மேலும் அறிய

நெல்லை: மானூரில் நள்ளிரவில் பரிதாபம்: கழுத்தறுபட்ட நிலையில் இறந்து கிடந்த வாலிபர்! தற்கொலையா?

வாலிபர் ஒருவர் கழுத்து அறுப்பட்ட நிலையில் கோயிலுக்குள் இறந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அப்பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள களக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பால்சாமி. இவருக்கு லெட்சுமி என்ற மனைவியும், பாலகிருஷ்ணன் என்ற பாலா(வயது 30) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். இதில் மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். சமீபத்தில் பால்சாமி இறந்துவிட்ட நிலையில், பாலிடெக்னிக் படித்து முடித்திருந்த பாலகிருஷ்ணன் கடந்த 4 ஆண்டுகளாக அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலையில் அவர் அப்பகுதியில் மடத்தூர் சாலையில் உள்ள அய்யனார் சாஸ்தா கோவில் முன்பு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது பாலகிருஷ்ணன் உடல் அருகே கத்தி ஒன்று கிடந்தது. கோவில் முன்பு பத்தி, சூடம் உள்ளிட்டவை ஒரு பையில் வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பாலகிருஷ்ணன் வந்து கோவில் முன்பு இறங்கியதும், அவர் கையில் ஒரு பை கொண்டு வந்ததும் பதிவாகி உள்ளது. தொடர்ந்து அவர் கோவிலுக்குள் செல்லும் காட்சிகள் வரை அதில் தெளிவாக தெரிந்தது.


நெல்லை: மானூரில் நள்ளிரவில் பரிதாபம்: கழுத்தறுபட்ட நிலையில் இறந்து கிடந்த வாலிபர்! தற்கொலையா?

மேற்கொண்டு உள்ள காட்சிகள் அந்த கேமிராவில் பதிவாகவில்லை. இறந்து போன பாலகிருஷ்ணன் கடந்த சில மாதங்களாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதோடு அவர் இறந்து கிடந்த இடத்தில் இருந்த தடயங்களை பார்க்கும்போது அவர் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என்பது குறித்த முழுவிவரமும் தெரியவரும். இதனிடையே அவர் நள்ளிரவில் எதற்காக கோவிலுக்கு வந்தார்? என்ன பிரச்சினை? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வாலிபர் ஒருவர் கழுத்து அறுப்பட்ட நிலையில் கோவிலுக்குள் இறந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அப்பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget