மேலும் அறிய

நெல்லை: மானூரில் நள்ளிரவில் பரிதாபம்: கழுத்தறுபட்ட நிலையில் இறந்து கிடந்த வாலிபர்! தற்கொலையா?

வாலிபர் ஒருவர் கழுத்து அறுப்பட்ட நிலையில் கோயிலுக்குள் இறந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அப்பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள களக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பால்சாமி. இவருக்கு லெட்சுமி என்ற மனைவியும், பாலகிருஷ்ணன் என்ற பாலா(வயது 30) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். இதில் மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். சமீபத்தில் பால்சாமி இறந்துவிட்ட நிலையில், பாலிடெக்னிக் படித்து முடித்திருந்த பாலகிருஷ்ணன் கடந்த 4 ஆண்டுகளாக அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலையில் அவர் அப்பகுதியில் மடத்தூர் சாலையில் உள்ள அய்யனார் சாஸ்தா கோவில் முன்பு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது பாலகிருஷ்ணன் உடல் அருகே கத்தி ஒன்று கிடந்தது. கோவில் முன்பு பத்தி, சூடம் உள்ளிட்டவை ஒரு பையில் வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பாலகிருஷ்ணன் வந்து கோவில் முன்பு இறங்கியதும், அவர் கையில் ஒரு பை கொண்டு வந்ததும் பதிவாகி உள்ளது. தொடர்ந்து அவர் கோவிலுக்குள் செல்லும் காட்சிகள் வரை அதில் தெளிவாக தெரிந்தது.


நெல்லை: மானூரில் நள்ளிரவில் பரிதாபம்: கழுத்தறுபட்ட நிலையில் இறந்து கிடந்த வாலிபர்! தற்கொலையா?

மேற்கொண்டு உள்ள காட்சிகள் அந்த கேமிராவில் பதிவாகவில்லை. இறந்து போன பாலகிருஷ்ணன் கடந்த சில மாதங்களாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதோடு அவர் இறந்து கிடந்த இடத்தில் இருந்த தடயங்களை பார்க்கும்போது அவர் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என்பது குறித்த முழுவிவரமும் தெரியவரும். இதனிடையே அவர் நள்ளிரவில் எதற்காக கோவிலுக்கு வந்தார்? என்ன பிரச்சினை? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வாலிபர் ஒருவர் கழுத்து அறுப்பட்ட நிலையில் கோவிலுக்குள் இறந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அப்பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திருமண நாளில் நிகழ்ந்த துயரம் ; கணவன் புறக்கணித்ததால் குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த பெண்
திருமண நாளில் நிகழ்ந்த துயரம் ; கணவன் புறக்கணித்ததால் குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த பெண்
மாமியார் - மருமகள் தகராறு ; டீ போட மறுத்ததால் அரிவாளால் வெட்டி கொலை !! அதிர்ச்சி சம்பவம்
மாமியார் - மருமகள் தகராறு ; டீ போட மறுத்ததால் அரிவாளால் வெட்டி கொலை !! அதிர்ச்சி சம்பவம்
மயிலாடுதுறையில் இத்தனை பேரிடம் துப்பாக்கியா...! என்னங்க சொல்றீங்க..?
மயிலாடுதுறையில் இத்தனை பேரிடம் துப்பாக்கியா...! என்னங்க சொல்றீங்க..?
பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உயரதிகாரி ! நடவடிக்கை இல்லை என பெண் காவலர்கள் ஆதங்கம்
பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உயரதிகாரி ! நடவடிக்கை இல்லை என பெண் காவலர்கள் ஆதங்கம்
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: சென்னையால் வந்த வினை..! விஜயை டேக் கேர் செய்யும் ஆதவ் அர்ஜுனா? வெற்றிக்காக போராடும் ஆனந்த்?
TVK Vijay: சென்னையால் வந்த வினை..! விஜயை டேக் கேர் செய்யும் ஆதவ் அர்ஜுனா? வெற்றிக்காக போராடும் ஆனந்த்?
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
TN Election: அதிர்ச்சி அளித்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் மரணம் - மிரட்டிய ஈரோடு கிழக்கு, 5 ஆண்டுகளில் எத்தனை பேர்?
TN Election: அதிர்ச்சி அளித்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் மரணம் - மிரட்டிய ஈரோடு கிழக்கு, 5 ஆண்டுகளில் எத்தனை பேர்?
Honda 0 Alpha SUV: ஃபாரின்ல மூடினாலும், இந்தியால தொடங்கிட்டோம் - 0 ஆல்பா எஸ்யுவி டெஸ்டிங் ஸ்டார்ட் - பேட்டரி, விலை
Honda 0 Alpha SUV: ஃபாரின்ல மூடினாலும், இந்தியால தொடங்கிட்டோம் - 0 ஆல்பா எஸ்யுவி டெஸ்டிங் ஸ்டார்ட் - பேட்டரி, விலை
Parthiban Controversy: தெலுங்கில் சாதி பெருமை.. தமிழை மறக்க மாட்டேன் என பார்த்திபன் சத்தியம்!
Parthiban Controversy: தெலுங்கில் சாதி பெருமை.. தமிழை மறக்க மாட்டேன் என பார்த்திபன் சத்தியம்!
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Iran Dancing Missile: ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
Embed widget