மேலும் அறிய

லட்சக்கணக்கில் கிடைக்கும் என டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் வழிப்பறி: பட்டாக்காத்தி மணி கைது!

கலசபாக்கம் அருகே டாஸ்மாக் கடை ஊழியரிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம்  கெங்கம்பட்டு கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை பல மாதங்களாக அங்கு செயல்பட்டுவருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் சரவணன் மற்றும் முருகன் ஆகியோர் சேல்ஸ்மேன்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில், கடந்த 24-ம் தேதி இரவு வழக்கம்போல் மது விற்பனை முடிந்ததும் கடையை பூட்டிக்கொண்டு, இருவரும் வீட்டிற்கு புறப்பட தயாராகினர். அப்போது, டாஸ்மாக் கடையின் அருகே அடையாளம் தெரியாத 2 மர்ம ஆசாமிகள் இரண்டு சக்கர வாகனத்தில் அங்கு வந்தனர்.

அதனைத்தொடர்ந்து, சேல்ஸ் மேன்களிடம் திடீரென மர்ம ஆசாமிகள் கத்தியை காட்டி மிரட்டி, அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள் விற்பனை செய்து வைத்திருந்த பணப்பையை பறித்தனர். ஆனால், சேல்ஸ் மேன் சரவணன் பையை தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம ஆசாமிகள், அவரை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு, அவரிடம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சேல்ஸ் மேன்கள் சரவணன் மற்றும் முருகன் ஆகியோர் கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்தனர் அவர்கள் ஓடி வருவதற்குள், மர்ம ஆசாமிகள் 2 நபர்களும் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்று விட்டனர். 

 


லட்சக்கணக்கில் கிடைக்கும் என டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் வழிப்பறி: பட்டாக்காத்தி மணி கைது!

 

 

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், சரவணன் வைத்திருந்த பையில் 20 ஆயிரம் இருந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, மர்ம ஆசாமிகள் தாக்கியதில் காயமடைந்த சரவணனை காவல்துறையினர் மீட்டு காரப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர்  பவன்குமார் உத்தரவின்பேரில் போளூர் காவல்துறை துணை காவல்கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் கடலாடி ஆய்வாளர்  முரளிதரன் மற்றும் காவல்துறையினர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் சைபர் கிரைம் காவல்துறையினர் உதவியுடன் தீவிர விசாரணையில் ஈடுபடடனர்.

 

 


லட்சக்கணக்கில் கிடைக்கும் என டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் வழிப்பறி: பட்டாக்காத்தி மணி கைது!

 

இந்த நிலையில் காவலர்கள் கலசபாக்கம் அருகே அருணகிரிமங்கலம் ரோட்டில் வாகன தணிக்கையில்  ஈடுபட்டனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த செங்கம் தாலுகா ஆலத்தூர் கிராமம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டனை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர் டாஸ்மார்க் கடை ஊழியர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் என்பது தெரிய வந்தது. அவரிடம் வழிப்பறி செய்த ரூ.19 ஆயிரம்,இருசக்கர வாகனம் மற்றும் பட்டாக்கத்தி ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் மணிகண்டனுடன் தூத்துக்குடி மாவட்டம் சேரகுளத்தை சேர்ந்த இசக்கி பாண்டியனுக்கும் வயது (23) தொடர்பு உள்ளது. அவர் கோவையில் டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்த வழக்கில் கோவை மாநகரம் சரவணம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்

தலைப்பு செய்திகள்

ஒரே ஒரு வார்த்தை..நண்பனின் மனைவியை தப்பாக பேசிய பிளஸ் - 2 மாணவனுக்கு நேர்ந்த சோகம்
ஒரே ஒரு வார்த்தை..நண்பனின் மனைவியை தப்பாக பேசிய பிளஸ் - 2 மாணவனுக்கு நேர்ந்த சோகம்
ஆக்ரா சூட்கேஸ் விவகாரம்: பிரியாணி பாத்திரத்தில் மனிதக் கறி! கூடுவாஞ்சேரி வீட்டில் காத்திருந்த பயங்கரம்!
ஆக்ரா சூட்கேஸ் விவகாரம்: பிரியாணி பாத்திரத்தில் மனிதக் கறி! கூடுவாஞ்சேரி வீட்டில் பயங்கரம்!
டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!
டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget