மேலும் அறிய

வருங்கால மருமகனுடன் சேர்ந்து கணவனை கழுத்தறுத்து கொல்ல முயன்ற மனைவி - ஆபத்தான நிலையில் கணவனுக்கு சிகிச்சை

’'குடிபோதையில் எனது கணவர் என்னை கொடுமைப்படுத்தி வந்தார். எனவே அவரது கொடுமை தாங்காமல் உறவுக்காரரான வல்லரசுவிடம் கூறி இருவரும் அவரை தீர்த்துக்கட்ட முயன்றோம்’’

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சே.ஆண்டாபட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(40) மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (34). இந்த தம்பதிக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் மதுபோதைக்கு அடிமையாகி மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரனின் வழக்கம் போல் வீட்டில் சாப்பிட்டு விட்டு தனது குடும்பத்துடன் இரவு தூங்கி கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது ராஜேந்திரன் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பின்னர் அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

வருங்கால மருமகனுடன் சேர்ந்து கணவனை கழுத்தறுத்து கொல்ல முயன்ற மனைவி - ஆபத்தான நிலையில் கணவனுக்கு சிகிச்சை

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தானிப்பாடி காவல்நிலைய ஆய்வாளர் தனலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மருத்துவமனையில் அவசர சிகிச்சைபிரிவில் உள்ள ராஜேந்திரனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது எனது மூத்த மகளுக்கு திருமணம் செய்து கொள்ளப் போகும் எங்களுடைய உறவினர் வல்லரசு வயது (23) அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்தோம். இந்நிலையில் உறவுக்காரரான வல்லரசு என்னுடைய மனைவி ரேவதியும் நான் தூங்கும் போது திடிரென அழுத்தி பிடித்துக்கொண்டு கழுத்தை அறுத்து கொல்ல முயன்றனர். அப்போது நான் அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடி மயங்கி விட்டேன்' என தெரிவித்தார். 

வருங்கால மருமகனுடன் சேர்ந்து கணவனை கழுத்தறுத்து கொல்ல முயன்ற மனைவி - ஆபத்தான நிலையில் கணவனுக்கு சிகிச்சை

அதனை தொடர்ந்து அருகிலுள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த ராஜேந்திரனின் மனைவி ரேவதி மற்றும் உறவுக்காரர் வல்லரசுவை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்தனர். விசாரணையில் ரேவதி காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், 'குடிபோதையில் எனது கணவர் என்னை கொடுமைப்படுத்தி வந்தார். எனவே அவரது கொடுமை தாங்காமல் உறவுக்காரரான வல்லரசுவிடம் கூறி இருவரும் அவரை தீர்த்துக்கட்ட முயன்றோம். அப்போது அக்கம்பக்கத்தினர் வந்ததால் அங்கிருந்து தப்பிவிட்டோம்' என தெரிவித்தார். இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர், குடிபோதையில் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி கழுத்து அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget