மேலும் அறிய

லட்சக்கணக்கில் கிடைக்கும் என டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் வழிப்பறி: பட்டாக்காத்தி மணி கைது!

கலசபாக்கம் அருகே டாஸ்மாக் கடை ஊழியரிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம்  கெங்கம்பட்டு கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை பல மாதங்களாக அங்கு செயல்பட்டுவருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் சரவணன் மற்றும் முருகன் ஆகியோர் சேல்ஸ்மேன்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில், கடந்த 24-ம் தேதி இரவு வழக்கம்போல் மது விற்பனை முடிந்ததும் கடையை பூட்டிக்கொண்டு, இருவரும் வீட்டிற்கு புறப்பட தயாராகினர். அப்போது, டாஸ்மாக் கடையின் அருகே அடையாளம் தெரியாத 2 மர்ம ஆசாமிகள் இரண்டு சக்கர வாகனத்தில் அங்கு வந்தனர்.

அதனைத்தொடர்ந்து, சேல்ஸ் மேன்களிடம் திடீரென மர்ம ஆசாமிகள் கத்தியை காட்டி மிரட்டி, அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள் விற்பனை செய்து வைத்திருந்த பணப்பையை பறித்தனர். ஆனால், சேல்ஸ் மேன் சரவணன் பையை தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம ஆசாமிகள், அவரை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு, அவரிடம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சேல்ஸ் மேன்கள் சரவணன் மற்றும் முருகன் ஆகியோர் கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்தனர் அவர்கள் ஓடி வருவதற்குள், மர்ம ஆசாமிகள் 2 நபர்களும் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்று விட்டனர். 

 


லட்சக்கணக்கில் கிடைக்கும் என டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் வழிப்பறி: பட்டாக்காத்தி மணி கைது!

 

 

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், சரவணன் வைத்திருந்த பையில் 20 ஆயிரம் இருந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, மர்ம ஆசாமிகள் தாக்கியதில் காயமடைந்த சரவணனை காவல்துறையினர் மீட்டு காரப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர்  பவன்குமார் உத்தரவின்பேரில் போளூர் காவல்துறை துணை காவல்கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் கடலாடி ஆய்வாளர்  முரளிதரன் மற்றும் காவல்துறையினர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் சைபர் கிரைம் காவல்துறையினர் உதவியுடன் தீவிர விசாரணையில் ஈடுபடடனர்.

 

 


லட்சக்கணக்கில் கிடைக்கும் என டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் வழிப்பறி: பட்டாக்காத்தி மணி கைது!

 

இந்த நிலையில் காவலர்கள் கலசபாக்கம் அருகே அருணகிரிமங்கலம் ரோட்டில் வாகன தணிக்கையில்  ஈடுபட்டனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த செங்கம் தாலுகா ஆலத்தூர் கிராமம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டனை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர் டாஸ்மார்க் கடை ஊழியர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் என்பது தெரிய வந்தது. அவரிடம் வழிப்பறி செய்த ரூ.19 ஆயிரம்,இருசக்கர வாகனம் மற்றும் பட்டாக்கத்தி ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் மணிகண்டனுடன் தூத்துக்குடி மாவட்டம் சேரகுளத்தை சேர்ந்த இசக்கி பாண்டியனுக்கும் வயது (23) தொடர்பு உள்ளது. அவர் கோவையில் டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்த வழக்கில் கோவை மாநகரம் சரவணம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்

தலைப்பு செய்திகள்

" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Embed widget