மேலும் அறிய

லட்சக்கணக்கில் கிடைக்கும் என டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் வழிப்பறி: பட்டாக்காத்தி மணி கைது!

கலசபாக்கம் அருகே டாஸ்மாக் கடை ஊழியரிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம்  கெங்கம்பட்டு கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை பல மாதங்களாக அங்கு செயல்பட்டுவருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் சரவணன் மற்றும் முருகன் ஆகியோர் சேல்ஸ்மேன்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில், கடந்த 24-ம் தேதி இரவு வழக்கம்போல் மது விற்பனை முடிந்ததும் கடையை பூட்டிக்கொண்டு, இருவரும் வீட்டிற்கு புறப்பட தயாராகினர். அப்போது, டாஸ்மாக் கடையின் அருகே அடையாளம் தெரியாத 2 மர்ம ஆசாமிகள் இரண்டு சக்கர வாகனத்தில் அங்கு வந்தனர்.

அதனைத்தொடர்ந்து, சேல்ஸ் மேன்களிடம் திடீரென மர்ம ஆசாமிகள் கத்தியை காட்டி மிரட்டி, அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள் விற்பனை செய்து வைத்திருந்த பணப்பையை பறித்தனர். ஆனால், சேல்ஸ் மேன் சரவணன் பையை தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம ஆசாமிகள், அவரை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு, அவரிடம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சேல்ஸ் மேன்கள் சரவணன் மற்றும் முருகன் ஆகியோர் கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்தனர் அவர்கள் ஓடி வருவதற்குள், மர்ம ஆசாமிகள் 2 நபர்களும் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்று விட்டனர். 

 


லட்சக்கணக்கில் கிடைக்கும் என டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் வழிப்பறி: பட்டாக்காத்தி மணி கைது!

 

 

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், சரவணன் வைத்திருந்த பையில் 20 ஆயிரம் இருந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, மர்ம ஆசாமிகள் தாக்கியதில் காயமடைந்த சரவணனை காவல்துறையினர் மீட்டு காரப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர்  பவன்குமார் உத்தரவின்பேரில் போளூர் காவல்துறை துணை காவல்கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் கடலாடி ஆய்வாளர்  முரளிதரன் மற்றும் காவல்துறையினர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் சைபர் கிரைம் காவல்துறையினர் உதவியுடன் தீவிர விசாரணையில் ஈடுபடடனர்.

 

 


லட்சக்கணக்கில் கிடைக்கும் என டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் வழிப்பறி: பட்டாக்காத்தி மணி கைது!

 

இந்த நிலையில் காவலர்கள் கலசபாக்கம் அருகே அருணகிரிமங்கலம் ரோட்டில் வாகன தணிக்கையில்  ஈடுபட்டனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த செங்கம் தாலுகா ஆலத்தூர் கிராமம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டனை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர் டாஸ்மார்க் கடை ஊழியர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் என்பது தெரிய வந்தது. அவரிடம் வழிப்பறி செய்த ரூ.19 ஆயிரம்,இருசக்கர வாகனம் மற்றும் பட்டாக்கத்தி ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் மணிகண்டனுடன் தூத்துக்குடி மாவட்டம் சேரகுளத்தை சேர்ந்த இசக்கி பாண்டியனுக்கும் வயது (23) தொடர்பு உள்ளது. அவர் கோவையில் டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்த வழக்கில் கோவை மாநகரம் சரவணம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
ABP Premium

வீடியோ

இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
Embed widget