மேலும் அறிய

வருங்கால மருமகனுடன் சேர்ந்து கணவனை கழுத்தறுத்து கொல்ல முயன்ற மனைவி - ஆபத்தான நிலையில் கணவனுக்கு சிகிச்சை

’'குடிபோதையில் எனது கணவர் என்னை கொடுமைப்படுத்தி வந்தார். எனவே அவரது கொடுமை தாங்காமல் உறவுக்காரரான வல்லரசுவிடம் கூறி இருவரும் அவரை தீர்த்துக்கட்ட முயன்றோம்’’

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சே.ஆண்டாபட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(40) மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (34). இந்த தம்பதிக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் மதுபோதைக்கு அடிமையாகி மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரனின் வழக்கம் போல் வீட்டில் சாப்பிட்டு விட்டு தனது குடும்பத்துடன் இரவு தூங்கி கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது ராஜேந்திரன் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பின்னர் அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

வருங்கால மருமகனுடன் சேர்ந்து கணவனை கழுத்தறுத்து கொல்ல முயன்ற மனைவி - ஆபத்தான நிலையில் கணவனுக்கு சிகிச்சை

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தானிப்பாடி காவல்நிலைய ஆய்வாளர் தனலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மருத்துவமனையில் அவசர சிகிச்சைபிரிவில் உள்ள ராஜேந்திரனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது எனது மூத்த மகளுக்கு திருமணம் செய்து கொள்ளப் போகும் எங்களுடைய உறவினர் வல்லரசு வயது (23) அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்தோம். இந்நிலையில் உறவுக்காரரான வல்லரசு என்னுடைய மனைவி ரேவதியும் நான் தூங்கும் போது திடிரென அழுத்தி பிடித்துக்கொண்டு கழுத்தை அறுத்து கொல்ல முயன்றனர். அப்போது நான் அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடி மயங்கி விட்டேன்' என தெரிவித்தார். 

வருங்கால மருமகனுடன் சேர்ந்து கணவனை கழுத்தறுத்து கொல்ல முயன்ற மனைவி - ஆபத்தான நிலையில் கணவனுக்கு சிகிச்சை

அதனை தொடர்ந்து அருகிலுள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த ராஜேந்திரனின் மனைவி ரேவதி மற்றும் உறவுக்காரர் வல்லரசுவை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்தனர். விசாரணையில் ரேவதி காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், 'குடிபோதையில் எனது கணவர் என்னை கொடுமைப்படுத்தி வந்தார். எனவே அவரது கொடுமை தாங்காமல் உறவுக்காரரான வல்லரசுவிடம் கூறி இருவரும் அவரை தீர்த்துக்கட்ட முயன்றோம். அப்போது அக்கம்பக்கத்தினர் வந்ததால் அங்கிருந்து தப்பிவிட்டோம்' என தெரிவித்தார். இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர், குடிபோதையில் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி கழுத்து அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.