மேலும் அறிய

சமாதானம் பேச அழைத்து சரமாரியாக வெட்டிய நண்பன் - தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்

அலெக்ஸ்பாண்டியன் தனது அண்ணனை பைக்கில் அழைத்து செல்வதை பார்த்ததால் சசிக்குமார் சந்தேகம் அடைந்து சிறிது நேரத்தில் தனது பைக்கில் சென்று பார்த்துள்ளார். 

தஞ்சாவூர்: நமக்குள் ஏற்பட்ட சண்டையை பேசி தீர்த்து சமாதானமாக செல்வோம் என்று கூறி  விவசாய தொழிலாளியை அழைத்துச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சொக்கநாதபுரத்தை சேர்ந்த தோழப்பன் என்பவரின் மகன் சரவணன் (45). விவசாய கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த ஞானபாண்டியன் என்பவரின் மகன் அலெக்ஸ்பாண்டியன் (25).  விவசாய கூலி தொழிலாளி. சரவணனும், அலெக்ஸ்பாண்டியன் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். மூழ்காத ஷிப்பே ப்ரெண்ட் ஷிப்தான் என்று பாட்டு பாடாத குறையாக எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது, மது அருந்தினாலும் ஒன்றாக சென்று அருந்துவது என்று இருந்து வந்துள்ளனர்.

சரவணனும், அலெக்ஸ்பாண்டியனும் அவ்வப்போது ஒன்றாக மது அருந்தி வருவது வழக்கம். இதில் சமீபத்தில் போதையில் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ப்ரெண்ட் ஷிப் மூழ்கிய ஷிப் ஆக மாறியது. எதிர் எதிரே வந்தாலும் இருவரும் பேசிக் கொள்வதில்லை. அவ்வப்போது சரவணன் மது அருந்தி விட்டு, அலெக்ஸ் பாண்டியனை திட்டி வந்தால் வாய்த்தகராறு, முன்விரோதமாக மாறி விட்டதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து கடந்த 3ம் தேதி, சரவணன் வீட்டிற்கு அலெக்ஸ்பாண்டியன் வந்துள்ளார். நல்ல நண்பர்களாக இருந்தோம். இப்போது நாம் பேசிக் கொள்வதே இல்லை. எனவே  இருவரும் சமாதானமாக சென்று விடுவோம் என கூறி, மீண்டும் மது அருந்த பைக்கில்அழைத்து சென்றுள்ளார். இவர்கள் இருவரும் பைக்கில் செல்வதை பட்டுக்கோட்டை தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும்,  சரவணனின் தம்பி சசிக்குமார் (44) பார்த்துள்ளார்.

அலெக்ஸ்பாண்டினுக்கும், சரவணனுக்கும் ஏற்கனவே மது குடிக்கும்போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது சசிக்குமாருக்கும் தெரியும். இப்போது திடீரென்று அலெக்ஸ்பாண்டியன் தனது அண்ணனை பைக்கில்  அழைத்து செல்வதை பார்த்ததால் சசிக்குமார் சந்தேகம் அடைந்து அலெக்ஸ்பாண்டியன் சென்ற சிறிது நேரத்தில் தனது பைக்கில் சென்று பார்த்துள்ளார். 

அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத ஆற்றங்கரை பகுதியில், அலெக்ஸ்பாண்டியனும், சரவணனும் தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்ததை சசிக்குமார் பார்த்துள்ளார். அப்போது திடீரென்று அலெக்ஸ் பாண்டியன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரவணனை தலை, முகம், கை என்று சரமாரியாக வெட்டியுள்ளார். இதை பார்த்து சத்தம் போட்டப்படி சசிக்குமார் ஓடி வந்ததால் அலெக்ஸ்பாண்டியன் அரிவாளோடு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். அரிவாள் வெட்டு விழுந்து படுகாயமடைந்த தன் அண்ணன் சரவணனை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சசிக்குமார். சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சரவணன் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுகுறித்து சசிக்குமார் சேதுபாவாசத்திரம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அலெக்ஸ்பாண்டியனை  கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

" கதவைத் திறந்து பார்த்த பேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி " மாயமான நகைகள் ?
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Embed widget