மேலும் அறிய

சிறையில் இருக்கும் சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது...

சாட்டை துரைமுருகன் கடந்த 19ஆம் தேதி சைபர் குற்றபிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ‘சாட்டை’ துரைமுருகன் சில வாரங்களுக்கு முன்னதாக ஜாமினில் வெளியே வந்தார். தனது ‘சாட்டை’ யூடியூப் தளத்தில் அவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், பாஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றும் 9 பெண்கள் உயிரிழந்துவிட்டதாக பேசியிருந்தார். இந்த வீடியோதான் பாஸ்கான் ஊழியர்களின் போராட்டம் தீவிரமடைவதற்கு காரணம், பொய்யான தகவலை பரப்பி கலவரத்தை தூண்டினார் என கூறி காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி தில்லை நகரில் உள்ள துரைமுருகன் வீட்டிற்கு சென்ற சைபர் குற்றபிரிவு ஆய்வாளர் தயாளன் தலைமையிலான போலீசார் அவரை கடந்த 19ஆம் தேதி அவரை கைது செய்தனர். பின்னர், சாலை மார்க்கமாக திருவள்ளூர் அழைத்து வந்து, நீதித்துறை நடுவரிடம் ஆஜர்படுத்தி வரும் 03.01.2022ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை போடுவது குறித்து காவல்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்ற தகவல் வெளியானது. 


சிறையில் இருக்கும் சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது...

இந்நிலையில் நாளை அவருடைய ஜாமீன் விசாரணைக்கு வரும் நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தொடர்ந்து வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிவருவதாலும் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாலும் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் திருவள்ளூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

சிறையில் இருக்கும் சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது...

முன்னதாக மீண்டும் மீண்டும் கலவரத்தை தூண்டும் விதமாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும், இருதரப்பிற்கு இடையே வன்முறையை தூண்டும் விதமாகவும் பேசிவரும் ‘சாட்டை’ துரைமுருகனை சில மாதங்களுக்கு சிறையை விட்டு வெளியில் வராதபடி இருக்க அவர் மீது ‘குண்டர் தடுப்பு’ சட்டத்தை பிரயோகப்படுத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. அத்துடன் சமூக வலைதளங்களிலும் சாட்டை துரைமுருகனுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த திட்டத்தை போலீசார் முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது. அத்துடன் பிணையில் வரமுடியாத 8 பிரிவுகளில் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்திருக்கும் நிலையில், அவரது முந்தைய வழக்குகளையும் காரணம் காட்டி குண்டர் சட்டத்தை பயன்படுத்த காவல்துறையினர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் கிடைத்திருந்தது. 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India Victory Parade LIVE: வான்கடே நோக்கி செல்லும் வீரர்கள்..கட்டுக்கடங்காத கூட்டம்! மும்பை போலீஸ் முக்கிய கோரிக்கை!
Team India Victory Parade LIVE: வான்கடே நோக்கி செல்லும் வீரர்கள்..கட்டுக்கடங்காத கூட்டம்! மும்பை போலீஸ் முக்கிய கோரிக்கை!
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
’குடி’மகன்களுக்கு அதிர்ச்சி! விழுப்புரத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு ! காரணம் என்ன?
’குடி’மகன்களுக்கு அதிர்ச்சி! விழுப்புரத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு ! காரணம் என்ன?
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India Victory Parade LIVE: வான்கடே நோக்கி செல்லும் வீரர்கள்..கட்டுக்கடங்காத கூட்டம்! மும்பை போலீஸ் முக்கிய கோரிக்கை!
Team India Victory Parade LIVE: வான்கடே நோக்கி செல்லும் வீரர்கள்..கட்டுக்கடங்காத கூட்டம்! மும்பை போலீஸ் முக்கிய கோரிக்கை!
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
’குடி’மகன்களுக்கு அதிர்ச்சி! விழுப்புரத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு ! காரணம் என்ன?
’குடி’மகன்களுக்கு அதிர்ச்சி! விழுப்புரத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு ! காரணம் என்ன?
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!
Breaking News LIVE: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 3 பேர் விடுதலை
Breaking News LIVE: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 3 பேர் விடுதலை
Paramedical Counselling: பாராமெடிக்கல் படிப்புகளுக்கு கலந்தாய்வு எப்போது? வெளியான தகவல்
Paramedical Counselling: பாராமெடிக்கல் படிப்புகளுக்கு கலந்தாய்வு எப்போது? வெளியான தகவல்
TNPSC Recruitment: நடந்துவரும் குரூப் 2, 2ஏ விண்ணப்பப் பதிவு; தேர்வு முறை, கல்வித்தகுதி, பாடத்திட்டம்- முழு விவரம் இதோ!
நடந்துவரும் குரூப் 2, 2ஏ விண்ணப்பப் பதிவு; தேர்வு முறை, கல்வித்தகுதி, பாடத்திட்டம்- முழு விவரம் இதோ!
3ஆவது முறையாக ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்ற ஹேமந்த் சோரன்!
3ஆவது முறையாக ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்ற ஹேமந்த் சோரன்!
Embed widget