மேலும் அறிய

வருங்கால மருமகனுடன் சேர்ந்து கணவனை கழுத்தறுத்து கொல்ல முயன்ற மனைவி - ஆபத்தான நிலையில் கணவனுக்கு சிகிச்சை

’'குடிபோதையில் எனது கணவர் என்னை கொடுமைப்படுத்தி வந்தார். எனவே அவரது கொடுமை தாங்காமல் உறவுக்காரரான வல்லரசுவிடம் கூறி இருவரும் அவரை தீர்த்துக்கட்ட முயன்றோம்’’

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சே.ஆண்டாபட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(40) மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (34). இந்த தம்பதிக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் மதுபோதைக்கு அடிமையாகி மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரனின் வழக்கம் போல் வீட்டில் சாப்பிட்டு விட்டு தனது குடும்பத்துடன் இரவு தூங்கி கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது ராஜேந்திரன் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பின்னர் அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

வருங்கால மருமகனுடன் சேர்ந்து கணவனை கழுத்தறுத்து கொல்ல முயன்ற மனைவி - ஆபத்தான நிலையில் கணவனுக்கு சிகிச்சை

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தானிப்பாடி காவல்நிலைய ஆய்வாளர் தனலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மருத்துவமனையில் அவசர சிகிச்சைபிரிவில் உள்ள ராஜேந்திரனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது எனது மூத்த மகளுக்கு திருமணம் செய்து கொள்ளப் போகும் எங்களுடைய உறவினர் வல்லரசு வயது (23) அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்தோம். இந்நிலையில் உறவுக்காரரான வல்லரசு என்னுடைய மனைவி ரேவதியும் நான் தூங்கும் போது திடிரென அழுத்தி பிடித்துக்கொண்டு கழுத்தை அறுத்து கொல்ல முயன்றனர். அப்போது நான் அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடி மயங்கி விட்டேன்' என தெரிவித்தார். 

வருங்கால மருமகனுடன் சேர்ந்து கணவனை கழுத்தறுத்து கொல்ல முயன்ற மனைவி - ஆபத்தான நிலையில் கணவனுக்கு சிகிச்சை

அதனை தொடர்ந்து அருகிலுள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த ராஜேந்திரனின் மனைவி ரேவதி மற்றும் உறவுக்காரர் வல்லரசுவை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்தனர். விசாரணையில் ரேவதி காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், 'குடிபோதையில் எனது கணவர் என்னை கொடுமைப்படுத்தி வந்தார். எனவே அவரது கொடுமை தாங்காமல் உறவுக்காரரான வல்லரசுவிடம் கூறி இருவரும் அவரை தீர்த்துக்கட்ட முயன்றோம். அப்போது அக்கம்பக்கத்தினர் வந்ததால் அங்கிருந்து தப்பிவிட்டோம்' என தெரிவித்தார். இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர், குடிபோதையில் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி கழுத்து அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

" கதவைத் திறந்து பார்த்த பேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி " மாயமான நகைகள் ?
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
ஒட்டுமொத்த அமைச்சரவையும் தியேட்டரில்.. தலைமைசெயலகத்திற்கு வராத சிஎம் விஜய்- வெறிச்சோடிய அலுவலகம்
ஒட்டுமொத்த அமைச்சரவையும் தியேட்டரில்.. தலைமைசெயலகத்திற்கு வராத சிஎம் விஜய்- வெறிச்சோடிய அலுவலகம்
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
Embed widget