மேலும் அறிய

Tiruvannamalai ATM Theft: திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை; தீரன் பட பாணியில் கொள்ளைக் குழு தலைவன் கைது

திருவண்ணாமலையில் ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் தலைவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஏ.டி.எம். கொள்ளை

மேற்கண்ட இடங்களில் இருந்த 4 ஏ.டி.எம். மையங்களில் ரூபாய் 72 லட்சத்து 79 ஆயிரத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. 4 மாவட்ட எஸ்.பி.க்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

மேலும், இவர்கள் அனைவரையும் பிடிக்க 9 தனிப்படைகளை போலீசார் அமைத்தனர். வேலூர் சரக காவல் துணைத்தலைவர் முத்துச்சாமி தலைமையில் அமைக்கப்பட்ட இந்த தனிப்படைகள் சம்பவ இடங்களில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகள், முக்கிய வழித்தடங்களில் சென்ற வாகனங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தனிப்படைகள் அமைப்பு:

போலீசாரின் விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் பகுதியில் தங்கியிருந்து கொள்ளையடிக்க திட்டமிட்ட இடங்களை நோட்டமிட்டதும் தெரியவந்தது.

உயரதிகாரிகளின் உத்தரவின்பேரில் திருவள்ளூர் எஸ்.பி. செபாஸ்கல்யாண் தலைமையிலான போலீசார் ஆந்திராவிற்கும், வேலூர் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் தலைமையிலான தனிப்படை குஜராத்திற்கும், திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை ஹரியானாவிற்கும், திருப்பத்தூர் எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கர்நாடகாவிற்கும் விரைந்தனர்.

கொள்ளை கும்பல் தலைவன் கைது:

முதற்கட்டமாக இந்த கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளை ஹரியானாவில் போலீசார் கைது செய்தனர். கொள்ளை கும்பல் தலைவனான முகமது ஆரிப், வயது 35, மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அவனது கூட்டாளியான முகமது ஆசாத், வயது 37, ஆகிய இருவரையம் ஹரியானாவில் வைத்து தமிழக போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து ஏ.டி.எம். மையங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூபாய் 3 லட்சம் பணத்தையும், கொள்ளைக்காக இவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களில் கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பல் தலைவனான முகமது ஆரீப் ஹரியானாவில் உள்ள நூ மாவட்டத்தில் உள்ள சோனாரி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், மற்றொரு குற்றவாளியான ஆசாத் ஹரியானாவின் புன்ஹானா மாவட்டத்தில் உள்ள மைமாகேரா கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

கொள்ளை சம்பவத்தில் இவர்களுக்கு உடந்தையாக இருந்த மற்ற குற்றவாளிகளை பிடிக்கும் பணியையும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட இந்த குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்து டெல்லியில் இருந்து திருவண்ணாமலைக்கு அழைத்து வருகின்றனர்.

தமிழ்நாடு போலீசாருக்கு பெரும் தலைவலியை தந்த இந்த ஏடிஎம் மைய கொள்ளை கும்பல் தலைவனை கைது செய்திருப்பதால் மற்ற குற்றவாளிகளும் விரைவில் பிடிபடுவார்கள் என்று மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க அரசு தரப்பு வலியுறுத்தல் - நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க அரசு தரப்பு வலியுறுத்தல் - நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது!
சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது!
" எவன் கூட வாழப் போற " வேலை முடிந்து வந்த மனைவியுடன் தகராறு !! நடந்தது என்ன ?
ஆசிரியரின் பாலியல் சீண்டலால் நேர்ந்த விபரீதம்! 16 வயது மாணவி தீக்குளித்து தற்கொலை - சிக்கிய காம கொடூரன்..
ஆசிரியரின் பாலியல் சீண்டலால் நேர்ந்த விபரீதம்! 16 வயது மாணவி தீக்குளித்து தற்கொலை - சிக்கிய காம கொடூரன்..
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Swearing-In: விஜய் பதவியேற்பதில் ஏன் இவ்வளவு தாமதம்? அடுத்தடுத்து சிக்கல்
Vijay Swearing-In: விஜய் பதவியேற்பதில் ஏன் இவ்வளவு தாமதம்? அடுத்தடுத்து சிக்கல்
தவெக ஆட்சியமைக்க அதிமுக ஆதரவு கொடுக்காது - கே.பி.முனுசாமி அதிரடி அறிவிப்பு
தவெக ஆட்சியமைக்க அதிமுக ஆதரவு கொடுக்காது - கே.பி.முனுசாமி அதிரடி அறிவிப்பு
PM Shri Scheme: அதுக்குள்ளயா? பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கடிதம்
PM Shri Scheme: அதுக்குள்ளயா? பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கடிதம்
Kanimozhi: முதலமைச்சராகும் விஜய்க்கு திமுக எம்பி கனிமொழி வாழ்த்து - என்ன சொன்னார் தெரியுமா?
முதலமைச்சராகும் விஜய்க்கு திமுக எம்பி கனிமொழி வாழ்த்து - என்ன சொன்னார் தெரியுமா?
TVK Promises: முதல்வராகும் விஜய்; தவெக தேர்தல் அறிக்கையில் என்னென்ன தள்ளுபடி, இலவசம், உதவித்தொகை, மானியங்கள்?
TVK Promises: முதல்வராகும் விஜய்; தவெக தேர்தல் அறிக்கையில் என்னென்ன தள்ளுபடி, இலவசம், உதவித்தொகை, மானியங்கள்?
Kerala CM Race: கேரளாவின் புதிய முதலமைச்சர் யார்? காங்கிரஸில் அதிகாரத்துக்கு மல்லுகட்டு!
Kerala CM Race: கேரளாவின் புதிய முதலமைச்சர் யார்? காங்கிரஸில் அதிகாரத்துக்கு மல்லுகட்டு!
Vijay Swearing In: ’’உங்க விஜய்.. நா வந்துட்டேன்..’’ மே 7 காலை 11.30-க்கு முதல்வராகும் தவெக தலைவர்!
Vijay Swearing In: ’’உங்க விஜய்.. நா வந்துட்டேன்..’’ மே 7 காலை 11.30-க்கு முதல்வராகும் தவெக தலைவர்!
DMK : ’250 கோடி ரூபாய் Fees’ திமுக தோல்விக்கு காரணமான 2 நிறுவனங்கள்..!
’250 கோடி ரூபாய் Fees’ திமுக தோல்விக்கு காரணமான 2 நிறுவனங்கள்..!
Embed widget