மேலும் அறிய

Crime: திருவண்ணாமலையில் லாரி ஓட்டுனரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு - 3 வாலிபர்கள் கைது

திருவண்ணாமலையில் லாரி ஓட்டுனரிடம் கத்திய காட்டி பணம் பறித்த தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மூன்று வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை பேகோபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் ஆதம். இவர் கடந்த 11-ஆம் தேதி திருவண்ணாமலையில் உள்ள மணலூர்பேட்டை நெடுந்சாலையில் உள்ள ஒரு குடோன் வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் மூன்று பேர் தங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ஆதாமிடம் இருந்து பத்தாயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் மற்றும் செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கு இருந்து தப்பித்து சென்றுவிட்டனர். உடனடியாக இதுகுறித்து திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் ஆதம் நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் குற்றபிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரிலும் நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்‌.

 


Crime: திருவண்ணாமலையில் லாரி ஓட்டுனரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு - 3  வாலிபர்கள் கைது

 

அப்போது திருவண்ணாமலை வேட்டவலம் செல்லும் நெடுஞ்சாலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது அங்கு சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று வாலிபர்கள் நின்றுகொண்டு இருந்தனர். அப்போது உடனடியாக காவல்துறையினர் மூன்று வாலிபர்களை அழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்கள் அளித்த பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் அந்த மூன்று வாலிபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த விசாரணையில் மூன்று வாலிபர்களும் வழிபறியில் ஈடுபடுவது தெரியவந்தது. மேலும் ஆதமிடம் இருந்து பணம் செல்போன் பறித்தது அவர்கள் தான் என்பது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து வழிபறியில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களும் திருவண்ணாமலை கல்நகரை சேர்ந்த முரளி வயது (26), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணகுமார் வயது ( 28), கம்மங் கொள்ளை தெருவை சேர்ந்த விஷ்ணுப்பிரியன் வயது (22) ஆகிய மூன்று வாலிபர்களும் வேலைக்கு செல்லாமல் வழிப்பறியை தொழிலாக செய்து வருவதாக கூறப்படுகிறது.

 


Crime: திருவண்ணாமலையில் லாரி ஓட்டுனரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு - 3  வாலிபர்கள் கைது

 

மேலும், இவர்கள்  மீதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கு முன்னதாக அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை மணலூர் பேட்டை செல்லும் நெடுஞ்சாலையில் அப்பகுதியில் அதிக கிராமங்கள் உள்ளது. அங்கு உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் திருவண்ணாமலைக்கு வரவேண்டும். மீண்டும் வீட்டிற்கு செல்வதற்கு இரவு நேரம் ஆகிவிடுகிறது. இதனை அறிந்த வழிபறி கொள்ளையர்கள் திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் கஞ்சா போதையில்  பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து நகை , பணம் கொள்ளையடித்து சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயத்தில் உள்ளனர். அந்த பகுதியில் காவல்துறையினர் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai 144: திடீர் பரபரப்பு..! மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல் - காரணம் என்ன?
Madurai 144: திடீர் பரபரப்பு..! மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல் - காரணம் என்ன?
TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் மேலும் 10 பேர் கைது - இலங்கை கடற்படை கைவரிசை
TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் மேலும் 10 பேர் கைது - இலங்கை கடற்படை கைவரிசை
IND Vs ENG: கடைசி டி20-யில் இமாலய வெற்றி...தொடரை தொக்காக தூக்கிய இந்தியா...முழு விவரங்கள்...
கடைசி டி20-யில் இமாலய வெற்றி...தொடரை தொக்காக தூக்கிய இந்தியா...முழு விவரங்கள்...
TVK 2nd Year: 2ம் ஆண்டில் தவெக.. தலைவர்கள் சிலை திறப்பு.. சுடச்சுட உணவு.. களைகட்டிய பனையூர்...
2ம் ஆண்டில் தவெக.. தலைவர்கள் சிலை திறப்பு.. சுடச்சுட உணவு.. களைகட்டிய பனையூர்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK | பொறுப்பு கொடுத்த விஜய் பொறுப்பில்லாத தவெக மா.செ!ஸ்தம்பித்த சென்னை அம்பத்தூர்Vetrimaaran in TVK Function | தவெக-வில் இணையும் வெற்றிமாறன்?சம்பவம் செய்த தொண்டர்கள்! இது நம்ம LIST-லயே இல்லயேஆட்சி, அதிகாரத்தில் பங்கு.. மீண்டும் கூட்டணிக்கு அழைப்பு! ஆட்டம் காட்டும் விஜய்கறார் காட்டும் EPS! விஜய் போடும் கணக்கு! RB உதயகுமார் சொன்ன மெசேஜ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai 144: திடீர் பரபரப்பு..! மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல் - காரணம் என்ன?
Madurai 144: திடீர் பரபரப்பு..! மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல் - காரணம் என்ன?
TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் மேலும் 10 பேர் கைது - இலங்கை கடற்படை கைவரிசை
TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் மேலும் 10 பேர் கைது - இலங்கை கடற்படை கைவரிசை
IND Vs ENG: கடைசி டி20-யில் இமாலய வெற்றி...தொடரை தொக்காக தூக்கிய இந்தியா...முழு விவரங்கள்...
கடைசி டி20-யில் இமாலய வெற்றி...தொடரை தொக்காக தூக்கிய இந்தியா...முழு விவரங்கள்...
TVK 2nd Year: 2ம் ஆண்டில் தவெக.. தலைவர்கள் சிலை திறப்பு.. சுடச்சுட உணவு.. களைகட்டிய பனையூர்...
2ம் ஆண்டில் தவெக.. தலைவர்கள் சிலை திறப்பு.. சுடச்சுட உணவு.. களைகட்டிய பனையூர்...
U19 Womens WC Final 2025: U19 மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன்
U19 மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன்
Modi on Delhi Election: எழுதி வச்சுக்கோங்க... பிப்.8-ல் டெல்லியில் பாஜக ஆட்சி அமையும்.. ஃபுல் கான்பிடன்ஸில் மோடி...
எழுதி வச்சுக்கோங்க... பிப்.8-ல் டெல்லியில் பாஜக ஆட்சி அமையும்.. ஃபுல் கான்பிடன்ஸில் மோடி...
Gujarat Road Accident: கும்பமேளாவால் தொடரும் உயிரிழப்புகள்..! 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, 7 பக்தர்கள் பலி
Gujarat Road Accident: கும்பமேளாவால் தொடரும் உயிரிழப்புகள்..! 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, 7 பக்தர்கள் பலி
Erode East Bypoll 2025: யார் அந்த உதிரிகள்? விஜய்? சீமான்? ஈரோட்டிற்கு எவ்வளவு செஞ்சிருக்கோம் தெரியுமா? - ஸ்டாலின்
Erode East Bypoll 2025: யார் அந்த உதிரிகள்? விஜய்? சீமான்? ஈரோட்டிற்கு எவ்வளவு செஞ்சிருக்கோம் தெரியுமா? - ஸ்டாலின்
Embed widget