மேலும் அறிய

வருங்கால மருமகனுடன் சேர்ந்து கணவனை கழுத்தறுத்து கொல்ல முயன்ற மனைவி - ஆபத்தான நிலையில் கணவனுக்கு சிகிச்சை

’'குடிபோதையில் எனது கணவர் என்னை கொடுமைப்படுத்தி வந்தார். எனவே அவரது கொடுமை தாங்காமல் உறவுக்காரரான வல்லரசுவிடம் கூறி இருவரும் அவரை தீர்த்துக்கட்ட முயன்றோம்’’

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சே.ஆண்டாபட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(40) மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (34). இந்த தம்பதிக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் மதுபோதைக்கு அடிமையாகி மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரனின் வழக்கம் போல் வீட்டில் சாப்பிட்டு விட்டு தனது குடும்பத்துடன் இரவு தூங்கி கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது ராஜேந்திரன் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பின்னர் அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

வருங்கால மருமகனுடன் சேர்ந்து கணவனை கழுத்தறுத்து கொல்ல முயன்ற மனைவி - ஆபத்தான நிலையில் கணவனுக்கு சிகிச்சை

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தானிப்பாடி காவல்நிலைய ஆய்வாளர் தனலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மருத்துவமனையில் அவசர சிகிச்சைபிரிவில் உள்ள ராஜேந்திரனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது எனது மூத்த மகளுக்கு திருமணம் செய்து கொள்ளப் போகும் எங்களுடைய உறவினர் வல்லரசு வயது (23) அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்தோம். இந்நிலையில் உறவுக்காரரான வல்லரசு என்னுடைய மனைவி ரேவதியும் நான் தூங்கும் போது திடிரென அழுத்தி பிடித்துக்கொண்டு கழுத்தை அறுத்து கொல்ல முயன்றனர். அப்போது நான் அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடி மயங்கி விட்டேன்' என தெரிவித்தார். 

வருங்கால மருமகனுடன் சேர்ந்து கணவனை கழுத்தறுத்து கொல்ல முயன்ற மனைவி - ஆபத்தான நிலையில் கணவனுக்கு சிகிச்சை

அதனை தொடர்ந்து அருகிலுள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த ராஜேந்திரனின் மனைவி ரேவதி மற்றும் உறவுக்காரர் வல்லரசுவை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்தனர். விசாரணையில் ரேவதி காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், 'குடிபோதையில் எனது கணவர் என்னை கொடுமைப்படுத்தி வந்தார். எனவே அவரது கொடுமை தாங்காமல் உறவுக்காரரான வல்லரசுவிடம் கூறி இருவரும் அவரை தீர்த்துக்கட்ட முயன்றோம். அப்போது அக்கம்பக்கத்தினர் வந்ததால் அங்கிருந்து தப்பிவிட்டோம்' என தெரிவித்தார். இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர், குடிபோதையில் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி கழுத்து அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
தேர்தல் களம் சூடுபிடிக்கிறது! பிரதமர் மோடி வருகை: செங்கல்பட்டில் மாஸ் காட்டும் கூட்டணி? பரபரப்பு தகவல்!
தேர்தல் களம் சூடுபிடிக்கிறது! பிரதமர் மோடி வருகை: செங்கல்பட்டில் மாஸ் காட்டும் கூட்டணி? பரபரப்பு தகவல்!
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Kappu Kattu 2026: தீயவை விலகட்டும்! பொங்கல் காப்பு கட்ட வேண்டிய சுப முகூர்த்த நேரம் இதோ!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
Bhogi Festival 2026: பழையன கழிதலும் புதியன புகுதலும்: போகிப் பண்டிகை- காப்புக்கட்டு- தேதி, வரலாறு, சிறப்புகள்!
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
SUdha Kongara: ”ரவுடி.. குண்டர்கள்” வாய்விட்ட சுதா கொங்கரா..! வறுத்து எடுக்கும் விஜய் ஃபேன்ஸ் - பராசக்தி வொர்த்தா?
தேர்தல் களம் சூடுபிடிக்கிறது! பிரதமர் மோடி வருகை: செங்கல்பட்டில் மாஸ் காட்டும் கூட்டணி? பரபரப்பு தகவல்!
தேர்தல் களம் சூடுபிடிக்கிறது! பிரதமர் மோடி வருகை: செங்கல்பட்டில் மாஸ் காட்டும் கூட்டணி? பரபரப்பு தகவல்!
Salem: இனிக்க இனிக்க பேசிய இன்ஸ்டா காதலி.. ரூம் போட்டு கொலை செய்த கள்ளக்காதலன்!
Salem: இனிக்க இனிக்க பேசிய இன்ஸ்டா காதலி.. ரூம் போட்டு கொலை செய்த கள்ளக்காதலன்!
IndiGo Mega Sale: லைஃப் டைம் ஆஃபர்..! ரூ.1க்கு விமான டிக்கெட், உள்ளூர் தொடங்கி உலக டூர் - ரூ.4,499 மட்டுமே -ஜன.16 வரை
IndiGo Mega Sale: லைஃப் டைம் ஆஃபர்..! ரூ.1க்கு விமான டிக்கெட், உள்ளூர் தொடங்கி உலக டூர் - ரூ.4,499 மட்டுமே -ஜன.16 வரை
Telangana: தேர்தல் வாக்குறுதி.. ஒரே வாரத்தில் 500 தெரு நாய்களை கொன்ற அதிகாரிகள்!
Telangana: தேர்தல் வாக்குறுதி.. ஒரே வாரத்தில் 500 தெரு நாய்களை கொன்ற அதிகாரிகள்!
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Embed widget