மேலும் அறிய

திருவாரூர் |வளரும் தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் வெட்டி படுகொலை..!

எட்டு பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த ரஜினி பாண்டியனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள எடையூர் பகுதியை சேர்ந்தவர் ரஜினி பாண்டியன். இவர் வளரும் தமிழகம் என்ற கட்சியில் மாவட்ட செயலாளராக உள்ளார். அதாவது ஜான் பாண்டியன் தொடங்கிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் என்கிற கட்சியிலிருந்து விலகிய ரஜினி பாண்டியன் எடையூர் பகுதியை சேர்ந்த பட்டாபிராம் என்பவருக்கு ஆதரவாக அவர் தொடங்கிய புதிய கட்சியான வளரும் தமிழகம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார்.
 
இந்நிலையில் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் வந்தவரை வடசங்கேந்தி என்னுமிடத்தில் எட்டு பேர் கொண்ட மர்ம நபர்கள் வாகனத்தை மறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த ரஜினி பாண்டியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரஜினி பாண்டியனை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். மேலும் பதற்றம் நீடிப்பதால் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருவாரூர் |வளரும் தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் வெட்டி படுகொலை..!
இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் தெரிவித்தபோது, “வளரும் தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரஜினி பாண்டியனுக்கும், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்ந்து முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் அதே பகுதியைச் சேர்ந்த ரஜினி பாண்டியனின் ஆதரவாளர் டிராக்டர் ஓட்டி வந்த பொழுது மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் டிராக்டர் ஓட்டி வந்த டிரைவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது குறித்து எடையூர் காவல் நிலையத்தில் டிரைவர் புகார் அளித்துள்ளதாகவும் டிரைவர் புகார் அளித்ததற்கு ரஜினி பாண்டியன்தான் காரணம் என நினைத்து இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறையினர் தங்களுடைய முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறி எடையூர் சங்கேந்தியை சேர்ந்த மகாதேவன் மற்றும் ராஜேஷ் என்பவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரஜினி பாண்டியனின் உடல் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் உள்ள நிலையில் அங்கு மருத்துவமனைக்கு எதிராக இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையை நடத்தி வருபவர் வீரக்குமார். இவர் மருத்துவமனை வளாகத்தில் நின்று தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். ரஜினி பாண்டியன் இறந்தது பற்றி தொலைபேசியில் பேசி வருகிறார் என நினைத்து ரஜினி பாண்டியனின் ஆதரவாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வீரகுமாரை கத்தியால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குத்தி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த வீரகுமார் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த கொலை சம்பவத்தால் இரு சமூகத்தினர் இடையே பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், காவல்துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருத்துறைபூண்டி முதல் எடையூர் சங்கேந்தி வரை காவல் துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். எடையூர் சங்கேந்தி கிராமம் பதற்றத்துடன் காணப்படுகிறது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Embed widget