மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime: மதுபோதையில் மனைவி என நினைத்து மகனை கொன்ற தந்தை - குடிக்க பணம் தராதால் தந்தை வெறிச்செயல்
நள்ளிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த அவர், மனைவி என்று நினைத்துக் கொண்டு அங்கு தூங்கிக் கொண்டிருந்த மகன் அர்ஜுன் தலையில் குழுவிக் கல்லை தூக்கி போட்டார்.
![Crime: மதுபோதையில் மனைவி என நினைத்து மகனை கொன்ற தந்தை - குடிக்க பணம் தராதால் தந்தை வெறிச்செயல் The father attacked the child with a stone, thinking it was his wife, near Panrutti Crime: மதுபோதையில் மனைவி என நினைத்து மகனை கொன்ற தந்தை - குடிக்க பணம் தராதால் தந்தை வெறிச்செயல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/20/668cdeeef691ff2f73c29445a64d60e91658293540_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
முருகன்
பண்ருட்டி அருகே மதுபோதையில் மனைவி என நினைத்து மகனின் மீது குழவி கல்லை போட்டு கொன்ற தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிபாளையம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் முருகன். இவர் செங்கல் சூளையில் கல் அறுக்கும் தொழிலாளி ஆவார். திருமணமான இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மகன் அர்ஜுன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான முருகன், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுஅடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில், நேற்று இரவு முருகன் மதுகுடிக்க பணம் கேட்டு மீண்டும் தகராறு செய்தார். இதனால் மனைவியுடன் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த முருகன் வீட்டைவிட்டு வெளி சென்றார். பிறகு நள்ளிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த அவர், மனைவி என்று நினைத்துக் கொண்டு அங்கு தூங்கிக் கொண்டிருந்த மகன் அர்ஜுன் தலையில் குழவிக் கல்லை தூக்கி போட்டார். இதனால் பலத்த காயம் அடைந்த அர்ஜுன் அதே இடத்தில் பரிதாபமாக துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
![Crime: மதுபோதையில் மனைவி என நினைத்து மகனை கொன்ற தந்தை - குடிக்க பணம் தராதால் தந்தை வெறிச்செயல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/20/5a2f17aa43e43978a132808a94c0f9d41658293681_original.jpg)
இதுபற்றிய தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் (பொறுப்பு), சப் இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் தப்பி ஓடிய முருகனை போலீசார் தேடி வருகின்றனர். மதுபோதையில் தந்தையே மகனை கல்லால் தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
கிரிக்கெட்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion