மேலும் அறிய

Crime: திருவண்ணாமலையில் லாரி ஓட்டுனரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு - 3 வாலிபர்கள் கைது

திருவண்ணாமலையில் லாரி ஓட்டுனரிடம் கத்திய காட்டி பணம் பறித்த தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மூன்று வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை பேகோபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் ஆதம். இவர் கடந்த 11-ஆம் தேதி திருவண்ணாமலையில் உள்ள மணலூர்பேட்டை நெடுந்சாலையில் உள்ள ஒரு குடோன் வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் மூன்று பேர் தங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ஆதாமிடம் இருந்து பத்தாயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் மற்றும் செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கு இருந்து தப்பித்து சென்றுவிட்டனர். உடனடியாக இதுகுறித்து திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் ஆதம் நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் குற்றபிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரிலும் நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்‌.

 


Crime: திருவண்ணாமலையில் லாரி ஓட்டுனரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு - 3 வாலிபர்கள் கைது

 

அப்போது திருவண்ணாமலை வேட்டவலம் செல்லும் நெடுஞ்சாலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது அங்கு சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று வாலிபர்கள் நின்றுகொண்டு இருந்தனர். அப்போது உடனடியாக காவல்துறையினர் மூன்று வாலிபர்களை அழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்கள் அளித்த பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் அந்த மூன்று வாலிபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த விசாரணையில் மூன்று வாலிபர்களும் வழிபறியில் ஈடுபடுவது தெரியவந்தது. மேலும் ஆதமிடம் இருந்து பணம் செல்போன் பறித்தது அவர்கள் தான் என்பது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து வழிபறியில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களும் திருவண்ணாமலை கல்நகரை சேர்ந்த முரளி வயது (26), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணகுமார் வயது ( 28), கம்மங் கொள்ளை தெருவை சேர்ந்த விஷ்ணுப்பிரியன் வயது (22) ஆகிய மூன்று வாலிபர்களும் வேலைக்கு செல்லாமல் வழிப்பறியை தொழிலாக செய்து வருவதாக கூறப்படுகிறது.

 


Crime: திருவண்ணாமலையில் லாரி ஓட்டுனரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு - 3 வாலிபர்கள் கைது

 

மேலும், இவர்கள்  மீதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கு முன்னதாக அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை மணலூர் பேட்டை செல்லும் நெடுஞ்சாலையில் அப்பகுதியில் அதிக கிராமங்கள் உள்ளது. அங்கு உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் திருவண்ணாமலைக்கு வரவேண்டும். மீண்டும் வீட்டிற்கு செல்வதற்கு இரவு நேரம் ஆகிவிடுகிறது. இதனை அறிந்த வழிபறி கொள்ளையர்கள் திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் கஞ்சா போதையில்  பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து நகை , பணம் கொள்ளையடித்து சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயத்தில் உள்ளனர். அந்த பகுதியில் காவல்துறையினர் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
பணத்தைக் கேட்டா 'பிட்டு துணியோடு' அடிப்பாங்களா? - உயிருக்கு பயந்து ஓடிய ஏஜென்ட்கள் - நடந்தது என்ன?
பணத்தைக் கேட்டா 'பிட்டு துணியோடு' அடிப்பாங்களா? - உயிருக்கு பயந்து ஓடிய ஏஜென்ட்கள் - நடந்தது என்ன?
விழுப்புரம் அருகே சோகம்... வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட மினிவேன் டிரைவர் திடீர் மரணம்!
விழுப்புரம் அருகே சோகம்... வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட மினிவேன் டிரைவர் திடீர் மரணம்!
சோழபுரத்தில் அதிரடி: ரூ.50 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ புகையிலைப் பொருட்கள் குழிதோண்டி அழிப்பு
சோழபுரத்தில் அதிரடி: ரூ.50 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ புகையிலைப் பொருட்கள் குழிதோண்டி அழிப்பு

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
ADMK:
ADMK: "வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்.." விஜய்யை விளாசிய அதிமுக!
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?
பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
Embed widget