மேலும் அறிய

பக்கத்து நில உரிமையாளரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற நபர் மின்சாரம் தாக்கி பலி - அலறல் சத்தம் கேட்டு அருகே வந்த உறவினரும் உயிரிழந்த சோகம்

’’என் கண்ணில் மின்சாரம் பட்டபோது நான் அலறி அடித்து கொண்டு எழுந்து ஏழுமலையை தள்ளி விட்டு அலறினேன் அப்போது அவர் மீது மின்சார ஒயர் பட்டு அங்கேயே உயிரிழந்தார்’’

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த உள்ள சொரகொளத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஏழுமலைக்கு (45)  இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (26)  என்பவர் படித்து விட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இருவரின் நிலமும் அருகருகே உள்ளதால் ஏழுமலை, சரண்ராஜ் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் சரண்ராஜ் வயலுக்கு அருகே உள்ள கொட்டையில் உறங்குவது வழக்கம். இதனை தெரிந்து கொண்ட ஏழுமலை, சரண்ராஜை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.  

பக்கத்து நில உரிமையாளரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற நபர் மின்சாரம் தாக்கி பலி - அலறல் சத்தம் கேட்டு அருகே வந்த உறவினரும் உயிரிழந்த சோகம்

நேற்று நள்ளிரவில் உறங்கி கொண்டிருந்த சரண்ராஜின் கண்ணில் மின்சார ஒயரை வைத்து ஏழுமை கொலை செய்ய முயற்சித்த நிலையில், ஷாக் அடித்து சரண்ராஜ் அலறியதில் ஏழுமலை கையில் வைத்திருந்த ஒயர் அவரின் கை மீதே பட்டு சம்பவ இடத்திலேயே ஏழுமலை உயிரிழந்தார்.  சரண்ராஜின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது உறவினர் ரேணுகோபாலும் (33) மின்சார ஒயரை மிதித்த காரணத்தால் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மின்சாரம் பாய்ந்ததால் உடல் நிலை பாதிக்கப்பட்ட சரண்ராஜ் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கலசபாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பக்கத்து நில உரிமையாளரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற நபர் மின்சாரம் தாக்கி பலி - அலறல் சத்தம் கேட்டு அருகே வந்த உறவினரும் உயிரிழந்த சோகம்
உயிரிழந்த ரேணுகோபால் 

இச்சம்பவம் குறித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் சரண்ராஜ் கூறுகையில்:-  நான் தினந்தோறும் என்னுடைய வீட்டில் தான் உறங்குவேன். இன்று ஒருநாள் மட்டும் நிலத்தில் உள்ள கொட்டகையில் இரவு தூங்கினேன். அப்போது என்னுடைய பக்கத்து நிலத்துக்காரர் ஏழுமலை முன்விரோத காரணமாக என்னை கொலை செய்ய முயற்சி செய்தார். எங்களுக்கும் பக்கத்து நிலத்துகாரர் ஏழுமலைக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு நிலத்தகராறு ஏற்பட்டது இதனால் நிலத்தின் மீது வழக்கு உள்ளது. இதனால் ஏழுமலை அவரது நிலத்தில் விவசாயம் செய்யாத நிலையில் நாங்கள் மட்டும் எங்கள் நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தோம்.

பக்கத்து நில உரிமையாளரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற நபர் மின்சாரம் தாக்கி பலி - அலறல் சத்தம் கேட்டு அருகே வந்த உறவினரும் உயிரிழந்த சோகம்

இந்த பொறாமையால் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் நான் உறங்கிக் கொண்டிருந்தேன். பக்கத்து நிலத்துகாரர் ஏழுமலை கொலை செய்ய மின்சார ஒயர் முலம் முயற்சி செய்தார். என் கண்ணில் மின்சாரம் பட்டபோது நான் அலறி அடித்து கொண்டு எழுந்து ஏழுமலையை தள்ளி விட்டு அலறினேன் அப்போது அவர் மீது மின்சார ஒயர் பட்டு அங்கேயே உயிரிழந்தார். மேலும் காப்பாத்த வந்த ரேணுகோபாலும் உயிரிழந்ததாக கூறினார்கள். நான் அங்கேயே மயக்கம் அடைந்து விட்டேன். என்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு என்னிடம் தெரிவித்தார் என்று கூறினார். தூங்கிக்கொண்டு இருந்த நபரை மின்சாரம் கொண்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget