்கள் என்று மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Teachers Protest: கொட்டும் மழையில் குவிந்த ஆசிரியர்கள்: 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!
Teachers Protest: கொட்டும் மழையில் குவிந்த ஆசிரியர்கள்: 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Teachers Protest: கொட்டும் மழையில் குவிந்த ஆசிரியர்கள்: 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!
Teachers Protest: கொட்டும் மழையில் குவிந்த ஆசிரியர்கள்: 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Premium Bikes Launch 2026: Royal Enfield Bullet 650 Twin முதல் KTM RC 160 வரை; 2026-ல் வரிசை கட்டும் 5 ப்ரீமியம் பைக்குகள்; விலை என்ன.?
Royal Enfield Bullet 650 Twin முதல் KTM RC 160 வரை; 2026-ல் வரிசை கட்டும் 5 ப்ரீமியம் பைக்குகள்; விலை என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜனவரி 3-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ விவரம்
சென்னை மக்களே.! ஜனவரி 3-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ விவரம்
TVS iQube ST vs Ather Rizta Z; ரேஞ்ச், அம்சங்களில் எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? வாங்க பார்க்கலாம்
TVS iQube ST vs Ather Rizta Z; ரேஞ்ச், அம்சங்களில் எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? வாங்க பார்க்கலாம்
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
Embed widget