மேலும் அறிய

திருவாரூர் |வளரும் தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் வெட்டி படுகொலை..!

எட்டு பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த ரஜினி பாண்டியனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள எடையூர் பகுதியை சேர்ந்தவர் ரஜினி பாண்டியன். இவர் வளரும் தமிழகம் என்ற கட்சியில் மாவட்ட செயலாளராக உள்ளார். அதாவது ஜான் பாண்டியன் தொடங்கிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் என்கிற கட்சியிலிருந்து விலகிய ரஜினி பாண்டியன் எடையூர் பகுதியை சேர்ந்த பட்டாபிராம் என்பவருக்கு ஆதரவாக அவர் தொடங்கிய புதிய கட்சியான வளரும் தமிழகம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார்.
 
இந்நிலையில் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் வந்தவரை வடசங்கேந்தி என்னுமிடத்தில் எட்டு பேர் கொண்ட மர்ம நபர்கள் வாகனத்தை மறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த ரஜினி பாண்டியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரஜினி பாண்டியனை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். மேலும் பதற்றம் நீடிப்பதால் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருவாரூர் |வளரும் தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் வெட்டி படுகொலை..!
இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் தெரிவித்தபோது, “வளரும் தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரஜினி பாண்டியனுக்கும், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்ந்து முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் அதே பகுதியைச் சேர்ந்த ரஜினி பாண்டியனின் ஆதரவாளர் டிராக்டர் ஓட்டி வந்த பொழுது மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் டிராக்டர் ஓட்டி வந்த டிரைவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது குறித்து எடையூர் காவல் நிலையத்தில் டிரைவர் புகார் அளித்துள்ளதாகவும் டிரைவர் புகார் அளித்ததற்கு ரஜினி பாண்டியன்தான் காரணம் என நினைத்து இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறையினர் தங்களுடைய முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறி எடையூர் சங்கேந்தியை சேர்ந்த மகாதேவன் மற்றும் ராஜேஷ் என்பவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரஜினி பாண்டியனின் உடல் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் உள்ள நிலையில் அங்கு மருத்துவமனைக்கு எதிராக இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையை நடத்தி வருபவர் வீரக்குமார். இவர் மருத்துவமனை வளாகத்தில் நின்று தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். ரஜினி பாண்டியன் இறந்தது பற்றி தொலைபேசியில் பேசி வருகிறார் என நினைத்து ரஜினி பாண்டியனின் ஆதரவாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வீரகுமாரை கத்தியால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குத்தி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த வீரகுமார் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த கொலை சம்பவத்தால் இரு சமூகத்தினர் இடையே பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், காவல்துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருத்துறைபூண்டி முதல் எடையூர் சங்கேந்தி வரை காவல் துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். எடையூர் சங்கேந்தி கிராமம் பதற்றத்துடன் காணப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு
காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு
பிரீசர் பாக்ஸில் சிறுவன் சடலம் !! அடித்து கொன்ற அத்தை !! மாந்திரீக பின்னணி ?
பிரீசர் பாக்ஸில் சிறுவன் சடலம் !! அடித்து கொன்ற அத்தை !! மாந்திரீக பின்னணி ?
மனைவி போனில் மெசேஜ் அனுப்பி கள்ளக்காதலனை கொன்ற கணவன்
மனைவி போனில் மெசேஜ் அனுப்பி கள்ளக்காதலனை கொன்ற கணவன்
மதுக்கரையில் செயின் பறிப்பு வழக்கு: தனிப்படை விசாரணையில் சிக்கிய குற்றவாளி
மதுக்கரையில் செயின் பறிப்பு வழக்கு: தனிப்படை விசாரணையில் சிக்கிய குற்றவாளி

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Assembly : ”அட்லி பற்றியும் பேசுவோம் சட்னி பற்றியும் பேசுவோம்” பேரவையில் சம்பவம் செய்த திமுக..!
”அட்லி பற்றியும் பேசுவோம் சட்னி பற்றியும் பேசுவோம்” பேரவையில் சம்பவம் செய்த திமுக..!
சட்டமன்றத்தில் இருமுறை தேசியகீதம்.! திமுக- தவெக காரசார விவாதம்- இன்று நடந்தது என்ன.?
சட்டமன்றத்தில் இருமுறை தேசியகீதம்.! திமுக- தவெக காரசார விவாதம்- இன்று நடந்தது என்ன.?
’’அடிப்படையே இல்லாமல் குற்றம்சாட்டுவதா? அப்பட்டமான சந்தர்ப்பவாதம்’’- திமுகவை வெளுத்த மார்க்சிஸ்ட்!
’’அடிப்படையே இல்லாமல் குற்றம்சாட்டுவதா? அப்பட்டமான சந்தர்ப்பவாதம்’’- திமுகவை வெளுத்த மார்க்சிஸ்ட்!
TN Assembly: ’’காவிரில நமக்கே அதிக உரிமை; இப்டியே போனா சொட்டுத்தண்ணி கிடைக்காது’’ பாயிண்ட்டை அடுக்கிய செளமியா அன்புமணி
TN Assembly: ’’காவிரில நமக்கே அதிக உரிமை; இப்டியே போனா சொட்டுத்தண்ணி கிடைக்காது’’ பாயிண்ட்டை அடுக்கிய செளமியா அன்புமணி
MK Stalin greets Rahul : 'உடன்பிறப்பை தவிர்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்’ ராகுல்காந்திக்கு வாழ்த்து..!
'உடன்பிறப்பை தவிர்த்த மு.க.ஸ்டாலின்’ ராகுல்காந்திக்கு வாழ்த்து..!
TN Assembly: கோரிக்கை வைத்த உதயநிதி; உடனே ஓகே சொன்ன முதல்வர் விஜய்- தீர்மானத்தில் மாற்றம்!
TN Assembly: கோரிக்கை வைத்த உதயநிதி; உடனே ஓகே சொன்ன முதல்வர் விஜய்- தீர்மானத்தில் மாற்றம்!
Mojtaba Vs Trump: “ட்ரம்ப் தான் தீவிரம் காட்டினார், தயக்கத்தோடு டீலுக்கு ஒப்புக் கொண்டேன்“: மொஜ்தபா கூறுவது என்ன.?
“ட்ரம்ப் தான் தீவிரம் காட்டினார், தயக்கத்தோடு டீலுக்கு ஒப்புக் கொண்டேன்“: மொஜ்தபா கூறுவது என்ன.?
Land Cruiser LC300: CM விஜய்யின் ப்ரியமான கார்; அரசியல்வாதிகள் விரும்பும் Toyota லேண்ட் க்ரூஸர் LC 300-ல் அப்படி என்ன இருக்கு.?
CM விஜய்யின் ப்ரியமான கார்; அரசியல்வாதிகள் விரும்பும் Toyota லேண்ட் க்ரூஸர் LC 300-ல் அப்படி என்ன இருக்கு.?
Embed widget